என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து
    X

    தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து

    • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர் முகமது சயாஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருவனந்தபுரம் புறப்பட்டார்.

    தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் இருந்து அவர்கள் புறப்பட்டனர். புலியூர்குறிச்சி என்ற இடத்தில் சென்ற போது, எதிரே ஒரு கார் வந்தது.அந்தக் கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் விக்னேஷ் மற்றும் முகமது சயாஸ் தூக்கி வீசப்ப ட்டனர். பலத்த காயத்துடன் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு 2 பேருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று இரவு திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளி த்தும் பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தக்கலை போலீசில் முகமது சயாஸ் புகார் கொடுத்தார். போலீ சார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான காரை பறிமுதல் செய்த தோடு அதனை ஒட்டி வந்த கேரளபுரம் சரல்விளையைச் சேர்ந்த விேனாத் (29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×