search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sweets"

    • கேரளாவில் எந்த விசேஷம் என்றாலும் பாலடை பிரதமன் கண்டிப்பாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - ஒரு கப்

    பால் - ஒன்றரை லிட்டர்

    சர்க்கரை - ஒரு கப் (இனிப்பு விரும்புபவர்கள் தேவைக்கு ஏற்ப அதிகம் சேர்க்கலாம்)

    தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

    வாழையிலை - 4

    செய்முறை

    பச்சரிசியை நன்றாக கழுவி ஒன்றரை மணி நேரம் ஊற வைத்து, பின் ஒரு துணியில் பரப்பி உலற வைக்கவும். அரிசியில் ஈரம் இல்லாமல் இருக்கும் போது எடுத்து மிக்ஸியில் நைசாக பொடிக்கவும். பொடித்த அரிசியை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும்....

    சலித்த மாவில் சிறிது தண்ணீரும், தேங்காய் எண்ணெயும் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். கலந்த மாவை வாழையிலையில் பரவலாக கரண்டியால் ஊற்றவும். வாழையிலையை சுருட்டி நூலால் கட்டவும். கொதிக்கும் தண்ணீரில் அமிழ்த்தி 30 நிமிடம் வைத்து வேக விடவும்.

    அவை வேகும் சமயத்தில் ஒரு அகண்ட பாத்திரத்தில் பாலை காய்க்கவும். பால் பாதியாக சுண்டியதும் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து கிளறவும். பால் லேசாக நிறம் மாறி இருக்கும்.

    அந்த சமயத்தில் வாழையிலைகளை வெளியில் எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு வாழையிலைகளைப் பிரிக்கவும். கிடைக்கும் அடைகளை நன்றாக நீரில் அலசி பொடிபொடியாக கொத்தி வைத்து கொள்ளவும்.

    கொத்திய அடைகளை சுண்டிய பாலில் சேர்த்து கிளறவும். 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். இறக்கும் போது சற்று தளர்வாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆறியதும் சரியான பக்குவத்தில் இருக்கும்.

    இப்போது தித்திக்கும் பாலடை பிரதமன் ரெடி....

    • சிவப்பரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • சிவப்பரிசியில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அரிசி - 5 டேபிள்ஸ்பூன்,

    பால் - ஒரு லிட்டர்,

    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,

    பாதாம் - 10 (துருவிக் கொள்ளவும்),

    சர்க்கரை - தேவையான அளவு.

    செய்முறை:

    சிவப்பு அரிசியை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.

    பாலுடன் உடைத்த அரிசியை சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்து வரும்போது, அடுப்பை 'சிம்'மில் வைத்து 10 நிமிடம் வேகவிடவும்.

    பின்னர் சர்க்கரை சேர்க்கவும். எல்லாம் நன்கு சேர்ந்து வரும்போது ஏலக்காய்த்தூள், துருவிய பாதாம் சேர்த்து இறக்கவும்.

    இதை சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.

    • குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய செலவோ குறைவு. சுவையோ அதிகம்.

    தேவையான பொருட்கள்:

    பேக்கிங் கொக்கோ பவுடர் - ¼ கப்

    சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்

    சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்

    பால் - 1½ கப்

    வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்

    துருவிய சாக்லேட் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை கொட்டி கலக்கவும்.

    பின்பு அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்கவும்.

    இந்தக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும்.

    கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும்.

    பின்னர் அதை கப்களில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.

    நன்றாகக் குளிர்ந்ததும் துருவிய சாக்லேட் மேலே தூவி பரிமாறவும்.

    சூப்பரான சாக்லேட் புட்டிங் ரெடி.

    • ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
    • இந்த ரெசிபியை செய்ய 20 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    கிரீன் ஆப்பிள் - 2

    சர்க்கரை - 1 கப்

    தண்ணீர் - அரை கப்

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    சிவப்பு கலர் பவுடர் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    ஆப்பிளை விதை நீக்கி விட்டு நீளமான வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும். வெட்டிய ஆப்பிளை ஈரம் இல்லாமல் நன்றாக துணியால் துடைத்து கொள்ளவும்.

    ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

    சர்க்கரை நன்றாக கரைந்து பாகு பதம் வரும் போது சிறிது பாகை எடுத்து தண்ணீரில் ஊற்றினால் பாகு கரையால் கையால் உருட்டும் பதத்திற்கு வரும். அந்த சமயத்தில் சிவப்பு கலர் பவுடர் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

    அடுத்து ஒவ்வொரு ஆப்பிள் வில்லைகளாக சர்க்கரை பாகில் முக்கி எடுத்து பட்டர் பேப்பரில் வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    இதை 2 மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.

    இப்போது சூப்பரான ஆப்பிள் மிட்டாய் ரெடி.

    இதே போல் உங்களுக்கு விருப்பமான பழங்களில் செய்யலாம்.

    • ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. பொதுச்செய லாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு இன்றுதள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவி ஏற்றுக்கொ ண்டார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.அதேபோல் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்ஜிஆர். இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள எம்ஜிஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணைச்செ யலாளர் பூலுவப்பட்டி பாலு, இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர் ,பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கருணாகரன், ஹரிஹரசுதன், கண்ணன், திலகர் நகர் சுப்பு, தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இந்த புட்டிங் செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உடனே செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிவப்பு அவல் - 1 கப்

    நாட்டுச்சர்க்கரை - தேவைக்கேற்ப

    தேங்காய் துருவல் - கால் கப்

    செவ்வாழைப்பழம் - 2

    செய்முறை

    சிவப்பு அவலை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். அவல் நன்றாக குழைய ஊறக்கூடாது.

    ஊறிய அவலை நன்றாக தண்ணீரை பிழிந்து எடுத்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நாட்டுச்சர்க்கரை, தேங்காய் துருவல், செவ்வாழைப்பழத்தை போட்டு நன்றாக பிசைத்து உருண்டைகளாக பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பு அவல் வாழைப்பழ புட்டிங் ரெடி.

    • வைத்தீஸ்வரன் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் பொது மக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது

    சீர்காழி:

    தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் அறிவுறுத்தலின்படி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான சுவாமிநாதன் ஏற்பாட்டில் 500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், பேரூராட்சி செயலாளர் அன்புச்செழியன், பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், அவை தலைவர் சந்திரமூர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த், துணை செயலாளர் இராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி கமலநாதன், பேரூர் கழகப் பொருளாளர் ராஜசேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதியில் திமுக பேரூராட்சி கழகம் சார்பில் திமுகவின் கொடியை ஏற்றி பொது மக்களுக்கு தென்னங்கன்று மற்றும் இனிப்புகள் வழங்கி தமிழக முதல்வரின் 70 வது பிறந்தநாளை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    • எஸ்.பி. பொன்னையா நாடாரின் உருவப்படத்தை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார்.
    • விழாவில் 100 மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    நெல்லை - திருச்செந்தூர் இடையிலான ரெயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தன.

    படத்திறப்பு விழா

    இந்த ரெயில் வழித்தடத்தை அமைக்க கடும் முயற்சிகளை மேற்கொண்ட சாதனையாளரான ஆறுமுகநேரி மேல வீடு எஸ்.பி. பொன்னையா நாடார் படத்திறப்பு விழா ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் நடைபெற்றது. ரெயில்வே வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் ரா.தங்கமணி தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் அ.கல்யாணசுந்தரம், ரெயில்வே வளர்ச்சி குழு செயலாளர் அமிர்தராஜ், பொருளாளர் பி.எஸ்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா குழு அமைப்பாளர் முருகேச பாண்டியன் வரவேற்று பேசினார்.எஸ்.பி. பொன்னையா நாடாரின் உருவப்படத்தை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார். விழாவில் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சுகுமார், சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர்களான பிரகாஷ், ஒயிட் பீல்டு, காண்ட்ராக்டர்கள் கே.சிவக்குமார், எஸ்.வெற்றிவேல், ஆறுமுகநேரி அரிமா சங்க பட்டய தலைவர் எம்.எஸ்.எஸ்.சண்முக வெங்கடேசன், தலைவர் ஜே.நடராஜன், மாவட்ட தலைவர்கள் ஏ.சீனிவாசன், எஸ்.கணேசமூர்த்தி, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் குமரன், உதயசுந்தர், மாரி தங்கம், ஆறுமுகநேரி உப்பு தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் லட்சுமணன், பக்தஜன சபை பொருளாளர் அரிகிருஷ்ணன், சைவ வேளாளர் சங்க செயலாளர் முருகன், பா.ஜ.க மாவட்ட மகளிர் பிரிவு செயலாளர் பாப்பா, மேல வீடு கண்ணன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வரவேற்பு

    முன்னதாக நெல்லையிலிருந்து வந்த ரெயிலுக்கு ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் வரவேற்பு பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். பயணிகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நெல்லை-திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்த எஸ்.பி.பொன்னையா நாடாரின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. தொடர்ந்து இந்து மற்றும் சரஸ்வதி பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.இதனை பொன்னையா நாடாரின் குடும்பத்தின் சார்பில் தொழிலதிபர் ராம்பிரசாத் வழங்கினார்.நிறைவாக ரெயில் நிலைய அலுவலர் பாபா ராஜ்குமார் டேவிட் முன்னிலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதேபோல் காயல்பட்டினம் ரெயில் நிலையத்திலும் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது.விழா விற்கான ஏற்பாடுகளை ஆறுமுகநேரி ெரயில்வே வளர்ச்சி குழு நிர்வாகிகள், மேலவீடு ராம்பிரசாத், தொழிலதிபர் எஸ்.ஆர்.எஸ்.சுரேஷ்குமார் உள்பட பலர் செய்திருந்தனர்.

    • இன்று சிவபெருமானுக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
    • இன்று சிவபெருமானுக்கு நைவேத்தியம் படைக்க இந்த ரெசிபி செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    ஜவ்வரிசி - கால் கப்

    தண்ணீர் - ஒரு கப்

    நெய் - ஒரு தேக்கரண்டி

    முந்திரி, திராட்சை - தேவைக்கு

    சர்க்கரை - அரை கப்

    பால் - 1 கப் - 1 1/2 கப்

    ஏலக்காய் தூள் - தேவைக்கு

    பாதாம், பிஸ்தா - தேவைக்கு

    செய்முறை:

    பாதாம் பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும்.

    முதலில் ஜவ்வரிசியை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் நன்றாக வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை போட்டு வறுத்து எடுக்கவும்.

    அதே பாத்திரத்தில் நன்றாக வெந்து இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

    சர்க்கரை நன்றாக கரைந்ததும் கடைசியாக பால் சேர்க்கவும்.

    இத்துடன் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

    பரிமாறும்போது பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஜவ்வரிசி பாயாசம் ரெடி.

    • எள்ளில் இரும்புச்சத்து, கால்சியம், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
    • வேர்க்கடலையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    வறுத்த வேர்க்கடலை - 1 கப் 

    எள் - அரை கப் 

    உலர்ந்த தேங்காய் பொடி - 4 டேபிள் ஸ்பூன் 

    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

    பால் பவுடர் - 6 டேபிள் ஸ்பூன்

    நெய் - 4 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - முக்கால் கப்

    தண்ணீர் - 1 கப்

    செய்முறை

    எள்ளை வெறும் கடாயில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் வறுத்தெடுத்து கொள்ளவும். ஆறிய பின் இதனை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    அடுத்ததாக வறுத்த வேர்க்கடலையும் பொடியாக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடித்த வேர்க்கடலை மற்றும் எள்ளுடன் உலர்ந்த தேங்காய் பொடி சேர்க்கவும். இவை மூன்றையும் ஒன்று சேர நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.

    பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி லேசாக சூடானவுடன் கலந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை சேர்த்து கிளறவும்.

    நெய் எல்லாம் உறிஞ்சி கலவை நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து, பால் பவுடர் மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

    மற்றொரு கடாயில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும். இதனுடன் வறுத்து வைத்துள்ள கலவை சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறவும்.

    இவை எல்லாம் ஒன்று சேர்ந்து நன்கு திரண்டு வரும்போது, இதனை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.

    ஒரு மணி நேரத்திற்கு பிறகு பர்ஃபியை துண்டுகள் போட்டு பரிமாறலாம்.

    குறிப்பு: உலர்ந்த தேங்காய் பொடிக்கு பதிலாக தேங்காய் துருவலை ஈரம் போகும் வரை வறுத்தும் பயன்படுத்தலாம்.

    • அரிசியைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ளது.
    • சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம் கம்பு. 

    தேவையான பொருட்கள்:

    கம்பு - 2 கப்

    வெல்லம் - ½ கப்

    தேங்காய்த் துருவல் - ¼ கப்

    முந்திரி (பொடிதாக நறுக்கியது) - ¼ கப்

    வெந்நீர் - தேவைக்கு ஏற்ப

    உப்பு - ஒரு சிட்டிகை

    நெய் - தேவைக்கு

    ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்

    வாழை இலை - 1

    செய்முறை:

    * கம்பை சுத்தப்படுத்தி 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஈரம் போகும் வரை நிழலில் உலர்த்தவும். பின்பு பொடியாக திரித்துக் கொள்ளவும். அந்த மாவை நன்றாக சலித்து எடுக்கவும்

    * அகலமான பாத்திரத்தில் கம்பு மாவைக் கொட்டி அதனுடன் தேங்காய்த்துருவல், ஏலக்காய் பொடி, நறுக்கிய முந்திரிசேர்த்துக் கலக்கவும்.

    * சிறிதளவு தண்ணீரில் உப்பைக் கரைத்து மாவில் தெளித்து மீண்டும் கிளறவும்.

    * மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்றி கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு தயார் செய்யவும்

    * இப்போது மாவை சப்பாத்தியின் அளவுக்கேற்ப உருண்டையாக உருட்டி வைக்கவும்.

    * வாழை இலையில் சிறிது நெய் தடவி ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து ரொட்டியாகத் தட்டவும்

    * அதை தோசைக் கல்லில் போட்டு தேவையான அளவு நெய் ஊற்றி இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.

    குறிப்பு: வெல்லக் கரைசலும், கம்பு மாவும் நன்றாகக் கலந்தால் மட்டுமே ரொட்டியில் இனிப்பு சரியாக இருக்கும். கம்பு மாவு முழுமையாக வேக சிறிது நேரம் ஆகும் என்பதால் நிதானமாக சுட்டு எடுக்க வேண்டும்.

    • குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
    • சர்க்கரை நோயாளிகளும் இந்த தோசையை சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,

    வெல்லம் (பொடித்தது) - 1 கப்,

    பச்சரிசி மாவு - கால் கப்,

    தேங்காய் (துருவியது) - கால் மூடி,

    நன்கு பழுத்த வாழைப்பழம் - 2

    ஏலக்காய் - 4,

    நெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    வாழைப்பழத்தை நன்றாக மசித்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும்.

    பின்னர் கோதுமை மாவு, மசித்த வாழைப்பழம், வெல்லம் நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றி நெய் ஊற்றி வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.

    வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.

    ×