search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் அ.தி.மு.க.வினர்  பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
    X

    முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்ஜிஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

    திருப்பூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    • ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. பொதுச்செய லாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு இன்றுதள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவி ஏற்றுக்கொ ண்டார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.அதேபோல் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்ஜிஆர். இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள எம்ஜிஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணைச்செ யலாளர் பூலுவப்பட்டி பாலு, இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர் ,பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கருணாகரன், ஹரிஹரசுதன், கண்ணன், திலகர் நகர் சுப்பு, தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×