search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sweets"

    • மாம்பழத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று மாம்பழ ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தித்திப்பான பழுத்த மாம்பழம் - 1,

    சர்க்கரை - 1 கப்,

    மாம்பழ எசன்ஸ் - சில துளிகள்,

    இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்,

    எலுமிச்சை பழம் - 1.

    செய்முறை:

    மாம்பழத்தை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். (விருப்பப்பட்டால் சிறிய துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளலாம்.

    அடுப்பில் அடி கனமான பாத்திரம் (அ) நான்ஸ்டிக் கடாயை வைத்து மாம்பழத்தை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து 25 நிமிடங்கள் மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.

    மாம்பழ கலவை திக்கான பதம் வரும் போது இஞ்சி துருவல், மாம்பழ எசன்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி விடவும்.

    இஞ்சி பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    சிறிது ஜாமை ஒரு தட்டில் ஊற்றினால் அது ஓடாமல் நெகிழ இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் (ஜாம் போன்றவை செய்யும்போது அடுப்பை 'சிம்'மில் வைத்தால் அடிபிடிக்காது).

    நன்றாக ஆறியதும் கண்ணாடி டப்பாவில் போட்டு வைக்கவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ ஜாம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பல வகையான அல்வா சாப்பிட்டு இருப்பீங்க.
    • இன்று வாழை இலையை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வாழை இலை - 2

    சோள மாவு - கால் கப்

    சர்க்கரை - கால் கப்

    முந்திரி - தேவையான அளவு

    பூசணி விதை - 1 டேபிள் ஸ்பூன்

    எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்

    நெய் - 6 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * இளசாகவோ, முற்றியதாகவோ இல்லாமல் நடுத்தரமான இரண்டு வாழை இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி விழுதாக அரைக்கவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி மற்றும் பூசணி விதைகளை தனித்தனியாகப் போட்டு, நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    * அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வாழை இலை விழுதைக் கொட்டி அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    * சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும்.

    * வாழை இலை விழுது வதங்கி கெட்டியானதும், அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    * இப்போது அதில் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றிக் கிளறி, கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    * இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, பூசணி விதையை மேலே தூவி அலங்கரிக்கவும்.

    * இப்போது சூப்பரான வாழை இலை அல்வா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கோதுமை ரவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
    • கோதுமை ரவையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1/4 கப்

    வெல்லம் - 1/2 கப்

    பால் - 1 கப்

    உப்பு - 1 சிட்டிகை

    நெய் - 1 தேக்கரண்டி

    முந்திரிப்பருப்பு - தேவையான அளவு

    ஏலக்காய் - 1

    செய்முறை

    குக்கரில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    அதே குக்கரில் கோதுமை ரவையை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்கவும்.

    அடுத்து அதில் கப் - 1 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3-4 விசில் மிதமான தீயில் வேக வைக்கவும்.

    கோதுமை ரவை மிருதுவாக வெந்தவுடன், வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்து கரைக்கவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் வெந்த கோதுமை ரவையுடன் வடிகட்டி சேர்த்து கலக்கவும். 1/2 கப் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.

    குறைந்த தீயில் 5 நிமிடம் பாகு சுண்டும் வரை கொதிக்க விடவும்.

    பாலை, மெதுவாக சேர்த்து கலக்கவும்.

    ஏலக்காய், வறுத்த முந்திரி சேர்த்து 2 நிமிடம் சூடு செய்யவும்.

    அடிபிடிக்காமல் கலந்து கொண்டே இருக்கவும். ஆரிய பிறகு கெட்டியாகும் அதனால் அதற்கு தகுந்தவாறு அடுப்பை அணைக்கவும்.

    இப்போது சூப்பரான கோதுமை ரவை பாயாசம் ரெடி.

    தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.

    பாயசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், சிறிது காய்ச்சிய பால் சேர்த்து சரி செய்து கொள்ளவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    https://www.maalaimalar.com/cinema

    • அன்னாசிப்பழத்தில் வைட்டமின் 'சி' சத்து நிறைந்துள்ளது.
    • இன்று இந்த அல்வா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    அன்னாச்சிப் பழத்துண்டுகள் - 1 கப்

    பால் - 1 கப்

    சர்க்கரை - 1 கப்

    ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி

    உப்பு - 1 சிட்டிகை

    நெய் - 3/4 கப்

    கேசரிப் பவுடர் - 1/4 தேக்கரண்டி

    தண்ணீர் - 1/4 டம்ளர்

    செய்முறை :

    முதலில் அன்னாசிப்பழத் துண்டுகளை ஆவியில் வேக வைக்கவும்.

    ஆறியபின் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

    தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கம்பிப்பதம் வரும் வரை கிளற வேண்டும்.

    இதில், அரைத்து வைத்துள்ள அன்னாசிப்பழ விழுது, ஒரு சிட்டிகை உப்பு, நெய், ஏலப்பொடி, கேசரிபவுடர், நெய்யில் வறுத்த திராட்டை ஆகியவை சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

    அன்னாச்சிப்பழ ஜூஸ் எடுத்து தண்ணீருக்குப் பதில் ஜூஸை ஊற்றி, இதே முறையில் அல்வா தயார் செய்யலாம்.

    இப்போது சூப்பரான அன்னாசி அல்வா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
    • கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    ராஜபாளையம்

    ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராஜபாளையம் மதுரைக்கடைத் தெருவில் கொடியேற்று விழா நடந்தது. நகரச்செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். நகரத் துணைச் செயலாளர்கள் அக்பர்அலி, லிங்கம், பூபதி, பொருளாளர் பிச்சைக்கனி, மாவட்டப்பிரதிநிதி புஷ்பவேல், குருமூர்த்தி முன்னிலை வகித்தனர். சாத்தூர் எம்.எல்.ஏ.ரகுராமன், மூத்த நிர்வாகி விநாயகமூர்த்தி, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். முன்னதாக விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ராமர், கிழக்கு ஒன்றியச் செயலாளர் வில்லிசை மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், தலைமைக்கழகச் சொற்பொழிவாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இருட்டுக்கடை அல்வா ருசிக்கு பெயர் போனது.
    • இந்த அல்வாவின் அசாத்திய ருசிக்கு தாமிரபரணி தண்ணீரும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 2 கப்

    நெய் - 200 மி.லி

    சர்க்கரை - 4 ½ கப்

    வறுத்த முந்திரி – 20

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்.

    மாவை சாஃப்டாக பிசைந்த பின்பு அதில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி இந்த கலவையை 6 மணி நேரம் ஊற வைக்கவும். கலவை நன்கு ஊறிய பின்பு மாவை கையால் எடுத்து நன்கு அழுத்தி நீரில் அப்படியே கரைத்து விடவும்.

    ஊற வைத்துள்ள தண்ணீரில் மாவு முழுவதும் கரைந்த பின்பு அதை வடிக்கட்டி பாலை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த பாலை புளிக்க செய்யவும். அதற்கு பாலை பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் மூடி வைக்கவும்.

    மறுநாள் காலையில் பாத்திரத்தைத் திறந்து பார்க்கும்போது பால் நன்கு புளித்து மேலே ஏடு மிதக்கும். அதை மட்டும் கரண்டியால் நீக்கிவிட்டு பாலை வடிக்கட்டவும். இப்போது அல்வா செய்வதற்கான திக்கான பால் தயார்.

    அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து அதில் வடித்து வைத்திருக்கும் பாலை ஊற்றவும்.

    சரியாக 15 நிமிடத்திற்கு அடுப்பை மிதமான சூட்டில் வைத்துவிட்டு பாலை கைவிடாமல் கிண்டவும். கரண்டியால் தொடர்ந்து கிளறினால் தான் கெட்டி தட்டாமல் சரியான பதத்தில் அல்வா வரும்.

    அடுத்து 3 கப் சர்க்கரையை இதில் சேர்த்து நன்கு கரையும் வரை கிளறவும்.

    இரண்டும் நன்கு கலந்து அல்வா பதத்திற்கு வந்தபின்பு கடாயை இறக்கி வைக்கவும்.

    சர்க்கரை பாகு

    திருநெல்வேலி அல்வா செய்முறையில் சர்க்கரை பாகு தயார் செய்வது மிக மிக முக்கியம். அல்வாவுக்கு நிறத்தைக் கொடுப்பதே சர்க்கரை பாகு தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

    செய்முறை

    முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 5 ஸ்பூன் சர்க்கரையை சேர்க்கவும். மிதமான தீயில் சமைக்கவும். சூட்டில் சர்க்கரை கரைந்து பாகு போல் உருகி வரும். கெட்டி பதம் தட்டாமல் இருக விடாமல் கிளறவும். தண்ணீர் சேர்க்காமல் தயாரிக்கப்படும் இந்த சர்க்கரை பாகு நிறம் மாறிக் கொதிக்க தொடங்கியதும் இறக்கி விடவும்.

    திருநெல்வேலி அல்வா

    இப்போது மாவு இருக்கும் கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரை பாகு சேர்த்து கிளறவும். வெள்ளையாக இருக்கும் மாவு நிறம் மாறி அல்வா நிறத்திற்கு வரும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.

    இப்போது நெய்யை ஊற்றவும். கரண்டியால் அல்வாவை கிளறி கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை சேர்க்கவும். இறுதியாக வறுத்த முந்திரியை சேர்த்து இறக்கினால் போதும். சுவையான திருநெல்வேலி அல்வா தயார்.

    அல்வா தயாரானதும் அதை கையால் தொட்டு பார்க்கவும். கையில் ஒட்டாமல் வந்தால் சரியான பதம் என அர்த்தம்.

    இப்போது சூப்பரான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு சத்தான ரெசிபிகளை செய்து கொடுப்பது உடலுக்கு நல்லது.
    • பாசிப்பயறில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாசிப்பயறு - அரை கப்

    கருப்பட்டி - 300 கிராம்

    சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்

    ஏலக்காய் - 3

    உப்பு - கால் டீஸ்பூன்

    செய்முறை:

    பாசிப்பயறை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.

    வெந்ததில் பாதியை எடுத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.

    கருப்பட்டியைத் தூளாக்கி கனமான அடிப்பகுதியுள்ள வாணலியில் சேர்த்து 300 மில்லி தண்ணீர் விட்டுக் காய்ச்சவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

    வடிக்கட்டிய கருப்பட்டி சிரப்பை மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.

    இதில் வேகவைத்து அரைத்த பயறுக் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையெனில், சிறிது தண்ணீர் ஊற்றி, கஞ்சி பதத்துக்குக் கொண்டு வரவும்.

    4 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து உப்பு சேர்த்துக் கஞ்சியைக் கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் வெந்த பயறைச் சேர்த்துக் கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கினால், சுவையான கருப்பட்டிக் கஞ்சி தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று இந்த ஜாம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மாதுளை முத்துகள் - 2 கப்

    எலுமிச்சைப்பழம் - 2

    சர்க்கரை - 2 கப்

    செய்முறை:

    மாதுளையை உதிர்த்து அதற்கு சமமாக சர்க்கரையை அளந்து எடுத்துக் கொள்ளவும்.

    மாதுளை முத்துகளை மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுத்து வைக்கவும். விதை அரைபடாமல் இருக்க வேண்டும். எனவே, மாதுளை முத்துகளை லேசாக அரைத்தால் போதும்.

    அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த மாதுளை முத்துகளைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து, 2 நிமிடங்களுக்குக் கிளறவும்.

    பிறகு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்து மாதுளை முத்துகளோடு சேர்ந்து வரும் போது, எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து நன்கு கிளறவும்.

    கலவையில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி, பிசுபிசுப்பு பதம் வரும்வரை கிளறவும். இதற்கு சுமார் 7 நிமிடங்கள் ஆகலாம்.

    இப்போது அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான மாதுளை ஜாம் தயார்.

    கலவை ஆறிய பின்னர் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்யவும். பல வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

    குறிப்பு:

    மிகவும் சுவையான இந்த ஜாம் செய்யும்போது அதிகமாக வேக வைத்துவிட வேண்டாம். பிறகு ரப்பர் போலாகிவிடும். பிசுபிசுப்பு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். உடலுக்கு சத்து தருவதோடு ரத்தவிருத்திக்கும் ஏற்றது மாதுளை. மாதுளையின் விதைகள் வேண்டாம் என்று நினைத்தால், மாதுளை முத்துகளை நன்கு அரைத்து வடிகட்டி சாறெடுத்து பிறகு ஜாம் செய்யலாம்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • பாயாசத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.
    • பாயாசத்தில் பழங்களை சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருள்கள்:

    அன்னாசிப்பழத் துண்டுகள்- 1 கப்

    காய்ச்சிய பால் - 1 லிட்டர்

    கன்டென்ஸ்டு மில்க் - 1 கப்

    ஜவ்வரிசி - 1/2 கப்

    பைனாப்பிள் எசன்ஸ் - 1 ஸ்பூன்

    நெய் - தேவையான அளவு

    முந்திரி - தேவையான அளவு

    கிஸ்மிஸ் - தேவையான அளவு

    செய்முறை:

    * அன்னாசி பழத்தினை தோல் சீவி ஒரே அளவிலான சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஜவ்வரிசியை அலசி சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.

    * அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து பாலை காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரம் 1.5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை போட்டு 5 நிமிடங்கள் வரை கொதித்த பின் அந்த தண்ணீரை வடிகட்டி ஜவ்வரிசியை தண்ணீரில் குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பாதியளவு அன்னாசி பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் அலசி வைத்துள்ள ஜவ்வரிசியைச் சேர்த்து 3 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.

    * பிறகு அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கன்டென்ஸ்டு மில்க் சேர்ப்பதால் அதில் இருக்கும் சர்க்கரை சுவையே போதுமானது. பாயாசம் நன்றாக கெட்டியான பின் அடுப்பினை அணைத்துவிட்டு பாயாசத்தை இறக்கி வைக்கவும்.

    * இப்போது இதில் ஒரு துளி பைனாப்பிள் எசன்ஸ் மற்றும் வெட்டி வைத்துள்ள பைனாப்பிள் துண்டுகளை சேர்க்க வேண்டும்.

    * அடுப்பில் ஒரு சிறிய பான் வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுத்து பாயாசத்தில் ஊற்றி அலங்கரித்தால் தித்திப்பான அன்னாசி பழ பாயாசம் ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நட்டு ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • திருப்பூர் மாநகராட்சி வணிக வளாக கட்டடத்தில் வாடகைக்கு ஒரு கடை ஒதுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    தேசிய திருநங்கைகள் தினத்தையொட்டி திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் தேசிய திருநங்கைகள் தின விழா தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. பின்னர் திருநங்கைகள் சார்பில்தயார் செய்யப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளை பொதுமக்களுக்கு வழங்கி யும் நாதஸ்வரம் வாசித்து ஊர்வலமாக வந்து 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நட்டு ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.தொடர்ந்து நடந்த விழாவில் திருநங்கைகள் சங்கத்தின் தலைவி திவ்யா பேசியதாவது:- உலகமெங்கும் வாழும்அனைத்து திருநங்கைகளுக்கும் தேசிய திருநங்கைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். நாங்கள் ஏற்பாடு செய்யும் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பதற்கு ஏதுவாக திருப்பூர் மாநகராட்சி வணிக வளாக கட்டடத்தில் வாடகைக்கு ஒரு கடை ஒதுக்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் செயலாளர் லட்சுமி, பொருளாளர் தர்ஷனா,துணைத் தலைவர் சித்ரா, துணைச் செயலாளர் தர்ஷினி ,செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகா, ரூபினி, துர்கா, மோனிகா, சௌந்தர்யா, பவானி,கௌரி உள்ளிட்ட நிர்வாகிகள் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • கேரளாவில் பாசிப்பருப்பு பாயாசம் மிகவும் பிரபலம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசிப்பருப்பு - 1 கப்

    வெல்லம் - 1 கப் (துருவியது)

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

    நீர் போன்ற தேங்காய் பால் - 2 1/2 கப்

    முந்திரி - 3 டேபிள் ஸ்பூன்

    உலர் திராட்சை - 3 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் - 4

    செய்முறை:

    * ஒரு வாணலியை அடுப்பில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு அதில் பாசிப்பருப்பை சேர்த்து 2 நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

    * பிறகு அதில் நீர் போன்ற தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

    * அதன் பின் அதில் ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் அல்லது பருப்பு வேகும் வரை மூடி வைக்க வேண்டும்.

    * பருப்பு நன்கு வெந்த பின், வெல்லத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி இறக்க வேண்டும்.

    * இறுதியில் அதில் கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து கிளறி விட்டு, அத்துடன் எஞ்சிய 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம் ரெடி!

    • பாப்கார்ன், சாக்லேட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • இன்று இது இரண்டையும் வைத்து ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாப்கார்ன் சோளம் - ஒரு கப்,

    குக்கீஸ் சாக்லேட் - 50 கிராம்,

    வெண்ணெய் (அ) நெய் - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய், உப்பு - சிறிதளவு,

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை பொடித்துப் போடவும். வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது சாக்லேட் உள்ள

    பாத்திரத்தை அதன் மேல் வைத்து சாக்லேட்டை ஆவியில் உருக வைக்கவும். உருக ஆரம்பித்ததும் இறக்கி நெய் (அ) வெண்ணெய் சேர்ந்து கட்டியில்லாமல் கிளறவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு, பாப் கார்னைப் போட்டு, உப்பு சேர்த்து மூடியால் மூடி விடவும். பொரிந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டவும்.

    பிறகு, தயாரித்த சாக்லேட் சிரப்பை வடிகட்டி மூலம் பாப்கார்ன் மேல் விடவும்.

    நன்கு குலுக்கி சீராக பரவ விடவும்.

    சூப்பரான சாக்லேட் பாப்கார்ன் ரெடி.

    இதனை ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் போட்டு வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

    ×