search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாம்"

    • அன்னாச்சிப் பழக் கூழுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளரவும்.
    • தண்ணீர் நன்கு வற்றும் வரையும் 5 அல்லது 8 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்.

    தேவையான பொருட்கள்:

    அன்னாசிபழம்- 1

    சர்க்கரை- ஒரு கப்

    எலுமிச்சை- அரை துண்டு

    செய்முறை:

    அன்னாசி பழத்தினை அதன் தோலினை நீக்கிவிட்டு பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி அதனை ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும். அரைத்த அன்னாச்சிப் பழக் கூழுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை நன்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

    அன்னாச்சிப் பழ சிரப் கெட்டியாக ஆரம்பிக்கும், தண்ணீர் நன்கு வற்றும் வரையும் 5 அல்லது 8 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும். நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். எலுமிச்சை சாறு சேர்ப்பதால் அதில் சேர்க்கப்படும் சர்க்கரை உறையாமல் இருக்கும். பின்பு ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து அதனை ஃப்ரிட்ஜில் வைத்து தேவையான நேரங்களில் சப்பாத்தி, தோசை, பிரட் ஆகியவற்றிற்கு சேர்த்து சாப்பிடலாம்.

    • குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று இந்த ஜாம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மாதுளை முத்துகள் - 2 கப்

    எலுமிச்சைப்பழம் - 2

    சர்க்கரை - 2 கப்

    செய்முறை:

    மாதுளையை உதிர்த்து அதற்கு சமமாக சர்க்கரையை அளந்து எடுத்துக் கொள்ளவும்.

    மாதுளை முத்துகளை மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுத்து வைக்கவும். விதை அரைபடாமல் இருக்க வேண்டும். எனவே, மாதுளை முத்துகளை லேசாக அரைத்தால் போதும்.

    அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த மாதுளை முத்துகளைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து, 2 நிமிடங்களுக்குக் கிளறவும்.

    பிறகு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்து மாதுளை முத்துகளோடு சேர்ந்து வரும் போது, எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து நன்கு கிளறவும்.

    கலவையில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி, பிசுபிசுப்பு பதம் வரும்வரை கிளறவும். இதற்கு சுமார் 7 நிமிடங்கள் ஆகலாம்.

    இப்போது அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான மாதுளை ஜாம் தயார்.

    கலவை ஆறிய பின்னர் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்யவும். பல வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

    குறிப்பு:

    மிகவும் சுவையான இந்த ஜாம் செய்யும்போது அதிகமாக வேக வைத்துவிட வேண்டாம். பிறகு ரப்பர் போலாகிவிடும். பிசுபிசுப்பு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். உடலுக்கு சத்து தருவதோடு ரத்தவிருத்திக்கும் ஏற்றது மாதுளை. மாதுளையின் விதைகள் வேண்டாம் என்று நினைத்தால், மாதுளை முத்துகளை நன்கு அரைத்து வடிகட்டி சாறெடுத்து பிறகு ஜாம் செய்யலாம்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • வல்லாரை ஜாம் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரி க்கும். வயதானவர்களுக்கு அல்சைமர் நோய் வராமல் தடுக்கும்.
    • ஜாம் மற்றும் இட்லி பொடியினை பல்கலைகழக வளாகத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய பல்கலைகழகத்தில் 4-ஆம் ஆண்டு இளங்கலை வேளாண் பட்டபடிப்பு பயின்று வரும் மாணவிகள் பாலமுனீஸ்வரி, ஷெர்லி, பிளஸ்சி, ஹேமபிரியா, லெட்சுமி, அபிநயா ஆகியோர் ஜெ.ஊத்துப்பட்டி கிராமத்தில் நடந்த திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு வகுப்பின் கீழ் இயற்கை முறையில் வல்லாரை கீரை உற்பத்தி செய்து, வல்லாரை இலை களோடு பழங்களையும் சேர்த்து ஜாம் மற்றும் இட்லி பொடி தயார் செய்து வருகின்றனர்.

    கீரைகளை குழந்தைகள் உண்ணுவதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கும் நோக்கமாக கொண்டுள்ளனர். இந்த வல்லாரை ஜாம் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரி க்கும். வயதானவர்களுக்கு அல்சைமர் நோய் வராமல் தடுக்கும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் வயிற்று வலியை குறைக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

    இந்த ஜாம் மற்றும் இட்லி பொடியினை பொது மக்கள் ஆர்வத்துடன் அதிக அளவில் வாங்கி செல்வதால் தொடர்ந்து இவற்றை தயாரித்து அவர்கள் பல்கலைகழக வளாகத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

    ×