search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சிவராத்திரி நைவேத்தியம்: ஜவ்வரிசி பாயாசம்
    X

    சிவராத்திரி நைவேத்தியம்: ஜவ்வரிசி பாயாசம்

    • இன்று சிவபெருமானுக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
    • இன்று சிவபெருமானுக்கு நைவேத்தியம் படைக்க இந்த ரெசிபி செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    ஜவ்வரிசி - கால் கப்

    தண்ணீர் - ஒரு கப்

    நெய் - ஒரு தேக்கரண்டி

    முந்திரி, திராட்சை - தேவைக்கு

    சர்க்கரை - அரை கப்

    பால் - 1 கப் - 1 1/2 கப்

    ஏலக்காய் தூள் - தேவைக்கு

    பாதாம், பிஸ்தா - தேவைக்கு

    செய்முறை:

    பாதாம் பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும்.

    முதலில் ஜவ்வரிசியை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் நன்றாக வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை போட்டு வறுத்து எடுக்கவும்.

    அதே பாத்திரத்தில் நன்றாக வெந்து இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

    சர்க்கரை நன்றாக கரைந்ததும் கடைசியாக பால் சேர்க்கவும்.

    இத்துடன் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

    பரிமாறும்போது பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஜவ்வரிசி பாயாசம் ரெடி.

    Next Story
    ×