search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sugarcane"

    • பெரியகுளம் உட்பட முக்கிய நீராதாரங்கள் அருகில் உள்ள பகுதிகளிலேயே கரும்பு சாகுபடி கைவிடப்பட்டு, தென்னை மற்றும் காய்கறி சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    • காய்கறி சாகுபடி பரப்பு ஏழு குள பாசனப்பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் முன்பு பி.ஏ.பி., மற்றும் ஏழு குள பாசன திட்ட பகுதிகளில் கரும்பு பிரதானமாக பயிரிடப்பட்டு வந்தது.அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை மற்றும் வெல்லம் உற்பத்திக்காக தாலுகா முழுவதும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வந்தனர்.பி.ஏ.பி., பாசன திட்டம் நான்கு மண்டலமாக விரிவுபடுத்தப்பட்ட பிறகு குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி முற்றிலுமாக கைவிடப்பட்டது.

    இதையடுத்து ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட போடிபட்டி, வடபூதனம், சுண்டக்காம்பாளையம், பள்ளபாளையம், சந்தனக்கருப்பனூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கரும்பு பிரதான சாகுபடியாக மாறியது. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்காகவும், விளைநிலங்களிலேயே வெல்லம் தயாரிக்கவும் கரும்பு சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வந்தது.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலை மாறி விட்டது. பெரியகுளம் உட்பட முக்கிய நீராதாரங்கள் அருகில் உள்ள பகுதிகளிலேயே கரும்பு சாகுபடி கைவிடப்பட்டு, தென்னை மற்றும் காய்கறி சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கரும்பு சாகுபடியில் கரணை நடவு செய்து ஓராண்டுக்குப்பிறகே அறுவடைக்கு தயாராகிறது. ஆண்டு முழுவதும் பராமரித்து அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்படுவது விவசாயிகளை பாதிக்கிறது.

    அறுவடை சீசனில் ஒரு டன் கரும்பின் விலை 3 ஆயிரம் ரூபாயை கூட எட்டாதது, சாகுபடி செலவு அதிகரித்த நிலையில் நஷ்டத்தையே அளித்தது. வெல்ல தயாரிப்பிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.பிழிதிறன் மற்றும் சர்க்கரை கட்டுமானம் குறைந்த கரும்பால் வெல்லம் தயாரிப்புக்கு செலவு அதிகரித்தது.சில இடங்களில் வெல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட கலப்படம் ஒட்டுமொத்தமாக சந்தையில், விலையை சரியச்செய்தது. இதனால் வெல்ல உற்பத்தி ஆலைகளும் இப்பகுதியில் குறைந்து விட்டது.எனவே கரும்பு சாகுபடி குறைந்து தென்னை மற்றும் காய்கறி சாகுபடி பரப்பு ஏழு குள பாசனப்பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஏழு குள பாசன பகுதிகளில் பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்ட கரும்பு சாகுபடி தற்போது குறைந்து விட்டது.அரசு, கரும்புக்கு நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரும்பு சாகுபடிக்கான புதிய தொழில்நுட்பங்கள் எளிதாக கிடைக்கும் வகையில் சிறப்பு மானிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனர்.

    • 2ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட முடியவில்லை.
    • கரும்புகள் விற்பனை இந்த ஆண்டு குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வீரபாண்டி :

    பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூர் முழுவதும் அதிக அளவில் கரும்புகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.சரியான விற்பனை இல்லாத காரணத்தால் ஆங்காங்கே கட்டு கட்டாக கரும்புகள் விற்பனையாகாமல் அப்படியே விட்டு சென்றுள்ளார்கள். 2ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட முடியவில்லை.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் திருச்சி, எடப்பாடி, சேலம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து அதிக அளவில் கரும்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பல்லடம் ரோடு,அவினாசி ரோடு ,காங்கேயம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட மாநகரின் முக்கிய ரோடுகள் மற்றும் மார்க்கெட் வீதியில் கரும்புகள் கட்டு கட்டாக குவிக்கப்பட்டன.

    பொங்கலுக்கு முந்தைய நாளும் பொங்கல் அன்றும் ஓரளவுக்கு கரும்புகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கடந்த காலங்களில் போன்று இந்த ஆண்டு கரும்புகள் விற்பனை இல்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 50 சதவீதம் அளவு கரும்புகள் விற்பனை இந்த ஆண்டு குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    முதலில் ஒரு ஜோடி கரும்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது 6 முதல் 8 கரும்புகள் வரை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பலர் கரும்புக்கட்டுகளை சாலைகளில் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர். எதிர்பார்த்த விற்பனை இல்லாததால் கரும்புகளின் இலை மட்டுமின்றி வியாபாரிகளின் மனமும் வாடிப்போய் உள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு, பானை, மஞ்சள், வாழைத்தார், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு, பானை, மஞ்சள், வாழைத்தார், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

    ஈரோடு மாநகரில் உள்ள முக்கிய கடை வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள கரும்பு வியாபாரமும் இன்று அமோகமாக நடந்தது. ஒரு ஜோடி கரும்பு ரூ.70 முதல் ரூ.100 வரைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பனங்கிழங்கு விற்பனையும் நடந்தது.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, சித்தோடு, சென்னிமலை, கொடுமுடி, சிவகிரி, பெருந்துறை, பர்கூர், தாளவாடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் விற்பனை களை கட்டியது.

    ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் பெரியார் நகர் சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஈரோடு பூ மார்க்கெட்டிற்கு உசிலம்பட்டி, திண்டுக்கல், சத்தியமங்கலம், ஓமலூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனையாகி வருகிறது. ஈரோடு பூ மார்க்கெட்டிற்கு 5 டன்கள் பூக்கள் விற்பனைக்கு வரும். தற்போது பொங்கலை முன்னிட்டு 10 டன் பூக்கள் விற்பனைக்கு வந்து உள்ளது.

    தற்போது பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விட்டது. எனினும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் தேவை அதிகரிப்பால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.

    கடந்த வாரம் ரூ.800-க்கு விற்ற முல்லை பூ இந்த வாரம் தேவை அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.3 ஆயிரமாக விற்கப்படுகிறது. இதேபோல் ஜாதி பூ ஒரு கிலோ ரூ.1600, சம்மங்கி பூ ஒரு கிலோ ரூ.100, அரளிப்பூ ரூ.400, செவ்வரளி ரூ.400, செவ்வந்தி ரூ.120 விற்கப்பட்டது.

    இன்று சத்தியமங்கலம்பூ மார்க்ெகட்டுக்கு குறைந்த அளவிலேயே மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்பட்டது. மேலும் தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் மல்லிகைப்பூக்கள்தேவை அதிகரித்து உள்ளது. பூக்கள் வரத்து குறைந்து. தேவை அதிகரித்து உள்ளதால் இன்று நடந்த பூ மார்க்கெட்டில் ஒரு கிேலா மல்லிகைப்பூ ரூ.6200-க்கு விற்பனை ஆனது.

    • கரும்பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
    • கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும்.

    பொங்கல் திருவிழாவின் கதாநாயகனான கரும்பில், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. ஆனால் அதன் அருமை பலருக்கு தெரிவதில்லை. நாம் தெரிந்து கொள்வோமா...?

    1. உடனடி ஆற்றல்: கரும்புச் சாறு உடனடி ஆற்றல் தரக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவில் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. உங்கள் வேலையினை ஆரம்பிப்பதற்கு முன்னால் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.

    2. வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள்: கரும் பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உண்ணும்பொழுது வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாகச் செய்யும்.

    3. மன அழுத்தத்தினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    4. புற்று நோய் வராமல் தடுக்கும்: கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பிளவனோய்டுகள் நிறைந்துள்ளன. இதனை நீங்கள் உண்டு வந்தால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். புற்றுநோய் செல்களை, ஆரம்பத்திலேயே அழிக்கும்.

    5. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்: கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களின் சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

    6. கல்லீரலின் ஆரோக்கியம் : கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த விரும்புபவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு பருகுங்கள்.

    7. வயதாவதை தடுக்கும் : கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.

    8. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் : கரும்பில் அதிக அளவில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

    9. உடல் எடையினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உண்டு வந்தால் உடல் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேவையற்ற கொழுப்பினை கரைக்க உதவும். எனவே உடல் எடையினை குறைக்க விரும்புபவர்கள் தினமும் கரும்பினை உண்டு வாருங்கள். மேலும் இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

    10. ரத்த அழுத்தத்தினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். எனவே ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க விரும்புவர்கள் அடிக்கடி கரும்பினை கடித்து ருசிக்கலாம்.

    கரும்பு ஏன் இனிக்கிறது?

    கரும்பில் சுக்ரோஸ் என்ற சர்க்கரை வேதிப்பொருள் உள்ளது. இதுவே கரும்புக்கு இனிப்புச்சுவையை தருகிறது. நாம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரை இந்த கரும்புச்சர்க்கரைதான்!

    கரும்பில் அடங்கியுள்ள சத்துக்கள்

    கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், தையாமின், ரிபோபிளவின், புரதம், இரும்புச்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன.

    • காளிங்கராயன் கால்வாய் வழியாக பாசன வாய்க்காலில் இருந்து வரும் நீரின் மூலம் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளார்கள்
    • சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பொங்கல் பண்டிகை யையொட்டி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது

    கொடுமுடி,

    தமிழர்கள் திருநாளான தை முதல் நாள் பொங்கல் விழாவானது தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல்விழா என்று கூறியவுடன் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்புதான்.

    தமிழர்கள் இந்த விழாவை உழவுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் சூரியனுக்கும், உழவுக்கு பயன்படுத்தும் உயிரினங்களான ஆடு, மாடுகள் மற்றும் உழவு பொருட்களான ஏர், மண்வெட்டி, நெல் அறுவடை செய்யும் அரிவாள் என உழவர்கள் உழவுக்கு பயன்படுத்தும் அனைத்தையும் வணங்கி வழிபடுவது வழக்கம்.

    பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது செங்கரும்பு, மஞ்சள், வெல்லம் மற்றும் பொங்கல் பானையாகும். பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து வீடுகளிலும் தவறாமல் இடம் பெறுவது கரும்பு. புதிய தம்பதிகளுக்கு கரும்பு அடங்கிய பொங்கல் சீதனம் கொடுக்கும் பழக்கமும் காலம் காலமாக தமிழர்களிடையே இருந்து வருகிறது.

    இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான ஊஞ்சலூர், குளத்துப் பாளையம், கொம்பனைப் புதூர், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், நடிப்பாளையம், சிவகிரி, அரச்சலூர் போன்ற பகுதிகளில் காளிங்கராயன் கால்வாய் வழியாக பாசன வாய்க்காலில் இருந்து வரும் நீரின் மூலம் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளார்கள்.

    இவ்வாறு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பொங்கல் பண்டிகை யையொட்டி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி கரும்பு மொத்த வியாபா ரிகள் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயி களிடம் கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்ய விவசாயிகளை இன்னும் சில நாட்களில் தேடி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுப்பதற்கான பொங்கல் தொகுப்புகளும் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கரும்பு கட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    கோவை,

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி ெகாண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்த ஆண்டும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    இதற்காக கடந்த 3-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர்.

    குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுப்பதற்கான பொங்கல் தொகுப்புகளும் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு இன்று காலை கரும்பு கட்டுகள் வந்து இறங்கியது. இவை சேலம் மேட்டூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கரும்பு கட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவை அனைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நாளை முதல் பொங்கல் தொகுப்பு அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்படும். எனவே டோக்கன் பெற்றவர்கள் நாளை முதல் பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம் என்றனர்.

    • ஷார்ஜா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.
    • கோவையில் இருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஷார்ஜா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர். இதற்காக கோவையில் இருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் 2.5 டன் முதல் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து கரும்பு கோவைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் இங்கிருந்து ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்ல புக்கிங் செய்யப்படுகிறது.

    இன்று முதல் ஷார்ஜாவுக்கு கரும்பு அனுப்பப்படுகிறது. முதல் நாளில் 1 டன்னுக்கு அதிகமாக கரும்பு புக்கிங் செய்யப்பட்டது. முழு கரும்பு கொண்டு செல்ல அதிக இடவசதி தேவைப்படுவதால், மற்ற பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும். இதனால் 400 கிலோ குறைத்து, 600 கிலோ கரும்பு மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
    • 6.5 லட்சம் கார்டுகளுக்கு இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

    அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

    இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன.

    பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று தொடங்கிவைக்கிறார்.

    அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

    பொங்கல் தொகுப்பை பெறுவதற்காக இன்று முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

    தஞ்சை மாவட்டத்தில் 1185 ரேஷன் கடைகளில் உள்ள 6.5 லட்சம் கார்டுகளுக்கு இன்று முதல் டோக்கன்விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

    தஞ்சை கரந்தை சுஜானா கீழக்கரை பகுதியில் 4-வது வார்டு கவுன்சிலர் சுமதி இளங்கோவன், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகித்தனர்.

    இதேப்போல் தஞ்சை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டோக்கன் வினியோகம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    அந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பை பெறும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    அதைக் காட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    • பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
    • இந்த முடிவு அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

    சென்னை:

    பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பை வழங்கக் கோரி அ.தி.மு.க. சார்பில் ஜனவரி 2-ம் தேதி திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்தது.

    இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கக் கோரி தி.மலையில் ஜனவரி 2-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது என தமிழக அரசு எடுத்த முடிவு அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.

    கரும்பை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வந்த நிலையில், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.
    • பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது.

    பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 22-ந்தேதி அறிவித்தது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அதில் அவர் கூறியுள்ளதாவது:

    பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் குறைந்த விலைக்கு கரும்பை விற்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.

    பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி டிசம்பர் 24-ந்தேதி தமிழ்நாடு அரசிடம் மனு அளித்தேன். அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

    கொள்முதல் செய்யும் இடத்திலேயே, எடை ரசீது வழங்கப்படும்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி சர்க்கரை ஆலை 60 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதால் பழைய எந்திரங்களை கொண்டு, கரும்பு அரவை நடந்து வருகிறது. கரும்பு வெட்ட ஆட்கள் கிடைக்காததால் கடந்த மாதம் 20-ந் தேதிக்கு பிறகே, கரும்பு வெட்டி அரவை வேகமெடுத்துள்ளது.

    விவசாயிகள், அறுவடை செய்த கரும்புகளை ஆலைக்கு அனுப்பி வருகின்றனர். கரும்பு கொள்முதலுக்கான தொகையை 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கரும்பு எடை போடும் பில் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு வழங்க வேண்டும். மாறாக, கொள்முதல் செய்த கரும்புக்கு 'பில்' வழங்கப்படாததால், எடை எவ்வளவு என்பதை அறிய முடியவில்லை எனதிருப்பூரில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தாராபுரம் பகுதி கரும்பு விவசாயிகள் கூறியதாவது:-

    கரும்பு அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காமல், வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, அறுவடை செய்யப்பட்டது. விளைநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கான, 'பில்' ரசீதுகளை வழங்குவதில்லை. இதனால் எவ்வளவு எடையுள்ள கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது என்ற விவரம் தெரிவதில்லை. செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை தகவல் எதுவும் அனுப்பப்படவில்லை என்றனர்.

    இதுகுறித்து அமராவதி சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் பால் பிரின்ஸி ராஜ்குமார் கூறுகையில்:

    கரும்பு அறுவடைக்கு தாமதம் ஏற்பட்டதால், கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து அரவை துவங்கியுள்ளது. 'பீல்டு' அலுவலர்கள் தேவையான ஆட்களை அழைத்து வந்துள்ளனர். கொள்முதல் செய்யும் இடத்திலேயே, எடை ரசீது வழங்கப்படும். கொள்முதல் செய்த 15 நாட்களுக்குள் கரும்புக்கான தொகை விடுவிக்கப்படும் என்றார்.

    கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாமக்கல்:

    தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-
    டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து, வழக்கமாக ஜூன் மாதத்தில் தான் தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, தமிழக முதல்வர் முன்கூட்டியே தண்ணீர் திறந்துள்ளார். விவசாயிகள் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். 

    கூட்டுறவு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் போது, 50 சதவீதம் உரங்கள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர், அவ்வாறு நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. விவசாயிகள் விரும்பியபடி உரங்கள் வழங்குவதுடன், மீதம் உள்ள தொகையை, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு ரொக்கமாக வழங்கினால், உற்பத்தி செலவுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் வழங்குவது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உடனடியாக விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைள நீர்வளத்துறை, வருவாய்த்துறை மூலம் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்து, தூர் வாரவேண்டும்.

    தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால், டன் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 150 மட்டுமே வழங்கி, டன் ஒன்றுக்கு ரூ. 2,900 மட்டுமே விலையாக வழங்கப்படுகிறது. 

    தற்போது, உற்பத்தி செலவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வெட்டுக்கூலியும் அதிக அளவு உயர்ந்துள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, 2022–23ம் அரவை பருவத்துக்கு டன் ஒன்றுக்கு ரூ. 5,000 ஆக விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி பசும்பால் லிட்டருக்கு ரூ. 50, எருமைப்பால் லிட்டர் ரூ. 60 வீதம் வழங்க வேண்டும்.

    ×