search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடைகளுக்கு கரும்பு கட்டுகள் அனுப்பும் பணி தீவிரம்
    X

    ரேஷன் கடைகளுக்கு கரும்பு கட்டுகள் அனுப்பும் பணி தீவிரம்

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுப்பதற்கான பொங்கல் தொகுப்புகளும் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கரும்பு கட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    கோவை,

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி ெகாண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்த ஆண்டும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    இதற்காக கடந்த 3-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர்.

    குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுப்பதற்கான பொங்கல் தொகுப்புகளும் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு இன்று காலை கரும்பு கட்டுகள் வந்து இறங்கியது. இவை சேலம் மேட்டூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கரும்பு கட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவை அனைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நாளை முதல் பொங்கல் தொகுப்பு அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்படும். எனவே டோக்கன் பெற்றவர்கள் நாளை முதல் பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம் என்றனர்.

    Next Story
    ×