search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - எடப்பாடி பழனிசாமி
    X

    எடப்பாடி பழனிசாமி

    பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - எடப்பாடி பழனிசாமி

    • பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
    • இந்த முடிவு அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

    சென்னை:

    பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பை வழங்கக் கோரி அ.தி.மு.க. சார்பில் ஜனவரி 2-ம் தேதி திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்தது.

    இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கக் கோரி தி.மலையில் ஜனவரி 2-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது என தமிழக அரசு எடுத்த முடிவு அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.

    கரும்பை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வந்த நிலையில், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×