search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறுவடைக்கு"

    • அணை நீர்மட்டம் 102 அடியாக குறைந்துள்ள நிலையில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் எதிரே தண்ணீர் தேங்கி நின்ற நிலப்பரப்புகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.
    • நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள நிலப்பரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம் பயிரிட்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் மொத்த நீர்ட்டம் 120 அடி ஆகும். அணை நீர்மட்டம் குறையும் நேரங்களில் அணையின் நீர்த்தேக்க பரப்பு மற்றும் நீர்த்தேக்கம் பரப்பை ஒட்டி அமைந்துள்ள நிலப்பரப்புகளில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம், எள், நிலக்கடலை ஆகிய பயிர்களை பயிர் செய்வது வழக்கம் .

    இதன் அடிப்படையில் தற்போது அணை நீர்மட்டம் 102 அடியாக குறைந்துள்ள நிலையில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் எதிரே தண்ணீர் தேங்கி நின்ற நிலப்பரப்புகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.

    இந்த நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள நிலப்பரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம் பயிரிட்டனர். தற்போது இந்த சோளம் பயிர் அறுவடைக்கு தயாராகி உள்ளது.

    • காளிங்கராயன் கால்வாய் வழியாக பாசன வாய்க்காலில் இருந்து வரும் நீரின் மூலம் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளார்கள்
    • சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பொங்கல் பண்டிகை யையொட்டி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது

    கொடுமுடி,

    தமிழர்கள் திருநாளான தை முதல் நாள் பொங்கல் விழாவானது தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல்விழா என்று கூறியவுடன் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்புதான்.

    தமிழர்கள் இந்த விழாவை உழவுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் சூரியனுக்கும், உழவுக்கு பயன்படுத்தும் உயிரினங்களான ஆடு, மாடுகள் மற்றும் உழவு பொருட்களான ஏர், மண்வெட்டி, நெல் அறுவடை செய்யும் அரிவாள் என உழவர்கள் உழவுக்கு பயன்படுத்தும் அனைத்தையும் வணங்கி வழிபடுவது வழக்கம்.

    பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது செங்கரும்பு, மஞ்சள், வெல்லம் மற்றும் பொங்கல் பானையாகும். பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து வீடுகளிலும் தவறாமல் இடம் பெறுவது கரும்பு. புதிய தம்பதிகளுக்கு கரும்பு அடங்கிய பொங்கல் சீதனம் கொடுக்கும் பழக்கமும் காலம் காலமாக தமிழர்களிடையே இருந்து வருகிறது.

    இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான ஊஞ்சலூர், குளத்துப் பாளையம், கொம்பனைப் புதூர், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், நடிப்பாளையம், சிவகிரி, அரச்சலூர் போன்ற பகுதிகளில் காளிங்கராயன் கால்வாய் வழியாக பாசன வாய்க்காலில் இருந்து வரும் நீரின் மூலம் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளார்கள்.

    இவ்வாறு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பொங்கல் பண்டிகை யையொட்டி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி கரும்பு மொத்த வியாபா ரிகள் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயி களிடம் கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்ய விவசாயிகளை இன்னும் சில நாட்களில் தேடி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×