search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stabbing"

    • சிகரெட் தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • இந்த சம்பவம் குறித்து விஸ்வா அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயாவை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் விஸ்வா (வயது24). கரும்பாலை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் உதயா (30). இவர்கள் கரும்பாலை ஆட்டோ நிறுத்தத்தில் நின்ற போது விசுவாவின் நண்பரிடம் உதயா சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த உதயா கத்தியால் விஸ்வாவின் நண்பரை குத்தமுயன்றார். இதை தடுக்க முயன்ற விஷ்வாவுக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் குறித்து விஸ்வா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயாவை கைது செய்தனர்.

    • வல்லம் ஏரிக்கரைக்கு அகிலன் தனது நண் பர்களுடன் வந்தார்.
    • ரூ. ஆயிரம் பணத்ைதயும், செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மானடிக்குப் பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி மகன் கலைமகன் (27).இவர் தனது நண்பர்களுடன்வல்லம் ஏரிக்கரையில் நேற்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது கலைமகன் தனது செல்போனில் நெய்வேலி வட்டம் 3-ஐ சேர்ந்த அகிலன் (23) என்பவருடன், நெய்வேலி வடக்குத்து ரவுடியான கோபியுடன் நீபேச் கூடாது என எச்சரித்தார். அதற்கு அவர் ஏன் பேசக்கூடாது, நீ எங்கு இருக்கிறாய் என கேட்டு வல்லம் ஏரிக்கரைக்கு அகிலன் தனது நண்பர்களுடன் வந்தார்.

    அப் போது ஏற்பட்ட தகராறில் கத்தி, வீச்சரிவாள் போன்றஆயுதங்களால் சரமாரியாக கலைமகனை வெட்டினர். பின்னர் அவரிடம் இருந்த அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் காயம்அடைந்தவரை மீட்டு கடலூர் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். இது பற்றிதகவல்அறிந்ததும்காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்மற்றும்போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் செல்போன் மூலம் பேசி முந்திரிதோப்பில் மறைந்து இருந்த அகிலன் (23), அவரது நண்பர் பொறி யாளர் வட்டம் 10-ஐ சேர்ந்த தமிழ் அரசன் (29) ஆகிய இருவரையும் கைது செய்து பணம், செல்போனை பறி முதல் செய்தனர்.

    • பொன்னியம்மாள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
    • ராமு (20) வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கத்தியால் குத்தினார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 42). விவசாயி, இவருக்கு பொன்னியம்மாள் (35) என்ற மனைவியும் ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொன்னியம்மாள் தனது மகன் மற்றும் மகள்களுடன் பழைய சிறுவங்கூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இயைடுத்து வேலு 2-வது திருமணம் செய்து கொண்டு கண்ணம்மாள் (30) மற்றும் மகன், மகள் ஆகியோருடன் ரங்கநாதபுரத்தில் வசித்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னியம்மாள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணச் செலவிற்கு பணம் வேண்டும் என தனது கணவர் வேலுவிடம் கேட்டுள்ளார். வேலு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை வேலுவின் மகன் ராமு (20) ரங்கநாதபுரத்திற்கு சென்றார். அங்கே வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கத்தியால் குத்தினார். அப்போது வேலுவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனைக் கண்ட ராமு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து வேலுவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து தப்பி ஓடிய ராமுவை வலை வீசி தேடி வருகின்றனர். சகோதரியின் திருமணத்திற்கு பணம் தராத தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று இரவு விஜயகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • இந்த சத்தம் கேட்ட சேட்டு, விஜயகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் எதற்கு இவ்வாறு சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்? என தட்டிக் கேட்டுள்ளார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே குடும்ப தகராைற தட்டிக்கேட்ட முதியவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.

    குடும்ப தகராறு

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் எல்.ஐ.சி ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 60). இவரது அண்ணன் மகனான விஜயகுமார் (27), சேட்டுவின் வீட்டிற்கு அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று இரவு விஜயகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்ட சேட்டு, விஜயகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் எதற்கு இவ்வாறு சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்? என தட்டிக் கேட்டுள்ளார்.

    குத்தி கொலை

    இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், நீங்கள் எதற்கு இதுபற்றி கேட்கிறீர்கள்? என்று கூறி, அங்கிருந்த கத்தியால் சேட்டுவை சரமாரியாக குத்தினார். இதில், சேட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர், உடனடியாக அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சேட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராசிபுரம் போலீசார், சேட்டுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி விஜயகுமாரை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சேட்டுவை கொலை செய்ததது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார். அவரிடமிருந்து கொலைக்கு கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கணவன், மனைவி வீட்டில் சண்டையிட்டதை தட்டிக் கேட்ட முதியவர், அண்ணன் மகனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அருள் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார்.
    • அருள்மற்றும் அவரது கூட்டாளியாள ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் பிரேம் ராஜை சரமாரியாக வெட்டியதாக தெரிவித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ் (வயது 21) இவர் நேற்று நொலம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார். அங்கு சென்ற பயணக்களைப்பில் அந்த பகுதியில் உள்ள குளம் அருகே தூங்கினார். அப்போது ஈச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் அங்கு வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார். பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம் ராஜுக்கும் அருளுக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.  மேலும் அருள், சிறுத்தை என்கின்ற ஸ்ரீகாந்த் என்பவரும் சேர்ந்து பிரேம்ராஜை அறிவானால் வெட்டியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதன்பின்னர் போலீசார் அருள், ஸ்ரீகாந்தை விலை வீசிதேடிவந்த நிலையில் ஓங்கூர் டோல்கேட் அருகே மறைந்திருந்த அருள் மற்றும் ஸ்ரீகாந்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அருளை போலீசார் விசாரணை செய்ததில் பிரேம்ராஜ் அருளிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார். அதை அருள் கேட்டதற்கு தர வேண்டிய பணத்தை பிரேம்ராஜ் திருப்பி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அருள்மற்றும் அவரது கூட்டாளியாள ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் பிரேம் ராஜை சரமாரியாக வெட்டியதாக தெரிவித்துள்ளார்.மேலும் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பிரேம் ராஜ் (வயது 21) இவர் நேற்று நொலம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார்.பயணக் களைப்பில் அந்த பகுதியில் உள்ள குளம் அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது,அருள் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம்ராஜை கை, கால்களில் வெட்டினார். பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார்.
    • இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், ஒலக்கூர் போலீசாருக்க தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ் (வயது 21) இவர் நேற்று நொலம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார். அங்கு சென்ற பயணக் களைப்பில் அந்த பகுதியில் உள்ள குளம் அருகே தூங்கினார். ,அப்போது ஈச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் அங்கு வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார்.

    பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்க தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம் ராஜுக்கும் அருளுக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்து அருள், பிரேம் ராஜை கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. பிரேம்ராஜை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய அருளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.குளம் அருகே தூங்கினார்.  அப்போது ஈச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் அங்கு வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார். பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்க தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம் ராஜுக்கும் அருளுக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்து அருள், பிரேம் ராஜை கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. பிரேம்ராஜை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய அருளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

    • செலவுக்கு பணம் கொடுக்காததால் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைதானார்.
    • பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காளிமுத்து நகரை சேர்ந்தவர் முருகவேல் (வயது 26). இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து (36), ஆட்டோ டிரைவர். முருகவேலின் சகோதரரான இவர் மனைவியை பிரிந்து தனியே வசித்து வருகிறார் .

    மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தாய் மற்றும் சகோதரர் முருகவேலிடம் பணம் கேட்டு தகராறு செய்தார்.

    ஆனால் அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வைரமுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகவேலை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த முருகவேல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் முருகவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரமுத்துவை கைது செய்தனர்.

    • மதுரை அருகே டிரைவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
    • இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது.

    மதுரை

    மதுரை முரட்டன்பத்திரியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 45). கால் டாக்சி டிரைவர். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக கரிமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு இரு தரப்பினரும் சமரசம் ஆகிவிட்டனர். சம்பவத்தன்று மாலை செல்லப்பாண்டி புது ஜெயில் ரோட்டில் சென்றார். அங்கு வந்த 2 பேர் அவரிடம் வழிமறித்து தகராறு செய்தனர்.

    இதை செல்லப்பாண்டி தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த இருவரும் அவரை கத்தியால் குத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுஜெயில் ரோட்டை சேர்ந்த சிவகுமார் மகன் கட்டாரி கார்த்திக் (23), ராம்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர்.

    • கணவரை கத்தியால் குத்திய பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    • காயமடைந்த சுதர்சன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை இந்திரா நகரை சேர்ந்தவர் சுதர்சன் (34). இவர் மணிமேகலை என்ற பிரியா(29) என்பவரை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். சுதர்சனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று மாலை சுதர்சன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதை மணிமேகலை தட்டி கேட்டார். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த மணிமேகலை காய்கறி வெட்டும் கத்தியால் கணவரை குத்தினார். காயமடைந்த சுதர்சன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சாத்தூர் அருகே கோவில் திருவிழாவில் அண்ணன்- தம்பியை கத்தியால் குத்திய 5 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • காதல் திருமணம் செய்தது தொடர்பாக முத்துகுமாரிடம் தகராறு செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நடுசூரங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது25). இவர் அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் மகள் மகாலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று ஊர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடந்தது. இதில் முத்துகுமார், அவரது அண்ணன் அஜித்குமார், தம்பி அரவிந்த்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது சந்திரகுமார் அவரது மகன் சூர்யா, பார்த்திபன், பாலமுருகன், தாஸ்குட்டி ஆகிய 5 பேரும் காதல் திருமணம் செய்தது தொடர்பாக முத்துகுமாரிடம் தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட மோதலில் அஜித்குமார், அரவிந்த்குமார் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு 5 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் காயமடைந்த 2 பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி முத்துகுமார் புகார் செய்ததின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கத்தியால் குத்திய 5 பேரையும் தேடி வருகின்றனர்.

    • கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொத்தனாருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி:

    திருச்சி வடக்கு காட்டூர் சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராமன் (வயது 51). கொத்தனாரான இவருக்கும் வடக்கு காட்டூர் காந்தி தெரு பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு இளம் பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த அவரது கணவர் ஜெகன் (வயது 40) அதிர்ச்சி அடைந்தார்.லாரி டிரைவரான இவர் வெளியூர் செல்லும் நாட்களில் விஜயராமன் தனது சேட்டையை செய்து வந்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து ஜெகன் தனது மனைவி மற்றும் விஜயராமனை கண்டித்தார்.

    ஆனால் இதனை கொத்தனார் கண்டுகொள்ளவில்லை.தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த ஜெகன் வடக்கு காட்டூர் பாரதிதாசன் தெரு பகுதியைச் சேர்ந்த நல்லான் (40), வடக்கு காட்டூர் காந்திநகர் ஒன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்த ராமர் (49 )ஆகிய நண்பர்களுடன் சென்று பாப்பா குறிச்சி சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த விஜயராமனிடம் தகராறு செய்தார். பின்னர் ஜெகன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர்.

    இதில் விஜயராமனுக்கு இடது கை விரல் மற்றும் வலது பக்க கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த வருகின்றனர். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகனை கைது செய்தனர். தப்பி ஓடிய நல்லான்,ராமர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • விளம்பரம் மற்றும் நோட்டீஸ் கொடுக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி குருவிவிளாம்பட்டியை சேர்ந்த ராமராஜ் மகன் ரவி கிருஷ்ணா (வயது 27). இவரும் காமராஜ், சூர்யா ஆகிய 3 பேரும் டாட்டா ஏசி வாகனத்தின் மூலம் டி.வி.எஸ்.விளம்பரம் மற்றும் நோட்டீஸ் கொடுக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியில் விளம்பரம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் ரவிகிருஷ்ணாவை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறிக்க முயன்றனர். அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் 3 பேரை பிடிப்பதற்கு வரும்போது 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    ஒருவரை பிடிதது திருவெண்ணெய்நல்லூர் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்ற கண்டம்பாக்கம் குணசேகர் மகன் முருகையன் (28) என்பவரை கைது செய்து, தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    ×