search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவரை கத்தியால் குத்திய பெண்
    X

    கணவரை கத்தியால் குத்திய பெண்

    • கணவரை கத்தியால் குத்திய பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    • காயமடைந்த சுதர்சன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை இந்திரா நகரை சேர்ந்தவர் சுதர்சன் (34). இவர் மணிமேகலை என்ற பிரியா(29) என்பவரை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். சுதர்சனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று மாலை சுதர்சன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதை மணிமேகலை தட்டி கேட்டார். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த மணிமேகலை காய்கறி வெட்டும் கத்தியால் கணவரை குத்தினார். காயமடைந்த சுதர்சன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×