search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் பரபரப்பு:  வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது
    X

    திண்டிவனத்தில் பரபரப்பு: வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

    • அருள் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார்.
    • அருள்மற்றும் அவரது கூட்டாளியாள ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் பிரேம் ராஜை சரமாரியாக வெட்டியதாக தெரிவித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ் (வயது 21) இவர் நேற்று நொலம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார். அங்கு சென்ற பயணக்களைப்பில் அந்த பகுதியில் உள்ள குளம் அருகே தூங்கினார். அப்போது ஈச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் அங்கு வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார். பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம் ராஜுக்கும் அருளுக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அருள், சிறுத்தை என்கின்ற ஸ்ரீகாந்த் என்பவரும் சேர்ந்து பிரேம்ராஜை அறிவானால் வெட்டியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதன்பின்னர் போலீசார் அருள், ஸ்ரீகாந்தை விலை வீசிதேடிவந்த நிலையில் ஓங்கூர் டோல்கேட் அருகே மறைந்திருந்த அருள் மற்றும் ஸ்ரீகாந்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அருளை போலீசார் விசாரணை செய்ததில் பிரேம்ராஜ் அருளிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார். அதை அருள் கேட்டதற்கு தர வேண்டிய பணத்தை பிரேம்ராஜ் திருப்பி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அருள்மற்றும் அவரது கூட்டாளியாள ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் பிரேம் ராஜை சரமாரியாக வெட்டியதாக தெரிவித்துள்ளார்.மேலும் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×