என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் திருவிழாவில் அண்ணன்- தம்பிக்கு கத்திக்குத்து
    X

    கோவில் திருவிழாவில் அண்ணன்- தம்பிக்கு கத்திக்குத்து

    • சாத்தூர் அருகே கோவில் திருவிழாவில் அண்ணன்- தம்பியை கத்தியால் குத்திய 5 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • காதல் திருமணம் செய்தது தொடர்பாக முத்துகுமாரிடம் தகராறு செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நடுசூரங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது25). இவர் அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் மகள் மகாலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று ஊர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடந்தது. இதில் முத்துகுமார், அவரது அண்ணன் அஜித்குமார், தம்பி அரவிந்த்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது சந்திரகுமார் அவரது மகன் சூர்யா, பார்த்திபன், பாலமுருகன், தாஸ்குட்டி ஆகிய 5 பேரும் காதல் திருமணம் செய்தது தொடர்பாக முத்துகுமாரிடம் தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட மோதலில் அஜித்குமார், அரவிந்த்குமார் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு 5 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் காயமடைந்த 2 பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி முத்துகுமார் புகார் செய்ததின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கத்தியால் குத்திய 5 பேரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×