search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்திவெட்டு"

    • மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
    • மனைவி ஆள் வைத்து கொலை செய்ய திட்டமிட்டாரா? என விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரிய கோமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 42), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி ரூபா(38) மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ராஜேஷ்குமார் நேற்று இரவு வீட்டின் வாசலில் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் ராஜேஷ்குமாரை சரமாரியாக தாக்கியதோடு, அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    வலி தாங்க முடியாமல் கூச்சுலிட்டபடி ராஜேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், படுகாயம் அடைந்த ராஜேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உமாரபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    ராஜேஷ்குமார் முன்னதாக ஒரு கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்துள்ளார். தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்யும் அவரது மனைவி ரூபாவுக்கும், வேறொரு நபருக்கும் தொடர்பு இருந்துள்ளது.

    இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. விசாரணையின் போது அவரது மனைவி ரூபா மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ரூபா தனது கணவனை ஆள் வைத்து கொலை செய்ய திட்டமிட்டாரா?, அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.

    குற்றவாளிகள் கைது செய்த பின்னரே, ராஜேஷ் குமாரை வெட்டியதற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.

    இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அருள் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார்.
    • அருள்மற்றும் அவரது கூட்டாளியாள ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் பிரேம் ராஜை சரமாரியாக வெட்டியதாக தெரிவித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ் (வயது 21) இவர் நேற்று நொலம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார். அங்கு சென்ற பயணக்களைப்பில் அந்த பகுதியில் உள்ள குளம் அருகே தூங்கினார். அப்போது ஈச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் அங்கு வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார். பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம் ராஜுக்கும் அருளுக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.  மேலும் அருள், சிறுத்தை என்கின்ற ஸ்ரீகாந்த் என்பவரும் சேர்ந்து பிரேம்ராஜை அறிவானால் வெட்டியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதன்பின்னர் போலீசார் அருள், ஸ்ரீகாந்தை விலை வீசிதேடிவந்த நிலையில் ஓங்கூர் டோல்கேட் அருகே மறைந்திருந்த அருள் மற்றும் ஸ்ரீகாந்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அருளை போலீசார் விசாரணை செய்ததில் பிரேம்ராஜ் அருளிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார். அதை அருள் கேட்டதற்கு தர வேண்டிய பணத்தை பிரேம்ராஜ் திருப்பி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அருள்மற்றும் அவரது கூட்டாளியாள ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் பிரேம் ராஜை சரமாரியாக வெட்டியதாக தெரிவித்துள்ளார்.மேலும் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×