search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srinagar"

    ஜம்மு காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari #RajnathSingh #RahulGandhi
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை செயல்பட்டு வருகிறது. இதன் ஆசிரியராக இருந்தவர் ஷுஜாத் புகாரி.

    இன்று மாலை ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் காரில் சென்றபோது, அவரை வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார், அவரது பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.

    இதையடுத்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவரது பாதுகாவலர்களில் ஒருவரும் இறந்தார்.

    பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு முதல் மந்திரி மெகபூபா முப்தி கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், ஸ்ரீநகரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறுகையில், பத்திரிகை ஆசிரியரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளின் செயல் மிகவும் கோழைத்தனமானது. பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி மிக துணிச்சலானவர். அவரது இறப்பு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

    இதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், அமைதி நிலவ வேண்டும் என்பதிலும் அவர் தீவிரமாக போராடி வந்தார். அவரது இறப்பு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari #RajnathSingh #RahulGandhi
    ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி என்பவரை பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை செயல்பட்டு வருகிறது. இதன் ஆசிரியராக இருந்தவர் ஷுஜாத் புகாரி.

    இன்று மாலை ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் நடைபெற்ற இப்தார் விருந்தில் கலந்து கொண்டு திரும்பினார். அப்போது அவரை  வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார், அவரது பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.



    இதையடுத்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவரது பாதுகாவலர்களில் ஒருவரும் இறந்தார்.

    பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு முதல் மந்திரி மெகபூபா முப்தி கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஆம்வாரி ஜீரோ பாலத்தில் இருந்து சிறுவன் ஒருவன் தவறி ஆற்றில் விழுந்துள்ளார். இதைக்கண்ட அப்பகுதியில் இருந்த ஷகிர் வானி என்ற வாலிபர் விரைந்து செயல்பட்டு ஆற்றில் விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளார்.

    ஆனால், சிறுவனை காப்பாற்றி கரை சேர்த்த சில வினாடிகளில் ஷகிரை வெள்ளம் இழுத்து சென்றது. இதனால் அவர் சிறிது நேரத்தில் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஷகிர் பி.யு.சி படிக்கும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறிதும் அஞ்சாமல் சிறுவனின் உயிரை காப்பாற்ற தன் உயிரை இழந்த 16 வயது சிறுவனின் உடலுக்கு அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில், 19 வீரர்கள் காயமடைந்துள்ளனர். #JammuAndKashmir #CRPFvehicleaccident
    ஸ்ரீநகர்:

    இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘இன்று அதிகாலை 21 பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்ற வாகனம், பெமினா தலைமையகம் அருகே செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சுமார் 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகாமையில் உள்ள ஜெ.வி.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் ஸ்ரீநகரில் உள்ள இராணுவ முகாம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஒரு வீரர் மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார். #JammuAndKashmir #CRPFvehicleaccident
    ஜோசிலா சுரங்கப்பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்காக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள பிரதமர் மோடியின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக அங்குள்ள பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அத்துமீறி வருவதாக பிரிவினைவாத அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரிவினைவாத தலைவர்களான மிர்வாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா கிலானி ஆகியோர் தலைமையில் ஸ்ரீநகரின் மையப்பகுதியான லால் சவுக் பகுதியை நோக்கி இன்று 11 மணிக்கு பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால் பிரதமர் மோடியின் வருகையையொட்டி, அந்த பேரணியை நிறுத்துவது மற்றும் இதர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரிவினைவாத தலைவர்களான மிர்வாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா கிலானி ஆகியோர் அவரவர் வீடுகளிலேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மிர்வாய்ஸ் உமர் பாரூக், ‘ஜனநாயகம் மீதான நம்பிக்கையை ஆளும் அரசு மீண்டும் தர மறுத்துள்ளது. நாங்கள் அமைதியான முறையில் பேரணியை நடத்துவோம்’ என பதிவிட்டிருந்தார்.

    மோடியின் வருகைக்காக அப்பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஷேர் இ காஷ்மீர் சர்வதேச கருத்தரங்க மையத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நாளை பிரதமர் அங்கிருந்து கிளம்பும் வரை நீட்டிக்கப்படும் எனவும் போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. #separatist #ModiVisitJK #housearrest
    ×