search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூழ்குதல்"

    • பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    • தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. அணைகளுக்கு நீர் வரத்து அதிகம் உள்ளதால், அங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் ஆற்றில் வர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நீர் நிலைகளில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் அரவிந்த் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆற்றுப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகளும், போலீசாரும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் மற்றும் ஆற்றில் வரும் தண்ணீர் ஆகியவற்றை கவனித்து உள்ளூர் மக்கள் விபத்தை தவிர்த்து வருகின்றனர். ஆனால் சுற்றுலா பயணிகள் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியாகி வருவது சோக கதையாக உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு காளிகேசம் பகுதியில் தலை தீபாவளி கொண்டாட வந்த என்ஜினீயர் ஷியாம், ஆற்று நீரில் சிக்கிய தனது மனைவி சுஷ்மாவை காப்பாற்ற முயன்ற போது, தண்ணீரில் மூழ்கி பலியானார்.

    இந்த சோகம் மறைவ தற்குள் சுற்றுலா வந்த 2 பேர் மற்றொரு சம்பவத்தில் பலியாகி விட்டனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இத னைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆசியாவிலேயே மிகவும் உயரமானதும் நீள மானதுமான மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழ் பகுதியில் ஓடும் பரளி யாற்றில் குளித்து வருகின்ற னர்.

    சென்னை வியாசர்பாடி சுந்தரம் நகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சேகர் மகன் கார்த்திகேயன் (வயது 30) அவரது நண்பர் நாகராஜ் (30), இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் நாசர் (30), டிராவல் ஏஜென்சி நடத்தும் அஜித் (25) தையல் வேலை பார்க்கும் ராஜீவ் (30), தனியார் நிறுவன ஊழியர்கள் சங்கர் (25), ரமேஷ் ஆகிய 7 பேரும் கடந்த 28-ந் தேதி சென்னையிலிருந்து சுற்றுலாவாக குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றனர்.

    நேற்று மதியம் அவர்கள் குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிபாலம் வந்தனர்.அவர்களில் கார்த்திகேய னுன், நாகராஜ் ஆகி யோர் பரணியாற்றில் குளிப்ப தற்காக இறங்கினர்.

    அப்போது வெள்ள த்தில் சிக்கி 2 பேரும் பலியானார்கள். குலசே கரம் தீயணைப்பு அலுவலர் மைக்கேல் தனபாலன் தலைமையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கார்த்திகேயன், நாகராஜ் உடல்கள் மீட்கப்பட்டன.

    தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் நேரில் வருகை தந்து விசாரணை நடத்தினார். மாத்தூர் தொட்டிப்பா லத்தில் கூட்டம் அதிகமாக வரும் நாட்களில் கூட போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்படுவது இல்லை. தண்ணீரில் இறங்கக்கூடாது என எச்சரிக்கை பலகை வைத்திருந்தும் ஆற்றில் குளிக்க இறங்கி விபத்தில் சிக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகளே அதிகம். இதனால் தொட்டி ப்பாலத்தின் கீழ் பகுதியில் சுற்றுலா பயணி களின் நலனை கருத்தில் கொண்டு இரு காவலர்களை தொட்டி ப்பாலத்தின் கீழ் பகுதி யில் பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டியது அவசியம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அதுபோல் பொது ப்பணித்துறை ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து எந்த வித எச்சரிக்கையும் தெரிவிக்காமல் திறந்து விட்டதால் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து. இனிமேலாவது தண்ணீர் திறந்து விடும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    • வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் மாவடிகுளத்தில் குளித்த போது வலிப்பு ஏற்பட்டதில் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பின் பெனட் (வயது 45). கூலித் தொழிலாளி. இவர் வலிப்பு நோய் வந்து அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். ஆல்பின் பெனட் தனது 2 குழந்தைகளுடன் மாடத்தட்டுவிளையில் உள்ள அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆல்பின் பெனட் மாடத்தட்டுவிளையில் உள்ள மாவடிகுளத்திற்கு குளிக்க சென்றார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. தண்ணீரில் மூழ்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் ஜாண் ஜஸ்டஸ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • இவர், காலை திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திக்குட்பட்ட பகோடு பனம்பழஞ்சி விளையை சேர்ந்தவர் வல்சலா (வயது 68) மகன் வீட்டில் வசித்து வந்த இவர், காலை திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. பின்னர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்த போது ஞாறான்விளை பகுதி ரெயில்வே லைன் அருகில் உள்ள வாய்க்காலில் மூழ்கி வல்சலா இறந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது மகன் கிரீஸ் மார்த்தாண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×