search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SPEECH COMPETITION"

    • நூலகம் குறித்து பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
    • வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் வரவேற்றார்.

    சீர்காழி:

    சீர்காழி கிளை நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய தேசிய நூலக வார நிறைவு விழா இரண்டாம் நிலை நூலகர் ஜெ.ஜோதி தலைமையில் நடைபெற்றது.

    காழிகம்பன் வெங்கடேசபாரதி, ச.மு.இ.மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் எம்.தங்கவேலு, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சு.வீழிநாதன், ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் வரவேற்றார்.

    தொடர்ந்து மாணவ-மாணவிகளின் நூலகம் குறித்து பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிறைவில் நூலக பணியாளர் க.ரகு நன்றிக்கூறினார்.

    • உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் விண்வெளி குப்பைகள் தணிக்கும் முறைகள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவி மரிய புஷ்பத்தை பள்ளி தாளாளர் சாமுவேல பாஸ்கர் ராஜ், முதல்வர் கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    நெல்லை:

    உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் விண்வெளி குப்பைகள் தணிக்கும் முறைகள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

    இதில் பாளை பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளி மாணவி மரிய புஷ்பம் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவருக்கு கேரள முதல்-அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குனருமான சந்திர தத்தன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

    வெற்றி பெற்ற மாணவி மரிய புஷ்பத்தை பள்ளி தாளாளர் சாமுவேல பாஸ்கர் ராஜ், முதல்வர் கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடத்தப்பட உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் 2021- 22-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் (பதின்மப் பள்ளிகள் உள்பட) படித்து வரும் மாணவர்களுக்கும் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிய), அனைத்துக் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியன) படித்து வரும் மாணவர்களுக்கும் வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமையன்று) சிவகங்கை மருது பாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில், மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்த போட்டிகளில்் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும்் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

    அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணாவர்கள் இருவரை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்் வழங்கப்பட உள்ளன.

    பள்ளி மாணவர்களு க்கான பேச்சுப் போட்டிகள் 14-ந் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கியும்், கல்லூரி மாணவர்களுக்்்கான பேச்சு போட்டிகள் 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியும் நடத்தப்பட உள்ளன.

    இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து தலைமையாசிரியா், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும்் பெற்று சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

    கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (04575-241487, 99522 80198) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • மாணவ, மாணவிகளுக்கு, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடந்தன.

    உடுமலை :

    ஆண்டு தோறும், வன உயிரின வார விழா அக்டோபர் முதல் வாரம் கொண்டாடப்படுகிறது. இரு ஆண்டு இடைவெளிக்குப்பின் நடப்பாண்டு ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு வனம், வன விலங்குகள் குறித்தும், இயற்கை காப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    அதன் அடிப்படையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்படுகிறது. , உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடந்தன.ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ்ராம் தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில், மாணவர்களுடன், அதிகாரிகள் மரக்கன்று நடவு செய்து, விழா துவங்கியது. தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடந்தன.திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    அமராவதி நகர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் உள்ள மாணவர்கள், பேச்சுப்போட்டியில் ஆர்வமாக பங்கேற்றனர். தளிஞ்சி வயல் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த மாணவர்கள், வனம் காப்பதன் அவசியம் குறித்து பேசியது வனத்துறையினர் மற்றும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இப்போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் வன உயிரின வார விழா போட்டியில் பங்கேற்பார்கள் எனவும் அனைத்து மாணவர்களுக்கும், பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், ஆர்.ஜி.,எம் பள்ளி மேலாளர் கார்த்திகேயன் மற்றும் வனத்துறையினர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    வன உயிரின வார விழாவில் ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் இணைய வழி வாயிலாக நடக்கிறது. ஓவியப்போட்டி, வன உயிரினங்கள் பாதுகாப்பில் நமது பங்களிப்பு 'வன உயிரினங்களை பாதுகாத்தலின் அவசியம் ஆகிய தலைப்பிலும், கட்டுரை போட்டி, 'மனித- வன உயிரினங்களுக்கு இடையிலான சக வாழ்வு' என்ற தலைப்பிலும் நடக்கிறது. எல்.கே.ஜி., முதல் கல்லூரி வரையிலான பிரிவுகளில், மாணவ மாணவிகள் தங்களது, ஓவியம் மற்றும் கட்டுரை விபரங்களை wlw2020atrtpr@gmail.com என்ற இணையதளத்தில், வரும் 28ந் தேதி, மாலை 5:30 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • தொடர்ந்து நடைபெற்ற பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணாவின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் கணிதத் துறை மாணவி சுபாஷினி போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் மூன்றாம் பரிசு பெற்றார்.

    மேலும் பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக 14 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

    இதில் மூன்றாம் ஆண்டு தமிழ்துறை மாணவன் சூர்யா இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கல்லூரி முதல்வர்முனைவர் விஜயலட்சுமி கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி பேரவை தலைவர் குமார், தமிழ்துறை தலைவர் சசிகுமார், துறை தலைவர்கள் நாராயணசாமி, சாந்தி, கார்த்திகா, உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன், நூலகர் சுப்பிரமணியன், நுண்களை மன்ற போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வாழ்த்து பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

    மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    தமிழ்வளர்ச்சி துறை சார்பில் காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், ஈ.வெ.ரா., அண்ணா , கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, பேச்சுப்போட்டி நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி அண்ணா , ஈ.வெ.ரா., பிறந்தநாளையொட்டி உடுமலை கல்வி மாவட்ட அளவிலான போட்டி, பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.போட்டியை, தலைமையாசிரியர் விஜயா துவக்கி வைத்தார். உடுமலை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி, பள்ளித்துணை ஆய்வாளர் கலைமணி ஆகியோர் பார்வையிட்டனர்.தமிழாசிரியர்கள் சின்னராசு, ரேணுகா, வசந்தி ஆகியோர் நடுவர்களாகச்செயல்பட்டனர்.

    இதில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல, போட்டியை தமிழாசிரியர் ராஜேந்திரன், கலை ஆசிரியர் லாவண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்படும் தலா 5 பேர் திருப்பூரில் நாளை 15, 17 ஆகிய தேதிகளில் நடக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கவும் உள்ளனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன.
    • அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற 15ந் தேதி அன்றும் பெரியார் பிறந்தநாளையொட்டி17ந் தேதியன்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன.

    பள்ளி மாணவர்களுக்கு காலை 10 மணி முதலும், கல்லூரி மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதலும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பேச்சுப்போட்டிகள் நடை பெறவுள்ளன. இப்போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாண விகள் கலந்துக்கொள்ளலாம்.

    அண்ணா பிறந்தநாளை யொட்டி பள்ளி மாணவ ர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு "தாய் மண்ணிற்குப் பெயர் சூட்டிய தனயன், மாணவ ர்க்கு அண்ணா, அண்ணா வின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம்" எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு" பேரறிஞர்அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்,

    பேரறிஞர் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சு வட்டில், தம்பி ! மக்களிடம் செல்" எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

    பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு " தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ்ச்சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்" எனும் தலைப்புகளிலும்,

    கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு "தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனி வரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியார், உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும்" எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

    பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும்.

    அதே போன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும்.

    கல்லூரி பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000, என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும்.

    இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    • பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேச்சு போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பெரியாா், அண்ணா பிறந்த நாளையொட்டி வருகறி 15, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    அனைத்துப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவா்களும் இதில் பங்கேற்கலாம். ராமநாதபுரம் வெளிப்பட்டினம் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறிப்பிட்ட தேதிகளில் காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வரிடம் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று ராமநாதபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலும், 99522 80798 என்ற மொபைல் எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன.
    • அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்து ள்ளார்.

    தேனி:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற 15ந் தேதி அன்றும் பெரியார் பிறந்தநாளையொட்டி17ந் தேதியன்றும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன.

    பள்ளி மாணவர்களுக்கு காலை 10 மணி முதலும், கல்லூரி மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதலும் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பேச்சுப்போட்டிகள் நடை பெறவுள்ளன. இப்போட்டிகளில் தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாண விகள் கலந்துக்கொள்ளலாம்.

    அண்ணா பிறந்தநாளை யொட்டி பள்ளி மாணவ ர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு "தாய் மண்ணிற்குப் பெயர் சூட்டிய தனயன், மாணவ ர்க்கு அண்ணா, அண்ணா வின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம்" எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு" பேரறிஞர்அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், பேரறிஞர் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சு வட்டில், தம்பி ! மக்களிடம் செல்" எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

    பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு " தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ்ச்சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்" எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு "தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனி வரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியார், உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும்" எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

    பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும். அதே போன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும்.

    கல்லூரி பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000, என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும்.

    இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்து ள்ளார்.

    • பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது
    • தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்றது

    கரூர்:

    தமிழ் வளர்ச்சித்துறை பேச்சுப் போட்டி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் வே.ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கரூர் மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி 10 தலைப்புகளில் மாணவர்கள் பேசினார்கள். போட்டியில் புகழூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவி சி.ரித்திஸ்ரீ முதலிடம், கரூர் பரணி வித்யாலயா மேல் நிலைப் பள்ளி 12ம் வகுப்பு மாணவர் ச.சாய்ரித்திக் 2ம் இடம், தம்மநாய்க்கன்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவி து.திவ்யதாரணி 3ம் இடம் பெற்றனர்.

    அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுக்கு கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ஜோ.ரத்தினவேல்பாண்டி, மலைக்கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவி மு.திவ்யா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இம்மாணவர்களுக்கு முதற்பரிசாக ரூ.5,000, 2ம் பரிசு ரூ.3,000, 3ம் பரிசு ரூ.2,000, சிறப்பு பரிசு ரூ.2,000 வீதம் இரு மாணவர்களுக்கும் வழங்கப்படும். பரிசுத் தொகை காசோலை, பாராட்டுச் சான்றிதழ்கள் ஆட்சியரால் பின்னர் வழங்கப்படும்.

    முதுகலைத் தமிழ் ஆசிரியர்கள் ந.உமாமகேஸ்வரி, ரா.தேவி, த.தேன்மொழி ஆகியோர் நடுவர்களாக பணிபுரிந்தனர். இப்போட்டிக்கான முன்னேற்பாடுகள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.

    • கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடந்தது.
    • அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 24 மாணவர்கள் பேச்சுப்போட்டியில் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் வளர்ச்சிமன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது. அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 24 மாணவர்கள் பேச்சுப்போட்டியில் பங்கேற்றனர்.

    போட்டிகளுக்கு, சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியை ஜான்சி ராணி, ந.சுப்பையாபு ரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் ராஜசேகர். வெள்ளையா புரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் வேல்முருகன் ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிந்தனர்.

    விருதுநகர் முதன்மைக்கல்வி அலு வலகத்தின் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பா ளர் தங்க மாரியப்பன் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

    பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டியில் தளவாய்புரம் பெருந்தலைவர் காமராஜ் பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராசர் மேல்நிலைப்பள்ளி மாணவி வைதேகி இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கார்த்தீஸ்வரி, 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வென்றனர்.

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப்பரிசாக வழங்கப்ப டும். ரூ.2ஆயிரத்தை ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மாரீஸ்வரி, மேலப்பருத்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஹரிணி ஆகியோர் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கான பரிசுத்தொகைகள் பிறிதொரு நாளில் கலெக்டர் முன்னிலையில் வழங்கப்பெறும் என விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி த்துறை உதவி இயக்குநர் சுசிலா தெரிவித்துள்ளார்.

    • சா்க்காா் பெரியபாளையம் அரசு உயா்நிலை பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமையில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
    • பல்வேறு பள்ளிகளில் இருந்து 44 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

    திருப்பூர் :

    முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சா்க்காா் பெரியபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமையில் நடைபெற்றது.

    இதில், பல்வேறு பள்ளிகளில் இருந்து 44 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.இதில், அவிநாசி புனித தோமையா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கெளரி முதலிடத்தையும், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதி இரண்டாம் இடத்தையும், பெருமாநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.

    அதேபோல, கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஹசீனா மற்றும் குண்டடம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா் கிஷோா் சங்கா் ஆகியோா் சிறப்புப்பரிசுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

    ×