search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி பேச்சுப் போட்டிகள்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி பேச்சுப் போட்டிகள்

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன.
    • அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற 15ந் தேதி அன்றும் பெரியார் பிறந்தநாளையொட்டி17ந் தேதியன்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன.

    பள்ளி மாணவர்களுக்கு காலை 10 மணி முதலும், கல்லூரி மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதலும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பேச்சுப்போட்டிகள் நடை பெறவுள்ளன. இப்போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாண விகள் கலந்துக்கொள்ளலாம்.

    அண்ணா பிறந்தநாளை யொட்டி பள்ளி மாணவ ர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு "தாய் மண்ணிற்குப் பெயர் சூட்டிய தனயன், மாணவ ர்க்கு அண்ணா, அண்ணா வின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம்" எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு" பேரறிஞர்அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்,

    பேரறிஞர் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சு வட்டில், தம்பி ! மக்களிடம் செல்" எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

    பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு " தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ்ச்சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்" எனும் தலைப்புகளிலும்,

    கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு "தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனி வரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியார், உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும்" எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

    பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும்.

    அதே போன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும்.

    கல்லூரி பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000, என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும்.

    இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×