search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna's birthday"

    • தீபிகாஸ்ரீ 2-வது பரிசும், காங்கயம் அரசு கல்லூரி மாணவர் ஜெயசூர்யா 3-வது பரிசும் பெற தேர்வானார்கள்.
    • திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி செண்பகம் 3-வது பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடந்தது.இதில் நடந்த பேரறிஞர் அண்ணா பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பரங்கிரி முதல் பரிசும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ரூபன் 2-வது பரிசும், திருப்பூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவி வினித்தா 3-வது பரிசும், அய்யன்காளி பாளையம் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரேணுகா மற்றும் குமார்நகர் மாநகராட்சி பள்ளி மாணவி பானுப்பிரியா ஆகியோர் சிறப்பு பரிசும் பெற தேர்வு பெற்றனர். கல்லூரி மாணவர்கள் பிரிவில் தாராபுரம் அரசு கல்லூரி மாணவர் பிரவீன் முதல் பரிசும், மாணவி தீபிகாஸ்ரீ 2-வது பரிசும், காங்கயம் அரசு கல்லூரி மாணவர் ஜெயசூர்யா 3-வது பரிசும் பெற தேர்வானார்கள்.

    பின்னர் நடந்த பெரியார் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மவுனிகா முதல் பரிசும், வேலம்பாளையம் ஜெய்சாரதா மேல்நிலைப்பள்ளி மாணவி ஜிஷப்பிரியா 2-வது பரிசும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் அன்பரசு 3-வது பரிசும், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் முகமது அஜிம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்துஜா ஆகியோர் சிறப்பு பரிசும் பெற தேர்வானார்கள்.

    கல்லூரி மாணவர்கள் பிரிவில் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி காயத்திரி முதல் பரிசும், தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் கவுதமன் 2-வது பரிசும், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி செண்பகம் 3-வது பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.

    • தாராபுரம் நகர கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
    • செங்கோட்டையன் நம்பிக்கை துரோகம் செய்ததால் ஜெயலலிதா அவர் பதவியை பறித்தார் என்றார்.

    தாராபுரம்:

    திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தாராபுரம் நகர கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் அமமுக., துணைச் செயலாளரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான சி. சண்முகவேலு தலைமை தாங்கினார்.

    திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கே.பி. நல்லசாமி, அமமுக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் எம். ஆர்.ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட அமமுக., செயலாளர் கே.பி. நல்லசாமி பேசுகையில்;- அதிமுக., முன்னாள் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை துரோகம் செய்ததால் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர் பதவியை பறித்தார் என்றார்.  

    • பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    தமிழ்வளர்ச்சி துறை சார்பில் காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், ஈ.வெ.ரா., அண்ணா , கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, பேச்சுப்போட்டி நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி அண்ணா , ஈ.வெ.ரா., பிறந்தநாளையொட்டி உடுமலை கல்வி மாவட்ட அளவிலான போட்டி, பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.போட்டியை, தலைமையாசிரியர் விஜயா துவக்கி வைத்தார். உடுமலை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி, பள்ளித்துணை ஆய்வாளர் கலைமணி ஆகியோர் பார்வையிட்டனர்.தமிழாசிரியர்கள் சின்னராசு, ரேணுகா, வசந்தி ஆகியோர் நடுவர்களாகச்செயல்பட்டனர்.

    இதில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல, போட்டியை தமிழாசிரியர் ராஜேந்திரன், கலை ஆசிரியர் லாவண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்படும் தலா 5 பேர் திருப்பூரில் நாளை 15, 17 ஆகிய தேதிகளில் நடக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கவும் உள்ளனர்.

    • பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்க வேண்டுகோள்
    • அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ. அறிக்கை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் அரக்கோணம் எம்.எல்.ஏ.வுமான சு.ரவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வரும் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    அன்றைய தினம் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர் கிளை கழக செயலாளர் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் இணைந்து அண்ணாவின் பிறந்த நாளில் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கிக் கொண்டாட வேண்டும்.

    பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென அ.தி.மு.க.வினற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தமிழக இளைஞர்களை திசை திருப்பி வரும் தி.மு.க.வுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என சு.ரவி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • போட்டியை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் விளையாட்டு பிரிவின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயது,17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தலா 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு தலா 15 கிலோ மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

    போட்டியை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, திருப்பூர் மாவட்ட கபடி கழக இணை செயலாளர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜகோபால் வரவேற்றார்.

    13 வயதுக்கு உட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி மாணவர் சபரீஸ்வர் முதலிடத்தையும், காங்கயம் எஸ்.ஆர்.ஆர். பள்ளி மாணவர் உதயகிரி 2-வது இடத்தையும், ஹரிஸ்ராம் 3-வது இடத்தையும் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி சர்நிதா முதலிடத்தையும், விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவிகள் தீக்ஷனா 2-வது இடத்தையும், சஞ்சனா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    15 வயதுக்கு உட்பட்டோர் மாணவிகள் பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி மாணவி அனுஸ்ரீ முதலிடத்தையும், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி மாணவி வர்ஷிதா 2-வது இடத்தையும், பொம்மநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவி அபிநயா 3-வது இடத்தையும் வென்றனர். மாணவர்கள் பிரிவில் காங்கயம் எஸ்.ஆர்.ஆர். பள்ளி மாணவர்கள் சஞ்சீவ் ராகவேந்திரா முதலிடத்தையும், அஸ்வின் 2-வது இடத்தையும், கருப்பகவுண்டம்பாளையம் அரசு பள்ளி மாணவர் பரத்ராம் 3-வது இடத்தையும் பெற்றனர்.

    17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் காங்கயம் எஸ்.ஆர்.ஆர்.பள்ளி மாணவர்கள் விஷ்ணு வர்தன், சிவபாலாஜி, அருண்விஷால் ஆகியோர் முறையே 3 இடங்களை பிடித்தனர். மாணவிகள் பிரிவில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் அபிநயாஸ்ரீ, அஞ்சலி சில்வியா, மதுமிதா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். மொத்தம் 87 மாணவிகள், 129 மாணவர்கள் பங்கேற்றார்கள்.

    வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் 4-வது இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    • சைக்கிள் போட்டி 3 பிரிவு களில் நடத்தப்படுகிறது. 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ண யிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை சார்பில் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி வருகிற 15-ந் தேதி காலை 7 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

    இந்த போட்டி 3 பிரிவு களில் நடத்தப்படுகிறது. 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

    15 வய துக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ண யிக்கப்பட்டு உள்ளது.

    இந்த போட்டி பாளை யங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி, டி.ஐ.ஜி. பங்களா வழியாக திருச்செந்தூர் சாலையில் நடக்க உள்ளது.

    இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். அதேபோல் 4-வது முதல் 10-வது இடம் வரை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.250 வழங்கப்படும்.

    இந்த போட்டிக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று கண்டிப்பாக வருகிற 13-ந்தேதிக்குள் நெல்லை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • 13, 15 மற்றும் 17 வயது ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது

    திருப்பூர் :

    மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடக்கும் சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் விழா வைமுன்னிட்டு நாளை 9-ந்தேதி சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.

    13, 15 மற்றும் 17 வயது ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது.சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் நம் நாட்டில் தயாரான சாதாரண சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆர்வமுள்ளவர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வயது சான்றிதழ், எமிஸ் எண் பெற்று வர வேண்டும்.போட்டி துவங்குமிடத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து பெயர் பதிவு செய்ய வேண்டும். முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய். இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு முறையே 3 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தகுதியான மாணவர்களை தேர்வு செய்து அதற்கான ஆவணங்களுடன் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×