search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Three grand festival"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. அழைப்பு
    • தொண்டர்கள் திரண்டு வாருங்கள்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்ட பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆளும் வர்க்கதினால் அடிமைபட்டுகிடந்த சமூகத்தை ஆர்ப்பரித்து வீறுகொண்டு எழுந்திட உதயமான சமூக சீர்த்திருத்த இயக்கமான அண்ணா கண்ட திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய நாளில் மாநகர ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கிளை அமைப்புகளில் இருவண்ண கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடிவோம்.

    தீண்டாமையினாலும், மூட பழக்கவழக்கத்தினாலும் பிற்ப்போக்குதனமாக வாழ்க்கையில் உழன்றுக்கொண்டிருந்த சமூகத்தை தனது முற்ப்போக்கு சிந்தனையால் தட்டி எழுப்பி சமத்துவ சமுதாயத்தை படைத்த சமத்துவ பெரியார் அவர்களின் 145–-வது பிறந்த நாளான வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி போற்றுவோம்.

    17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் நமது வேலூர் அடுத்த பள்ளிகொண்டா டோல்கேட் அருகில் கழக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெறும் கழக பவள விழா, கழக முன்னோடி களுக்கு விருது வழங்கும் முப்பெரும் விழாவில் கழக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருது வழங்கி, விழா பேருரை ஆற்ற உள்ளார்கள்.

    மேலும் இந்நிகழ்வில் கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

    எனவே மாநில தலைமைகழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, மாநிலங்க ளவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில அணிகளின் துணை செயலாளர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் அணிகளின் நிர்வாகிகள், வட்ட, வார்டு, ஊராட்சி வார்டு கிளைக் கழக நிர்வாகிகள், கழக முன்னோ டிகள், கழக புரவலர்கள், கழக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் அலைகடலென திரண்டு பங்கேற்று விழாவினை சிறப்பித்திட வேண்டுமாய் வருக வருக என அன்போடு வரவேற்று கேட்டுக்கொள்கிறேன்.

    வேலூரில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.மணி அளவில் நடைபெற உள்ள கழக பவள விழா, கழக முன்னோடிகளுக்கு விருது வழங்கும் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு விழா பேருரை ஆற்ற நாளை சனிக்கிழமை அன்று இரவு 7மணி அளவில் காட்பாடி ெரயில் நிலையத்திற்கு வருகை தரும் கழக தலைவர், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு. க ஸ்டாலினுக்கு கழக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    முதல்-அமைச்சரை உள்ளன்போடும், உற்சாகத்தோடும் வரவேற்றிட அனைவரையும் வருக, வருக என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடக்கிறது
    • முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    வேலூர்:

    தி.மு.க.வின் பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா, வேலூர் அடுத்த கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

    இதில், தி.மு.க. தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

    இதில் வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் முதல் - அமைச்சர் பங்கேற்று, வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.

    கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல் - அமைச்சர் வேலூருக்கு வருகிற 16-ந் தேதியே வந்துவிடுகிறார்.

    அதன்படி, சென்னையில் இருந்து 16-ந் தேதி மாலை ரெயிலில் புறப்பட்டு, அன்று இரவு 7.30 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு முதல் அமைச்சர் வருகிறார். அவருக்கு தி.மு.க. கட்சியினர் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    தொடர்ந்து, அன்று இரவு, விருந்தினர் மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் முதல் அமைச்சர் தங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகிறது.

    மறுநாள் 17-ந் தேதி காலை 10.15 மணிக்கு, மேல்மொணவூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாமுக்கு செல்கிறார். அங்கு நிகழ்ச்சிக்கான மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. சிறிய அளவிலான பிளாட்பாரம் மட்டும் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து மேல்மொணவூர் முகாம் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற இடங்களிலும் கட்டப்பட்டுள்ள வீடுகளை காணொளி மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    பின்னர், மேல்மொணவூர் முகாமில் உள்ள ஒரு சில வீடுகளை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு சாவியை ஒப்படைக்கிறார். தொடர்ந்து, தி.மு.க. முப்பெரும் விழா நடக்கும் கந்தனேரிக்கு செல்கிறார்.

    அங்கு தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று, கொடியேற்றி வைத்த பின்னர் மீண்டும் வேலூர் வந்து ஓய்வெடுக்கிறார்.

    அன்று மாலை விழா மேடைக்கு செல்லும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, வேலூர் வரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு பணியிலும் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

    இதனால், வேலூர் மாவட்ட அதிகாரிகள் மட்டுமின்றி, தி.மு.க.வினரும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    • முதல் - அமைச்சர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்
    • பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது

    வேலூர்:

    வேலூர் பள்ளி கொண்டா சுங்க சாவடி அருகே வருகிற 17-ந்தேதி தி.மு.க. 75-வது ஆண்டு பவளவிழாவுடன் கூடிய முப்பெரும் விழா பிரமாண்டமாக நடக்கிறது.

    இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க.வினர் கலந்து கொள்கின்றனர். முதல் - அமைச்சர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் பந்தக்கால் நட்டு ேமடை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது.

    இதில் அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், அணை க்கட்டு ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஹரிபிரசாத் உட்பட பல்வேறு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    • வருகிற 17-ந் தேதி நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் வருகிற 17-ந் தேதி வேலூரில் தி.மு.க பவள விழாவுடன் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

    பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வழிகாட்டுதலின்படி வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை வெற்றிபெற செய்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் டிசம்பர் 17-ந் தேதி சேலம் மாநகரில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளை சேர்ந்த இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமைவிடம் வாக்காளர் எண்ணிக்கை ஆகிய அம்சங்களில் உள்ள குறைபாடுகளை களைந்திட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்திய ஜனநாயக முற்போக்கு கூட்டணியை உருவாக்கி திறன் பட செயலாற்றி வரும் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தும் அவரது அரசியல் நகர்வுக்கு வேலூர் மாவட்ட தி.மு.க துணை நிற்கும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    • திருப்புல்லாணி முப்பெரும் விழாவில் தமிழக மக்கள் எழுச்சிக் கழகம் தி.மு.க.வுடன் இணைந்தது
    • குறி சொல்லும் நிகழ்ச்சி நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் திராவிட முன்னேற்ற கழக கட்சியோடு தமிழக மக்கள் எழுச்சிக் கழகம் இணைந்த விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது.

    முப்பெரும் விழாவிற்கு தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக திராவிட மாடல் குறித்து நவீன கோடாங்கியாக கருப்பசாமி வேடம் அணிந்து வந்து குறிசொல்லும் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தமிழக மக்கள் எழுச்சிக்கழக மாநில செயலாளர் பஷீர் அலி வரவேற்றார். தமிழக மக்கள் எழுச்சி கழக மாநில தலைமை ஒருங்கி ணைப்பாளர் திரைப்பட நடிகர் ராஜேந்திரன் பேசுகையில், தி.மு.க.வில் இணைவ தற்கான முக்கிய காரணம் குறித்தும் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் வேண்டியவர், வேண்டாதவர் என்று பாகுபாடின்றி அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று உரிய நலத் திட்டங்கள் உடனுக்குடன் செய்து வருவது எங்களை மிகவும் கவர்ந்தது. எங்கள் அமைப்பில் 90 சதவீதம் பெண்கள்தான் உள்ளனர். தற்போது அனைவரும் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைவதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

    கூட்டத்தில் முருகேசன் எம்.எல்.ஏ., ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், துணை சேர்மன் பிரவீன் தங்கம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    • தமிழக மக்கள் எழுச்சி கழகம் தி.மு.க.வுடன் இணையும் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடந்தது.
    • மாநில செயலாளர் பஷீர் அலி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் திராவிட முன்னேற்ற கழக கட்சியோடு தமிழக மக்கள் எழுச்சிக் கழகம் இணையும் விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

    முப்பெரும் விழாவிற்கு தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேச உள்ளார். இன்று மாலை 4 மணி அளவில் திருப்புல் லாணி வி.ஏ.ஓ. அலுவலகம் முன்பு நடைபெறும் மாபெரும் முப்பெரும் விழாவிற்கு தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வைக்க உள்ள னர்.

    முன்னதாக தமிழக மக்கள் எழுச்சி கழக மாநில செயலாளர் பஷீர் அலி வரவேற்புரை நிகழ்த்து கிறார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரைப்பட நடிகர் ராஜேந்திரன் தி.மு.க.வில் இணைவது குறித்தும் ஏற்புடைய திட்டங்கள் குறித்தும் விளக்க உரை ஆற்றுகிறார்.

    • சிறப்பு விருந்தினராக ஆழ்வை வட்டார வளர்ச்சி அதிகாரி நாகராஜன் கலந்து கொண்டு திருவள்ளுவர் படத்தினை திறந்து வைத்து வள்ளுவம் பற்றி எடுத்துரைத்தார்.
    • டி.எல். அறக்கட்டளை காப்பாளர் பூபதி கல்விக்காக அறக்கட்டளை வழங்கும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்து மாணவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொண்டார்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் குருகாட்டூர் ஊராட்சியில் டி.எல். அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் உருவப்படம் திறப்புவிழா, நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா, காலஞ்சென்ற முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்களின் படத்திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜன்னத் புஷ்பராணி தலைமை தாங்கினார். உலக திருக்குறள் ஆய்வு மூதறிஞர் குழு இயக்குநர் திருக்குறள் ஜேம்ஸ்ராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக ஆழ்வை வட்டார வளர்ச்சி அதிகாரி நாகராஜன் கலந்து கொண்டு திருவள்ளுவர் படத்தினை திறந்து வைத்து வள்ளுவம் பற்றி எடுத்துரைத்தார். டி.எல். அறக்கட்டளை காப்பாளர் பூபதி கல்விக்காக அறக்கட்டளை வழங்கும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்து மாணவர்கள். அதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார். விழாவில் தாமிரபரணி இலக்கிய மன்றத் தலைவர் பிரிட்டோ அலெக்சாண்டர், மக்கள் செயற்பாட்டாளர் மாரிதுரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் தானி ராஜ் குமார், தலைமை ஆசிரியர்கள் நெல்சன், வயலோலா புஷ்பலதா, ஞானசுந்தரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள். நிகழ்ச்சிகளை ஊராட்சி துணத்தலைவர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். விழாவில் ஏராளமான ஊர் பொதுமக்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சன்மார்க்க நெறியினை பரப்பும் பணியில் ஈடுபட்ட 31 நபர்களுக்கும் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சன்மார்க்க நெறியினை பரப்பும் பணியில் ஈடுபட்ட 31 நபர்களுக்கும் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சரால் வள்ளலார் 200 முப்பெரும் விழா தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், பல்வேறு நகரங்களில் இவ்விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் வள்ளலார் 200 முப்பெரும் விழா துவக்கி வைக்கப்பட்டுள்ளது. எல்லாம் உடைய அற்புத ஜோதி என்கின்ற ஜோதியினை கடவுளாக கொண்டுள்ளார். வள்ளலார் அவர்களின் கொள்கையினை பின்பற்றியும் மற்றும் அவர்களின் கருத்துக்களின்படி வாழ்வதன் மூலம் சிறப்பான வாழ்க்கையினை மேற்கொள்ள முடியும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும் என்பதையும், சுத்த சன்மார்க்கத்தினை முக்கிய இலச்சியமாக்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டினையும் உள்ளிட்டவைகளை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

    எனவே நாம் அனைவரும் வள்ளலாரின் வாழ்க்கை முறையினை நன்கு அறிந்துகொண்டு அதன்வழி பின்பற்றி நல்வாழ்வினை வாழ வேண்டும் என பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) சூரியநாராயணன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) அனிதா, அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, மெய். அருள் நந்தி சிவம், மணி, கிருஷ்ணமூர்த்தி, அருள் (எ) இளங்கோ, இலாபராசு, திருப்பதி, மரு.ராமதாஸ், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


    • விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சபரி கிரிநாத் வரவேற்று பேசினார்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் பரிசுகளை வழங்கினார்.

    முக்கூடல்:

    முக்கூடலில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, பள்ளி மேலாண்மை குழு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சபரி கிரிநாத் வரவேற்று பேசினார். மேலாண்மை குழு தலைவர் புவனேஸ்வரி தலை மை தாங்கினார். முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம் முன்னி லை வகித்தார். தன்னார்வலர் ராஜேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் பரிசுகளை வழங் கினார். பேரூராட்சித்துணை தலைவர் லட்சுமணன், பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் ஜோசப் கிரிகோரி, பொதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுடலைமணி, இடைகால் சாரதா பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி காந்தி, நடுக்கல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், முக்கூடல் சொக்கலால் சத்திரிய வித்யாசாலா பள்ளி ஆசிரியர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    • முப்பெரும் விழாவில் தீர்மானம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டவுன் நாளில் தமிழ்நாடு நில அளவைத்துறை சங்கம் சார்பில் முப்பெரும் விழா இன்று நடந்தது. விழாவில் மாநில பொதுச் செயலாளர் பிரபு வரவேற்புரை ஆற்றினார்.

    முத்துச்செல்வி, பெருமாள், காயத்ரி, முத்துக்குமரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைமை நிலைய செயலாளர் மகேந்திர குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, தமிழ்நாடு நில அளவைத் துறையில் ஆன்லைன் பட்டா முறையில் தள்ளுபடி இனங்கள் மூலம் மறைமுகமாகவும் நேரடியாகவும் களப்பணியாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு உரிய தீர்வு காணப்பட கூட்டு பட்டா முறையை நில அளவர்களுக்கு வழங்க வேண்டும்.

    தமிழ்நாடு நில அளவை துறையில் திட்டப்பணியில் நீண்ட காலமாக நில அளவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பணியாற்றி வருகிறார்கள்.

    அவர்களை சொந்த மாவட்டங்களில் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தமிழ்நாடு நில அளவைத் துறையில் களப்பணியாளர்களின் கூடுதல் இயக்குனர் பதிவு உயர்வு முதல் உதவி இயக்குனர் பதிவு உயர்வு வழங்குவது பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது.

    இதனால் விதிகளை தளர்த்தி பதிவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும். நில அளவைத் துறையில் களப்பணியாளர்கள் ஆய்வு செய்யப்படும் ஆய்வுகள் போல தள்ளுபடி இடங்களை கிராம நிர்வாக அலுவலர்களும் ஆய்வு செய்ய வேண்டும் என இயக்குனர் உத்தரவிட வேண்டும். சங்கத்தின் சார்பில் இதுவரையில் துறை தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கதிரேசன், வேலூர் மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசன்னா திருப்பத்தூர் சந்திரசேகர் ராணிப்பேட்டை ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகராட்சியில் திமுக அரசின் ஓராண்டு நிறைவு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் சமபந்தி போஜன முப்பெரும் விழா நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது.

    இதில் நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி அன்புள்ள லாரன்ஸ் நகராட்சி ஆணையாளர் லதா, பொறியாளர் ஆசீர்வாதம், நகர கழகச் செயலாளர் வி.எல்.ஜோதி, நகர மன்ற அவைத்தலைவர் துரை சீனிவாசன், நகர மன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், சாமுண்டீஸ்வரி, செந்தில்குமார், கே.எம்.பி பாபு, சங்கீதா, ரஷிதா, நந்தா தேவி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காதி மல்லி மாலையிட்டு புளி சாதத்துடன் மூன்றாம் கால பூஜை நடந்தது.
    • வீரசோழபுரம், பாப்பினி கிராம பொதுமக்கள் செய்தி ருந்தனர்.

    காங்கேயம் :

    காங்கேயம் அருகேயுள்ள பாப்பினி கிராமம்- மடவளாகத்தில் புராதன புகழ்பெற்ற ப்ருகன் நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரகுபதி நாராயணப்பெருமாள் ஆகிய கோவில்களில் வருடாந்திர சனிப்பிரதோஷம், மகாசிவராத்திரி, மாசி அமாவாசை ஆகிய முப்பெரும் விழா கடந்த 18ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி 20ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெற்றது.

    விழாவில் கபாலீஸ்வரருக்கு பஞ்சகவ்யம் படைத்து சந்தனகாப்பு சாத்தி நீலப்பட்டு உடுத்தி தாமரை மலர் சூடி, வெண்பொங்கல் படைத்து பழங்களுடன் முதல் கால பூஜை நடைபெற்றது. பஞ்சாமிர்தத்துடன் அகில் காப்பு இட்டு, மஞ்சள் பட்டு அணிவித்து விவ்வம் மாலை சாத்தி, வடை பாயாசம் படையலிட்டு இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. தேன் அபிஷேகம் செய்து சிவப்பு பட்டு உடுத்தி, காதி மல்லி மாலையிட்டு புளி சாதத்துடன் மூன்றாம் கால பூஜை நடந்தது.

    கரும்பு சாறு, ஜவ்வாது பொட்டு வைத்து வெண்பட்டு உடுத்தி நந்தியாவட்டம் மாலை அணிவித்து, சர்க்கரை பொங்கல் படையலிட்டு வண்ணமலர் அலங்காரத்துடன் நான்காம் கால பூஜை நடைபெற்றது. மங்களவாத்தியம் முழங்க சிவாச்சாரியர்கள் உலக நலன் வேண்டி கூட்டு வழிபாடு நடைபெற்றது.

    பக்தர்கள் நமச்சிவாய நம என்று கோஷமிட்டனர். இரவு முழுவதும் அர்ச்சனை அபிஷேகம், நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்கள். அதனை தொடர்ந்து இன்னிசைக் கச்சேரிகள் நடைபெற்றன. கோவில் குலத்தவர்களான தோடை, கண்ணந்தை, காடை, கீரை ஆகிய 4 குலத்தவர்கள் உட்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக்குழு தலைவர் எஸ். தங்கமுத்து, செயலாளர் எம். ராமசாமி, பொருளாளர் அர்ச்சுணன், பாப்பினி அம்மன் கோவில் தலைவர் தம்பி வெங்கடாசலம், வாலசமுத்திரம் புதூர் பாலசுப்பிரமணியம் மற்றும் வீரசோழபுரம், பாப்பினி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×