search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. முப்பெரும் விழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
    X

    தி.மு.க. முப்பெரும் விழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

    • முதல் - அமைச்சர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்
    • பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது

    வேலூர்:

    வேலூர் பள்ளி கொண்டா சுங்க சாவடி அருகே வருகிற 17-ந்தேதி தி.மு.க. 75-வது ஆண்டு பவளவிழாவுடன் கூடிய முப்பெரும் விழா பிரமாண்டமாக நடக்கிறது.

    இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க.வினர் கலந்து கொள்கின்றனர். முதல் - அமைச்சர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் பந்தக்கால் நட்டு ேமடை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது.

    இதில் அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், அணை க்கட்டு ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஹரிபிரசாத் உட்பட பல்வேறு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×