search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பிறந்தநாள் விழா சைக்கிள் போட்டி நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    அண்ணா பிறந்தநாள் விழா சைக்கிள் போட்டி நாளை நடக்கிறது

    • சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • 13, 15 மற்றும் 17 வயது ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது

    திருப்பூர் :

    மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடக்கும் சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் விழா வைமுன்னிட்டு நாளை 9-ந்தேதி சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.

    13, 15 மற்றும் 17 வயது ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது.சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் நம் நாட்டில் தயாரான சாதாரண சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆர்வமுள்ளவர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வயது சான்றிதழ், எமிஸ் எண் பெற்று வர வேண்டும்.போட்டி துவங்குமிடத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து பெயர் பதிவு செய்ய வேண்டும். முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய். இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு முறையே 3 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தகுதியான மாணவர்களை தேர்வு செய்து அதற்கான ஆவணங்களுடன் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×