என் மலர்
நீங்கள் தேடியது "மு.க.ஸ்டலின்"
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.
- தமிழ்நாடாக தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் பேரறிஞர் அண்ணா.
சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப் பட்டது.
இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அண்ணாசிலை அலங்கரித்து வைக் கப்பட்டிருந்தது. சென்னையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாசிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ப.ரங்கநாதன், ஜோசப்சாமுவேல், பரந்தாமன், தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதன் பிறகு வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து உருவப்படத்துக்கும் மலர் தூவி வணங்கினார்.
இதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, மயிலை வேலு, ஜெ.கருணா நிதி எம்.எல்.ஏ., எழிலன், மோகன், ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா எம்.எல்.ஏ. பூச்சிமுருகன் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருத் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.
அண்ணா அறிவாலய கட்டிடத்தின் மேலே அமைக்கப்பட்டிருந்த 75-ம் ஆண்டு தி.மு.க. பவளவிழா இலட்சினையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதேபோல் அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 75-வது ஆண்டு தி.மு.க. பவள விழா இலட்சினையை திறந்து வைத்து கொடியேற்றினார். இதில் இளைஞரணி மாநில நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
75 ஆண்டுகளாக தி.மு.க. இந்த சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா!
தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் "அண்ணா… அண்ணா…" என்றே பேசினார், எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்.
ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தி.மு.க. என்பது சொன்னதை தான் செய்யும்.
- ஒப்பந்தங்கள் மேற்கொள்ள விரும்புகிற மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் வகையில் திட்டமிட்டு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.
இதற்காக சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று தொழில்அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்த வகையில் ஏற்கனவே துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று வந்தார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரங்களுக்கு சென்று தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார்.
தொழில்துறையில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து தமிழ் நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அழைப்பு விடுத்தார். அப்போது புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நோக்கியா, டிரில்லியன்ட், ஆட்டோ டெஸ்க், ஆர்.ஜி.பி.எஸ்.ஐ., லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம், விஷய் பிரிஷின், ஈட்டன், போர்டு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேசியதன் விளைவாக 19 நிறுவனங்களுடன் ரூ.7 ஆயிரத்து 7618 கோடி முதலீட களை ஈர்க்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு சிகாகோ நகரில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு துபாய் வழியாக இன்று காலை சென்னை திரும்பினார்.
அவரை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் துரை முருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மேயர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்றனர்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்கா நாட்டுக்கு போன அரசு முறை பயணத்தை நிறைவு செய்து விட்டு, சென்னைக்கு திரும்பி இருக்கிறேன்.
இது வெற்றிகரமான பயணமாகவும், இன்னும் சொல்ல வேண்டுமானால் ஒரு சாதனைக்குரிய பயணமாகவும் அமைந்துள்ளது. இது தனிபட்ட எனக்கல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு சாதனை பயணமாக இந்த பயணம் அமைந்து உள்ளது.
உலக நாடுகளில் இருக்க கூடிய தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களது தொழிலை தொடங்குவதற்கு, தொழில் முதலீடுகள் செய்ய, வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த 28.8.2024 அன்று நான் அமெரிக்கா சென்றேன். 12.9.2024 வரை அங்கு இருந்திருக்கிறேன்.

இந்த 14 நாட்களும் மிக பெரிய பயனுள்ளதாக இந்த பயணம் அமைந்திருந்தது.
உலகின் புகழ் பெற்ற தலை சிறந்த 25 நிறுவனங்களுடன் நான் சந்திப்பை நடத்தி இருக்கிறேன். இதில் 18 நிறுவனங்கள் பார்ச்சூன் -500 நிறுவனங்களுடன் இந்த சந்திப்பின் போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சான்பிரான்சிஸ்கோ நகரில் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.
இந்த 19 ஒப்பந்தங்கள் மூலமாக 7,618 கோடி ரூபாய் முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 11 ஆயிரத்து 516 பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீடுகள் திருச்சி, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் என பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
கடந்த 29.8.2024 அன்று சான்பிரான்சிஸ்கோ நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், மற்ற நிறுவன தலைவர்கள் பங்கேற்றார்கள்.
தமிழ்நாடு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான பணியில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த நிறுவனங்களை நான் கேட்டுக் கொண்டேன்.
இன்னும் பல நிறுவனங்கள் வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன. இதெற்கெல்லாம் மகுடம் வைத்தது மாதிரி தமிழ்நாட்டில் 30 ஆண்டு காலமாக செயல்பட்டு, தவிர்க்க இயலாத காரணத்தால் சில சூழ்நிலைகளால் உற்பத்தியை நிறுத்திய போர்டு நிறுவனம், எங்கள் வேண்டுகோளை ஏற்று சென்னை மறை மலைநகரில் இருக்கக் கூடிய தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளது.
2 நாளைக்கு முன்பு பேசும்போது, அந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், நாங்கள் கமிட்டி போட்டு மெம்பர்களிடம் பேசி விட்டு அதற்குப் பிறகு சொல்கிறோம் என்றார்கள்.
இதன் பிறகு நாங்கள் கொஞ்சம் விருப்பத்தை அதிகமாக தெரிவித்ததன் காரணமாக, எல்லா வசதியையும் செய்து கொடுக்கிறோம் என்ற எங்களின் நம்பிக்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, சரி நீங்கள் போங்கள். 2 நாட்களுக்குள் மகிழ்ச்சியான செய்தியை தெரிவிப்பதாக கூறினார்கள்.
நாங்கள் சிகாகோ நகரில் விமான நிலையத்தில் ஏறி அமர்ந்த பிறகு செய்தி கிடைத்தது. சம்மதம் தெரிவித்து விட்டார்கள் என்று. அந்த செய்தியை உங்களோடு நான் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், இந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்று, அவர்கள் உற்பத்தியை தொடங்குவதற்கான எல்லா உதவிகளையும் வழங்குவதற்கு நான் ஆணையிட்டுள்ளேன்.
அதே போல் எனது கனவு திட்டமான நான் முதல்வர் திட்டம் வழியாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மேற்கொண்டு அதன் மூலமாக வளமான எதிர்காலத்தை உருவாக்குகிற வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய பயிற்சி வழங்கப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கூகுள் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
ஆட்டோ டெஸ்க் நிறுவனங்களுடன் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காகவும், குறுசிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஸ்டாட் உள்ளிட்ட தொழில் துறை, சுற்றுச் சூழல் அமைப்புகளின் போட்டித் தன்மையை மேம்படுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள விரும்புகிற மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
31.8.24 அன்று சான்பிரான்சிஸ்கோவிலிலும், 7.9.24 அன்று சிகாகோ நகரத்திலும் நடைபெற்ற தமிழ் கூட்டமைப்பு தமிழ் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கா வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றினேன். இது தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது.
அமெரிக்க தமிழ் அமைப்புகள் எல்லாவற்றுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒப்பந்தம் செய்துள்ள எல்லா நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:-முதலீட்டு ஒபந்தங்கள் தொடர்பாகவும், வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாகவும், வெள்ளை அறிக்கைகள் வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்களே?
மு.க.ஸ்டாலின் பதில்:-அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே உங்களை சந்தித்து தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டு காலத்தில் வந்த முதலீடுகள் பற்றி நான் விளக்கமாக சொல்லி இருக்கிறேன். அது மட்டுமல்லாமல், தொழில் துறை அமைச்சரும் புள்ளி விவரங்களோடு விளக்கி இருக்கிறார். சட்டமன்றத்திலும் அவர் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதை எதிர்க்கட்சி தலைவர் மட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவராக இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமி படித்து பார்த்து தெரிந்து கொள்ள சொல்ல வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு போனதாக சொன்னார்கள். அதில் 10 விழுக்காடு ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதை சொன்னால் உள்ளபடியே அவருக்கு பெரிய அவமானமாக இருக்கும். அதனால் அதை தவிர்த்து விடுகிறேன்.
கேள்வி:-அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லி இருந்தீர்கள்? அமைச்சரவை மாற்றம் நிகழுமா?
பதில்:- தி.மு.க. என்பது சொன்னதை தான் செய்யும். சொல்வதைதான் செய்வோம். ஒரே வரியில் சொல்லி விடுகிறேன். இன்றைக்கு 75-ம் ஆண்டு விழாவை கொண்டாடிடும் வகையில் தி.மு.க. பவள விழாவை கொண்டாட இருக்கிறது. ஆக நிச்சயமாக உறுதியாக நீங்கள் எதிர்பார்க்க கூடிய சூழ்நிலை உருவாகும் என்று நம்புகிறேன்.
கேள்வி:-விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இது அரசியல் கலந்த பேசும் பொருளாகி இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் ஏதும் ஸ்திரதன்மை இல்லையா? நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
பதில்:-அதுபற்றி திருமாவளவளனே விளக்கம் சொல்லி இருக்கிறார். அந்த விளக்கத்துக்கு பிறகு நான் பெரிய விளக்கம சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி:-அமெரிக்க பயணம் வெற்றி என்று சொல்கிறீர்கள்? அதே சமயத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறும்போது கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் ஈர்த்த முதலீட்டை நீங்கள் முதலீடு ஈர்த்தது வெறும் 7 ஆயிரம் கோடிதான் என்று சொல்கிறாரே?
பதில்:-அப்படியல்ல. அவங்க மாநிலத்துக்கு அவர்கள் தட்டிக் கேட்க உரிமை இருக்கிறது. அதே போல் நாங்களும் நம்முடைய மாநிலத்துக்கு என்னென்ன வேண்டுமோ என்ன என்னென்ன வசதி ஏற்படுத்த வேண்டுமோ அதை கேட்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
#Live: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு https://t.co/tPjXf5SyLi
— M.K.Stalin (@mkstalin) September 14, 2024
- திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள்.
- தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து இன்று தமிழகம் புறப்படும் முன்பு தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அரசுமுறைப் பயணத்தில் ஏறத்தாழ இரண்டு வாரகாலமாக தொடர்ச்சியான பணிகளில் இருந்தாலும், என் உள்ளம் ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது.
உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டினைப் பெருக்கி, இளைய தலைமுறையினருக்கான வேலைவாய்ப்பை வழங்கிட வழிவகுக்கின்றன.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்பதை வெறும் சொற்களாக இல்லாமல், முழுமையான செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு.
அதை அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் நன்றாகப் புரிந்துகொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சிகாகோ நகரின் ரோஸ்மாண்ட் அரங்கத்தில் செப்டம்பர் 7-ம் நாள் அமெரிக்கத் தமிழர்களுடனான சந்திப்பு பெரும் உற்சாகத்தை அளித்தது.
அமெரிக்காவில் இருக்கிறோமா, அன்னைத் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்கிற அளவிற்கு, 5000 தமிழர்களுக்கு மேல் திரண்ட ஒரு மினி தமிழ்நாடாக அந்த அரங்கம் அமைந்திருந்தது.
இன-மொழி உணர்வால் அவர்களுக்கு நானும், எனக்கு அவர்களும் உறவாக அமைந்த சிறப்பான நிகழ்வு அது.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிகாகோவில் நடந்த சந்திப்புக்கு வருகை தந்த தமிழர்களும், பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் வர இயலாமல் போனவர்களும் தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டு களில் திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ள சாதனைத் திட்டங்களைப் பாராட்டத் தவறவில்லை.
அவர்களின் பாராட்டுகள், உங்களில் ஒருவனான எனக்கு தமிழ்நாட்டின் நினைவுகளையே மீண்டும் மீண்டும் கிளறின. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஜனநாயகப் பேரியக்கம் என்றென்றும் தமிழையும் தமிழர்களையும் காக்கின்ற இயக்கமல்லவா!
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி, முக்கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து, மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், இந்திய அளவில் கொள்கை வலிமைமிக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய இயக்கமாகவும் திகழ்கிறதென்றால், அது தி.மு.க. தான்.

செப்டம்பர் 15-இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்கித் தந்து, இந்த மாநிலத்தின் உரிமைகளைக் காத்து, தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். செப்டம்பர் 17-கொள்கைப் பேராசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள்.
அதே நாள்தான், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் இணைத்து, முப்பெரும் விழா என்று பெயர்சூட்டி திராவிடத் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
வருகிற 17-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள பவளவிழா நிகழ்வுகள் குறித்தும், மாவட்டங்கள் தோறும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்தும் அமெரிக்காவில் இருந்தபடியே, கழகத்தின் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் காணொலியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதுடன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் பலரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன்.
ஆகஸ்ட் 16-ஆம் நாள் நடைபெற்ற மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கழக மாவட்டங்கள் பலவற்றிலும் கழகத்தின் பவள விழாவிற்கான சுவர் விளம்பரங்கள் எழில்மிகுந்த முறையிலே எழுதப்பட்டிருப்பதை காணொலிகளாக நம் கழக நிர்வாகிகள் அனுப்பியிருந்தார்கள். சிறப்பான முறையிலே சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.
தி.மு.க.வின் கடைக்கோடி உறுப்பினரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் உட்கட்சி ஜனநாயகத்தன்மையின் அடிப்படையில் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்கும் பொது உறுப்பினர்கள் கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதையும் அறிந்து கொண்டேன்.
வட்ட வாரியாக-கிளைவாரியாக நடைபெற்ற இத்தகைய பொது உறுப்பினர் கூட்டங்கள் பெரும்பாலான கழக மாவட்டங்களில் முழுமையாக நிறைவு பெற்றிருக்கின்றன.
பொது உறுப்பினர்கள் கூட்டங்களில், தொண்டர்களின் ஆழ்மனக் கருத்துகள் அடி வயிற்றிலிருந்து வெளிப்பட்ட குரலாக ஒலித்ததையும், தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் நான் கவனிக்கத் தவறவில்லை.
தொண்டர்களின் குரலில் ஒலிக்கும் நியாய உணர்வுக்கு மதிப்பளிக்கத் தலைமை தவறுவதில்லை என்ற உறுதியை உங்களில் ஒருவனாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க.வின் பவள விழா பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 17-ந்தேதி எழுச்சிகரமாக நடைபெற இருக்கிறது.
இந்த 75 ஆண்டுகாலத்தில், தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது என்கிற அளவிற்கு தி.மு.க.வின் கொள்கைத் தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது.
உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக-அவர்களின் நண்பனாகத் தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். இதுதான் 75 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை.
இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்திட, 17-ந்தேதி அன்று வரலாற்றுப் பெருவிழாவான கழகத்தின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம்.
இது உங்களில் ஒருவனான என்னுடைய அழைப்பு மட்டு மல்ல; இந்த இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவும், பேணிப் பாதுகாத்து வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞரும் நம்மை அழைக்கிறார்கள்! அணி திரள்வோம்! பணி தொடர்வோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பட்டிதொட்டியெங்கும் சென்று அயராது உழைக்க வேண்டும்.
- 2026 சட்டசபை தேர்தல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புது வியூகம்.
சென்னை:
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெற்றுள்ளதால் இதே வெற்றியை 2026 சட்டசபை பொதுத்தேர்தலிலும் பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.

இதற்காக தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் தி.மு.க.வில் அடுத்து என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து கட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர்களை அழைத்து அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு விருந்தளித்தார்.

தனது குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் அவருடன் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஆஸ்டின், தாயகம் கவி ஆகியோரும் அமர்ந்து சாப்பிட்டனர்.
பின்னர் அவர்கள் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, `தொகுதி பொறுப்பாளர்களின் பணிகளை வெகுவாக பாராட்டினார். இந்த பணி 2026 சட்டசபை தேர்தலுக்கும் தொடர வேண்டும். கிராமம் கிராம மாக சென்று தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை மக்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும் என்று கூறினார்.
இதுதவிர பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். கூட்டம் நடந்தது பற்றி உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள, 2026 சட்ட மன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல்பட்டு வரும் தொகுதி பார்வையாளர்களை குறிஞ்சி இல்லத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினோம்.
பாராளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெற சிறப்புற பணியாற்றிய தொகுதி பார்வையாளர்களுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்.
மேலும், நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களையும்-சாதனைகளையும் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று, 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்துக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தருகிற வகையில் அயராது உழைப்போம் என்று உரையாற்றினோம்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.