search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tripartite Festival"

    • மனவளர்ச்சிக்குன்றியோர் சிறப்பு பள்ளளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • மனித வளத்துறை துணை மேலாளர் ஒ.எஸ்.அறிவு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை விடாமுயற்சி கல்வி இதன் மூலமே சாதனை செய்ய முடியும் என கூறினார்.

    கடலூர்:

    நெய்வேலி அருகே எ.குறவன்குப்பத்தில் உள்ள டிவைன் கிராஸ் மனவளர்ச்சிக்குன்றியோர் சிறப்பு பள்ளளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியம் அனைவரையும் வரவேற்றார். நியூலைட் சாரிட்டபுல் டிரஸ்ட் பொருளாளர் முன்னிலை வகித்தார். நியூலைட்சாரிட்டபுல் நிர்வாகி மனநல நிபுணர் சகாயராஜர தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக என்.எல்.சி.இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களில் மனித வளத்துறை துணை மேலாளர் ஒ.எஸ்.அறிவு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை விடாமுயற்சி கல்வி இதன் மூலமே சாதனை செய்ய முடியும் என கூறினார். மேலும் கலைநிகழ்ச்சி விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முடிவில் விடுதி காப்பாளர் கென்னடி நன்றி கூறினார்.

    ×