search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virudhu"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கினார்.
    • தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதாரண குடிமகனான எனக்கு மகிழ்ச்சியான விஷயம்.

    முத்தமிழ் பேரவையின் பொன்விழா ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

    அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கினார்.

    விருது பெற்ற நடிகர் சத்யராஜ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3 ஆண்டுகளாக திமுக ஆட்சி மிக மிக சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதற்கு மிகப்பெரிய உதாரணம், கோவைக்கு முதலமைச்சர் வந்திருந்தபோது இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காத வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது.

    ஓய்வறியா சூரியன் என்று டாக்டர் கலைஞரை கூறுவார்கள். அதேபோல், ஸ்டாலின் அவர்களும் கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு சுற்றுபவர். ஓயாமல் உழைப்புக்கு சொந்தக்காரர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

    அவர்களின் தலைமையில் தினந்தினம் திட்டங்களை யோசித்து அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்து தமிழ்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்று அனைவரும் ஆராய்ந்து தொடர்ந்து நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

    அதுதான் தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதாரண குடிமகனான எனக்கு மகிழ்ச்சியான விஷயம்.

    நான் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடிக்கிறேன். ஒவ்வொறு ஊருக்கும் சென்றுவிட்டு வரும்போது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து தெரிகிறது.

    அதிகபட்சமாக, அந்த மாநிலங்களின் தலைநகர் மட்டும் ஓகோ என்று இருக்கும். ஆனால், தலைநகரைவிட்டு பிற இடங்களுக்கு செல்லும்போதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்னவென்று புரியும்.

    தமிழ்நாட்டை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். ஏன் என்றால், இந்தியாவில் இருக்கின்ற பல மாநிலங்களில் இருந்து ஏன் வேலை தேடி வருகிறார்கள் என்றால், இரண்டு விஷயம்.

    தமிழ்நாட்டின் வாழ்க்கைதரம் உயர்ந்துவிட்டது. அவர்களின் வாழ்க்கை தரம் குறைவாக இருக்கிறது. நம் மக்கள் நன்றாக படித்து எங்கேயோ சென்றுவிட்டனர்.

    1967க்கு பிறகு, திராவிட கருத்தியல் கூடிய ஆட்சியில் தமிழ்நாடு சிறப்பாக நடத்த ஏய்திவிட்டது. அதனால்தான், தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர். அவர்களுக்கு திராவிட கருத்தியலை போதிக்கவேண்டும்.

    தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளாலும், பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகளாலும், கலைஞரின் சிந்தனைகளாலும், செயல் திட்டங்களாலும்தான் தமிழ்நாட்டு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று வட மாநில தொழிலாளர்கள் அவர்களின் மாநிலத்தில் சொல்ல வேண்டும்.

    சிறப்பான முதல்வர் கையில் இருந்து கலைஞர் விருது பெற்றதில் பெருமைக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க. பவள விழா ஆண்டு
    • எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது.

    சென்னை:

    தி.மு.க. பவள விழா ஆண்டையொட்டி செப்டம்பர் 17-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது.

    இந்த விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

    அதன்படி பெரியார் விருது-பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது-அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும் வழங்கப்படுகிறது.

    கலைஞர் விருது-எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு வழங்கப்படுகிறது. பாவேந்தர் விருது-கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது-வி.பி.ராஜனுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ. 5.12 கோடி செலவில் மாநகராட்சி நிர்வாகம் குளத்தை புதுப்பித்தது.
    • சிவகங்கை குளத்திலிருந்து அய்யன் குளத்துக்கு சுரங்க நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேல வீதியிலுள்ள அய்யன் குளம் நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது.

    மொத்தம் 7 ஆயிரத்து 630 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இக்குளத்துக்கு பெரிய கோயில் அருகிலுள்ள சிவகங்கை குளத்திலிருந்து நீர் ஆதாரம் ஏற்படுத்தப்பட்டது.

    இதற்காக சிவகங்கை குளத்திலிருந்து அய்யன் குளத்துக்கு சுரங்க நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டது.

    காலப்போக்கில் பராம ரிப்பின்மை காரணமாக நீர் வரத்து இன்றி மிக மோசமான நிலையில் இருந்த இக்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 5.12 கோடி செலவில் மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்தது.

    இதில், குளம் தூர் வாரப்பட்டு, சுற்றிலும் நடைபாதை, அலங்கார மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், நடைபாதையோரம் 64 வகையான ஆயக்கலைகள், ஐவகை நிலங்கள் உள்ளிட்டவற்றை விளக்கும் ஓவியப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

    நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்க நீர்வழிப் பாதையைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்ட

    விருது போட்டியை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 2022 ஆம் ஆண்டு நடத்தியது.

    இப்போட்டி சுற்றுச்சூழல், கலாசாரம், பொருளாதாரம், ஆளுமை, வணிக மாதிரி, தூய்மை உள்பட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது.

    இதில், கலாசார பிரிவில் 39 நகரங்களிலிருந்து பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இப்பிரிவில் தொழில் நுட்பத்தைப் பயன்ப டுத்தி பாரம்பரிய கட்டுமா னம், சுற்றுலாவை மேம்படுத்தி யதற்காக அகமதாபாத், பாரம்பரிய கட்டடங்களைப் புனரமைப்பு செய்ததற்காக போபால், அய்யன் குளத்தைப் பாதுகாத்தலுக்காக தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    இதற்கான விருது மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூர் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர் ) 27 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்படவுள்ளது.

    இந்த விருதை ஜனாதிபதி வழங்க உள்ளார்.

    இந்த தகவலை தஞ்சை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ×