என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி
- கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடந்தது.
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 24 மாணவர்கள் பேச்சுப்போட்டியில் பங்கேற்றனர்.
விருதுநகர்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் வளர்ச்சிமன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது. அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 24 மாணவர்கள் பேச்சுப்போட்டியில் பங்கேற்றனர்.
போட்டிகளுக்கு, சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியை ஜான்சி ராணி, ந.சுப்பையாபு ரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் ராஜசேகர். வெள்ளையா புரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் வேல்முருகன் ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிந்தனர்.
விருதுநகர் முதன்மைக்கல்வி அலு வலகத்தின் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பா ளர் தங்க மாரியப்பன் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.
பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டியில் தளவாய்புரம் பெருந்தலைவர் காமராஜ் பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராசர் மேல்நிலைப்பள்ளி மாணவி வைதேகி இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கார்த்தீஸ்வரி, 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வென்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப்பரிசாக வழங்கப்ப டும். ரூ.2ஆயிரத்தை ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மாரீஸ்வரி, மேலப்பருத்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஹரிணி ஆகியோர் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கான பரிசுத்தொகைகள் பிறிதொரு நாளில் கலெக்டர் முன்னிலையில் வழங்கப்பெறும் என விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி த்துறை உதவி இயக்குநர் சுசிலா தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்