search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "social activists"

    • பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள உழவர் சந்தை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர்கள் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர். வயது மூத்தவர்கள் மாலை நேரத்தில் நடை பயணம் மேற்கொண்டு விட்டு பின்பு இந்த பூங்காவில் ஓய்வெடுத்து வந்தனர்.

    ஆனால் தற்பொழுது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி இந்த பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவை சரி செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாலம் 1961-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை யினரால் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • பாலத்தின் 2 பக்கமும் தடுப்பு சுவர்கள் பெயர்ந்து விழுந்து விட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில் நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகம்மது அயூப் தலைமையில் நிர்வாகிகள் மைதீன், சித்திக், சம்சுதீன், செய்யது முகம்மது சேட் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தரைப்பாலம்

    நெல்லை மாநகராட்சி மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் சாலையில் நத்தம் தாமிரபரணி தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 1961-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை யினரால் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் இந்த பாலம் சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    கோரிக்கை

    இந்த பாலத்தில் ஏராளமான பள்ளங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பாலத்தின் 2 பக்கமும் தடுப்பு சுவர்கள் பெயர்ந்து விழுந்து விட்டது. இதனால் இரவு நேரங்களிலோ, வாகனங்கள் தடுமாறி விபத்து ஏற்பட்டாலோ ஆற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது.

    எனவே உடனடியாக இந்த பாலத்தின் தரைப்பகுதியை சீரமைத்து பாலத்தின் இருபுறமும் முழுமையாக தடுப்புச்சுவர் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய பாலம் அமைத்திட திட்டமிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று அடையாளம் தெரியாத 60 வயது மதிக்க ஆண் பிணம் கிடந்தது.
    • அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று அடையாளம் தெரியாத 60 வயது மதிக்க ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி டவுண் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அந்த பிணத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு நின்ற பொதுமக்கள் யாரும் பிணத்தை தூக்க முன்வராததால் மற்ற போலீசார் முன்னிலையில் டவுன் போலீஸ் நிலைய ரோந்து வாகன டிரைவர் ஏட்டு பாரதி தூக்கி ஆம்புலன்சில் ஏற்றினார்.பின்பு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. யாரும் முன்வராத நிலையில் போலீசாரே பிணத்தை தூக்கி ஆம்புலன்சில் ஏற்றியதை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். 

    • பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.
    • விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

     பல்லடம் :

    பல்லடம் புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பில் பல்லடம் கிராம சாலைகள் உதவி பொறியாளர் பழனிகுமாரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் கூட அவசரத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. புறவழிச் சாலை திட்டப்பணி அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும், புறவழிச் சாலை திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய திட்டத்தை கிடப்பில் போட்டு வருவதை ஏற்க முடியாது. அடுத்த 10 நாட்களுக்குள் புறவழிச் சாலை திட்டத்தை துவங்காவிட்டால்,பொதுமக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் செய்த போது வேதாரண்யத்துக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு தஞ்சையில் உள்ள சிறையில் தான் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • நடுவில் கண்காணிப்பு கோபுரம் சூரிய கதிர்களைப் போல 8 வளாகங்களில் ஒவ்வொரு வளாகத்திற்கும் 31 அறைகள் கொண்ட இந்த சிறைச்சாலை அழகிய தோற்றத்துடன் காணப்பட்டு வந்தது.

    தஞ்சாவூர் :

    இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது சுதந்திரத்திற்கான வேட்கை அதிகரித்து போராட்டங்கள் தொடங்கிய நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்களை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் சிறைகளை அமைத்த ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் 1885 ஆம் ஆண்டு சிறைச்சாலையை அமைத்தனர்.

    இங்கு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை அடைத்து வைத்து சித்திரவதை நடத்தியதாக வரலாறு உண்டு.

    ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் செய்த போது வேதாரண்யத்துக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு தஞ்சையில் உள்ள சிறையில் தான் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறைச்சாலை பின்பு சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியாக மாற்றப்பட்டு குற்றச்செ–யல்களில் ஈடுபடும் சிறார்கள் வைத்திருக்கும் இடமாக மாற்றப்பட்டது .

    மேலும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்குமிடமாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கேயே 8-ம் வகுப்பு வரை ராஜாஜி நடுநிலைப்பள்ளி என்ற பள்ளி் தற்பொழுது இயங்கி வருகிறது.

    நடுவில் கண்காணிப்பு கோபுரம் சூரிய கதிர்களைப் போல 8 வளாகங்களில் ஒவ்வொரு வளாகத்திற்கும் 31 அறைகள் கொண்ட இந்த சிறைச்சாலை அழகிய தோற்றத்துடன் காணப்பட்டு வந்தது.

    கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக 12 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது.

    இதனால் தென்புறம் உள்ள சிறைப்பகுதிகளில் பாதி சிறைப்பகுதிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல அறைகளும் உடைக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் இதனை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்.

    தற்போது நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை போற்றும் வகையில் அவர்களின் நினைவு கூறும் வகையில் இந்த சிறைச்சாலையை புனரமைத்து 140 ஆண்டுகளுக்கு மேல் உள்ள இந்த சிறைச்சாலையை பாதுகாக்க வேண்டும். நினைவு சின்னமாக ஆக்க வேண்டும்.

    வளாகத்தில் உள்ள சுதந்திரதேவி சிலை கூட சிதிலமடைந்து உள்ளது . அதனையும் சீரமைக்க வேண்டும் என்று தஞ்சை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாகை சாலையில் நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி, வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் பல அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
    • சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் பயன்படுத்தி வரும் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்-நாகை சாலையில் முக்கிய அலுவலக ங்களான நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி, வட்டாட்சியா் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சார்நிலை கருவூலம், பள்ளிக்க–ல்வித்துறை அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்த சாலையில் தினசரி பகல் நேரங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ, மாணவியா் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது.

    வேதாரண்யம் –நாகை மெயின்ரோட்டிலிருந்து நீதிமன்றம் சாலை பிரியும் இடத்திற்கு இரு புறங்களிலும் வேகத்தடை அமைத்து தந்திட வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை உடன் செய்து விபத்தினை தடுக்க உரிய துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்க எடுக்க வேண்டும் என இல.கணேசன் கூறினார். #ilaganesan #tuticorinfiring

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் ராஜாக்க மங்கலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. கலந்து கொண்டார். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் அந்த போராட்டம் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சமூகவிரோதிகள் யார்? என்பதையும், அவர்களை தூண்டிவிட்டவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.

    சமூகவிரோதிகளை தூண்டி விட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அனுதாபம் காட்ட வேண்டும். மேலும் இந்த போராட்டத்துக்கு தொடர்பு இல்லாதவர்களும் இதில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடும், மறுவாழ்வும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் பாரதீய ஜனதா வெற்றி பெறுவதற்கான திட்டம் பற்றி தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனைகள் வழங்கி உள்ளார். அவரது ஆலோசனைப்படி அதற்கான திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.

    தற்போது அது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் 42 அமைப்பு மாவட்டங்களில் தற்போது மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு தேர்தலை நோக்கிய பயணத்திட்டம் பற்றி விளக்கப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் சாதனை திட்டங்களை தமிழக மக்களிடம் பாரதீய ஜனதா கொண்டு செல்லும். அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு வியூகம் வகுத்து செயல்படமுடியும். விலை மதிக்கமுடியாத ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ilaganesan #tuticorinfiring

    ×