search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேகத்தடை"

    • ஆபத்தான நிலையில் உள்ள வேகத்தடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    • வேகத்தடையில் வெள்ளை, கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட வேண்டும்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது36). கூலித்தொழிலாளி. சேலம், கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்த இவர் மனைவி சந்தோஷம் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது 2 மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் சிட்லபாக்கம் சர்வம் மங்கலம் நகர் பகுதியில் சென்றார். அப்போது அங்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள வேகத் தடையில் சென்றபோது நிலை தடுமாறி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதினார். இதில் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். கோவிந்த ராஜ் மகன்கள் கண் எதிரிலேயே பரிதாபமாக இறந்தார்.

    அளவுக்கு அதிகமான உயரத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டதும், அதில் வேகத்தடை இருப்பது குறித்து எச்சரிக்கை வர்ணம் பூசப்படாததும் விபத்துக்கு காரணமாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்ட 5 வேகத்தடைகள் அவசரமாக அகற்றப்பட்டன. மேலும் தாம்பரம், சிட்லப்பாக்கம் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள வேகத்தடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் விதிமுறை மீறி உள்ள வேகத்தடைகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான வள்ளி என்பவர் பல்லாவரம் பகுதியில் கட்டிடப் பணி செய்துவிட்டு தனது உடன் பணி செய்யும் கொத்தனார் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் அனகாபுத்தூர் நோக்கி சென்ற போது அங்கிருந்த வேகத்தடையால் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் வேகத்தடையில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் மாநகராட்சி சாலைகளில் அமைக்கப்படும் வேகத்தடைகளை அகற்ற வேண்டும் அல்லது வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை உள்ளது என தெரிவிக்கும் பலகைகள் மற்றும் வண்ணங்களை தீட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, விபத்துக்களை தவிர்க்க தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

    தரமில்லாத, தேவையற்ற, சீரற்ற வேகத்தடைகளை சோதனை செய்ய தென் சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷ்னர் தலைமையிலான கமிட்டி உள்ளது.

    இந்த கமிட்டியில் தற்போது ஏற்பட்டுள்ள விபத்து தொடர்பாக கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆலோசிக்க உள்ளனர்.

    இந்த கமிட்டியினர் அனுமதி அளித்த பிறகே வேகத்தடை அமைக்கப்படும். விதிமுறைகளை மீறி இருந்தால் அந்த வேகத்தடை அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறும் போது, போக்குவரத்து போலீசார் அனுமதித்த பிறகே வேகத் தடை அமைக்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் வேகத் தடைகளும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் விதியின் படி சரி செய்யப்படுகின்றது.

    வேகத்தடையில் வெள்ளை, கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட வேண்டும். இரவில் வேகத்தடை இருப்பது தெளிவாக தெரிவதற்காக வேகப் பட்டை செல்லும். வேகத் தடைக்கு முன்பாக 40 மீட்டர் தொலைவில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இவர் பண்ருட்டி உள்ள பேக்கரி ஒன்றில் மாஸ்ட ராக வேலை செய்து வந்தார்.
    • கட்டை ஒன்றில் மோதி பலத்த அடிப்பட்டு சம்பவஇடத்திலேயே இறந்து விட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூரை சேர்ந்தவர்முருகன் (36), இவர் பண்ருட்டி உளள ேபக்கரி ஒன்றில் மாஸ்ட ராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று (1-ந் தேதி) இரவு 1 மணி அளவில் தனது மோட்டாச் சைக்கிளில்பண்ருட்டியில் இருந்து வீரப்பெருமா நல்லூ ருக்கு சென்று கொண்டி ருந்தார். சேமகோட்டை அருகே சென்று கொண்டி ருந்தபோது போது எதிர்பாராத விதமாக வேகத்தடை கட்டை ஒன்றில் மோதி பலத்த அடிப்பட்டு சம்பவஇடத்திலேயே இறந்து விட்டார். இது பற்றி தகவல் அரிந்த தும் புதுப்பேட்டை போலீ சார், முருகன் உடலை கைப்பற்றி பிரதே பரிசோ தனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
    • கலவை தயாரிக்கும் போதே அதே வெள்ளை நிறம் கலந்து தயாரிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிதாக தார்சா லைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்னும் பல இடங்களில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தார்சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் சில இடங்களில் அந்த வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகளுக்கு அருகே வந்த பிறகு தான் வேகத்தடை இருப்பது தெரிகிறது.

    இதன் காரணமாக சிலர் தடுமாற்றத்துடன் விழுகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் விபத்து நடக்கிறது.

    எனவே சாலையில் வேகத்தடை அமைக்கும் போதே வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.

    இல்லையென்றால் வேகத் தடுப்பில் அடிக்கும் வெள்ளை நிறத்திற்குப் பதில் வேகத்தடுப்பு கலவை தயாரிக்கும் போதே அதே வெள்ளை நிறம் கலந்து தயாரிக்கலாம் என்று வாகன வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் எங்கெல்லாம் வேகத்தடைக்கு வர்ணம பூசாமல் உள்ளது என கண்டறிந்து அதறகு வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.

    தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேகத்தடை அமைக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் சென்னை- கும்பகோணம் சிதம்பரம் பிரதான சாலை பின்னலூர் கிராமத்தில் கிராம மக்கள் ஒன்று திரண்டு வேகத்தடை அமைக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர் இது குறித்து தகவல் அறிந்து சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. ரூபன் குமார், இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது சிவன் கோவில் அருகில் மற்றும் பஸ்நிறுத்தம் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது.

    தற்போது சாலை அமைக்கப்பட்ட பின்பு அந்த இடத்தில் வேகத் தடை அமைக்கப்படவில்லை . இதனால் தொடர்ந்து விபத்து நடக்கிறது. எனவே வேகத்தடை அமைக்கும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் டி.எஸ்.பி. பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    சேலம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மீன்தொட்டி பஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. இவரது மகன் பிரதீப் கண்ணா (வயது 27),

    இவர் சேலம் குகையில் உள்ள பர்பிகுயின் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிள் சேலம் குரங்குச்சாவடி சந்தை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது பிரதீப் கண்ணா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி அவர் கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆஸ்பத்திரியில் ப ரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் விரைந்து வந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த பிரதீப்கண்ணாவின் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய போது, விபத்துக்கு காரணமான வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் அடிக்காமல் இருந்ததும், இரவு நேரத்தில் பிரதீப் கண்ணா மோட்டார் சைக்கிளில் வந்தபோது வேகத்தடையை கவனிக்காமல் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த சோக சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து மையத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் வேகத் தடை அமைக்க வேண்டும்

    திருப்பூர்:

    பல்லடம் வழியாக செல்லும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் முதல் காரணம்பேட்டை வரை 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து மையத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

    சாலை விரிவாக்கத்துக்குப் பின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் காளிவேலம்பட்டி பிரிவு அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ஒருசில விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் வேகத் தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

    • நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது.
    • வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. எனவே இந்த வழியாக செல்லும் பெரும்பாலான சுற்றுலா வாகனங்கள் அசுர வேகத்தில் பயணிக்கின்றன.

    கோத்தகிரி சாலையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அபாயகரமான வளைவுகள் உண்டு. எனவே அங்கு செல்லும் உள்ளூர் வாகனங்கள் வாகனங்கள் வேகத்தை குறைத்து கவனத்துடன் செல்லும். ஆனால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள், அபாய வளைவுகள் இருப்பதை அறியாமல், அதிவேகமாக சென்று திரும்புகின்றன. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மேட்டுப்பாளையம்- கோத்தகிரி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அணுகுசாலை ,தேசிய நெடுஞ்சாலை, கிராம இணைப்பு ரோடு என ரோடு சந்திப்பில் தாறுமாறாக வாகனங்கள் கடக்கின்றன.
    • விபத்துகளை தவிர்க்க வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்லும் வகையில் பிளிங்கிரிங் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது.

    உடுமலை:

    கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரத்தை கடந்ததும் ராகல்பாவி கிராமத்துக்கான இணைப்பு ரோடு பிரிகிறது. இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்லும் வகையில் பிளிங்கிரிங் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் நெரிசலும் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் நான்கு வழிச்சாலைக்கான அணுகுசாலை அமைக்கும் பணி அப்பகுதியில் துவங்கியது.

    பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வகையில், இந்த அணுகுசாலை அமைக்கப்படுகிறது.இதனால் அணுகுசாலை ,தேசிய நெடுஞ்சாலை, கிராம இணைப்பு ரோடு என ரோடு சந்திப்பில் தாறுமாறாக வாகனங்கள் கடப்பதால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயமும் நிலவுகிறது.அணுகுசாலை, நெடுஞ்சாலை இணையும் இடத்தில் பணிகள் நிறைவு பெறாத நிலையில் போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டு குழப்பங்கள் அதிகரித்துள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வாக ராகல்பாவி சந்திப்பு பகுதியில் மீண்டும் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும். அணுகுசாலை-தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். நெரிசல் இல்லாமல் பஸ்களை நிறுத்தவும் தனியிடம் ஒதுக்க வேண்டும். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • கே.ஜி.மில் அருகே அதிவேகமாக வந்த கார், வளைவில் திரும்ப முடியாமல் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
    • சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை-டிவைடர் வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் ரோட்டில் கே.ஜி.மில் அருகே நேற்று இரவு அதிவேகமாக வந்த கார், வளைவில் திரும்ப முடியாமல் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் சுக்குநூறாக நொறுங்கியது.

    எனவே மின்கம்பியில் பயங்கர தீப்பொறி கிளம்பியது. இதனை பார்த்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது காரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பிழைத்தனர்.

    அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொண்டாமுத்தூர் சாலையில் கடந்த வாரம் அதிகாலை கர்நாடக பஸ்- ஜீப் மோதி விபத்து நடந்தது. வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலையில் வேகத்தடை இல்லை. எனவே அங்கு அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுகிறது.

    இதனால் போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை-டிவைடர் வைத்து, வாகன விபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 1500க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பள்ளி முன்பு வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வந்தன.

    காங்கயம் :

    காங்கயம் தாராபுரம் மெயின்ரோட்டில் நகரின் பிரதான பகுதியான களிமேடு மற்றும் குதிரை பள்ளம் ரோடு பிரிவு அருகே காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி முன்பு நிழற்குடை மற்றும் வேகத்தடை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் பள்ளி முன்பு வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வந்தன. இது குறித்து மாலைமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் தற்போது அங்கு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும்ரூ.9லட்சம் செலவில் அழகான விசா லமான முறையில் ஒரு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. காங்கயம் நகராட்சி மற்றும் காங்கயம் ரோட்டரி டவுன் சங்கம் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • விபத்தை தடுக்கும் நோக்கில், வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • வேகத்தடைகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    கோவை,

    கோவை மாநகரில் ரேஸ்கோர்ஸ் முக்கிய பகுதியாகும். இங்கு நடைபயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சி, சைக்கிளிங் என உடற்பயிற்சிக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இதன்காரணமாக ரேஸ்கோர்ஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு புதுப்பொலிவு பெற்று திகழ்கிறது.

    இங்கு இளைஞர்களுக்கு ஜிம், குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா மற்றும் கண்கவர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஸ்கோர்ஸ் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

    ரேஸ்கோர்ஸ் சாலையும் புதுப்பிக்கப்பட்டு வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன. இவ்வாறு வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சில இடங்களில் பாதசாரிகள் ரோட்டை கடக்க முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    ேவகமாக செல்லும் வாகனங்களுக்கு கடிவாளம் போடும் வகையிலும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என போலீசாருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து போலீசார் வேகத்தடை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தனர். அதன்படி ரேஸ்கோர்சை சுற்றியுள்ள சாலையில் 5 இடங்களில் நேற்று நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைத்தனர்.வேகத்தடைகளுக்கு பொதுமக்களும், நடை பயிற்சி மேற்கொள்பவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

    இந்த சாலையில் காலை முதல் இரவு வரை அதிகமான வாகனங்கள் செல்கின்றன. மேலும் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்வதால் தினமும் விபத்துகள் நடைபெற்று வந்தது.

    வேகத்தடை அமைக்கப்பட்டதால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்கின்றன. மேலும் எண்ணற்ற விபத்துக்கள் தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • ஆனைக்கல்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு அருகே உள்ள சோலார் அடுத்த புறவழி ச்சாலை பகுதியான ஆனை க்கல்பாளையம், 46 புதூர் பிரிவு சாலை, முத்து கவுண்டன் பாளையம் ரிங் ரோடு, பரிசல் துறை 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அந்த வழியாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமின்றி சென்று வந்தனர்.

    சில மாதங்களுக்கு முன்பு புறவழிச் சாலை பகுதியில் உள்ள அனைத்து வேக த்தடைகளும் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் அகற்ற ப்பட்டது.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். மேலும் அப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரித்து வந்தது.

    ஒரு சில விபத்துகளும் இந்த பகுதியில் நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இல்லாததால் வேகமாக சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சாலைகளை கடக்க முடியாமல் பொது மக்கள் தவித்து வந்தனர்.

    எனவே இந்த பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில்  ஆனைக்கல்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் திடீ ரென சாலை மறியலில் ஈடு பட்டனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சரஸ்வதி எம்.எல்.ஏ., மொட க்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர்.

    இதில் சரஸ்வதி எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் பேசி முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதை யடுத்து அதிகாரிகள் விரை வில் வேகத்தடை அமைத்து தருவதாக உறுதியளித்தனர்.

    இதனை அடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் அங்கு இருந்து கலை ந்து சென்றனர்.

    ×