search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "speed break"

    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • பிளாஸ்டிக்கிலான வேகத்தடை சிறிது, சிறிதாக உடைந்து போனது.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்கிலான வேகத்தடை சிறிது, சிறிதாக உடைந்து போனது. தற்போது வேகத்தடை இல்லாததால் அதி வேகத்தில் இயக்கப்படும் பஸ்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்லடம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பஸ் நிலையத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த சாலையை அதிகமாக கடக்கின்றனர்
    • கதித்தமலை கோவில் ஆர்ச் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி திருப்பூர் செல்லும் முக்கிய சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சார் பதிவாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன. காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த சாலையை அதிகமாக கடக்கின்றனர்.

    இதில் கதித்தமலை கோவில் ஆர்ச் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இன்று காலை காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இது கடந்த 3 மாதத்தில் நடக்கும் 4-வது விபத்தாகும். இந்த சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக் கடி விபத்து ஏற்படுவதால் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள வாரணவாசி கிராமம் பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை சிலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி சென்ற லாரி ஒன்று வேகமாக வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த கொடி மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் பயந்து அலறியடித்து ஓடினர்.



    இதையடுத்து அந்த பகுதி கிராம மக்கள் பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி இங்கு விபத்து ஏற்படுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெரம்பலூர்-மானாமதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்துவந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதே இடத்தில், கடந்த ஆண்டு மணல் ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, வீடு மற்றும் கடையினுள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது. லாரி மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மேலும், கடந்த 28-ந் தேதி பஸ்சுக்காக நிழற்குடையில் காத்திருந்த பயணிகள் மீது வேகமாக வந்த கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 
    ×