search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு வேலி"

    • சொந்தமான வாகனத்தில் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று மற்றவர்களுக்கு வழங்குவது வழக்கம்.
    • நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டியானை வாகனத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி - கோழியூர் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. இதற்கு சொந்தமான வாகனத்தில் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று மற்றவர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்த வாகனத்தை நிறுவனத்தின் உள்ளே நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நிறுவனத்தின் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த குட்டியானை வாகனம் இரும்பு வேலியின் மோதி நகர முடியாமல் நின்றி ருந்தது. இதனை பார்த்த நிறுவன உரிமையாளர் கார்த்திக் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து நிறுவனத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மர்மநபர் ஒருவர் குட்டியானை வாகனத்தில் அமர்ந்து அதனை இயக்குகிறார். இந்த வாகனம் அருகில் இருந்த இரும்பு வேலியில் மோதி நிற்கிறது. இதனை வெளியில் எடுக்க முயற்சிக்கும் மர்ம நபர், குட்டியானை வாகனத்தை இயக்க முடியாததால், அங்கேயே விட்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனைக் கண்ட உரிமையாளர் கார்த்திக், இது தொடர்பாக திட்டக்குடி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை அழைத்து விசாரித்தனர். இதில் கருவேப்பிலங்குறிச்சியை அடுத்துள்ள கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தங்கமுத்து மகன் விக்னேஷ் (வயது 24) என்பதும், இவர் தனியார் நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டியானை வாகனத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து திட்டக்குடி போலீசார் விக்னேஷை கைது செய்தனர். திட்டக்குடி பகுதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்றவைகள் அடிக்கடி திருடி போயின. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பஸ், குட்டியானை போன்ற வாகனங்களும் திருடப்படுகின்றன. இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • யானை வழித்தடங்களில் உள்ள மின்கம்பங்கள் அனைத்தும் மாற்றப்பட்டும், தேவையான இடத்தில் உயர்த்தப்பட்டும் உள்ளன.
    • மின்கம்பங் களை யானை சேதப்படுத்தி, அவை கீழே விழும்போது, மின்வயரில் சிக்கி உயிரி ழக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில், மின் கம்பத்தை சுற்றி இரும்பு முள்வேலி அமைத்துள்ளது.

    ஓசூர்,

    கர்நாடகா, ஆந்திர மாநில எல்லை அருகே அமைந்துள்ளது கிருஷ்ண கிரி மாவட்டம். இதன் மொத்த பரப்பளவான 5.43 லட்சம் ஹெக்டேரில், 1.45 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதி. இது 115 காப்பு காடுகளைக் கொண்டுள்ளது.

    வனப்பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பன்னர் கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வன உயிரின சரணாலயத்தில் இருந்து யானைகள் கூட்டமாக வெளியேறி, தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள தளி வனப்பகுதியில் தேவர்பெட்டா எனும் கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் நுழைகிறது.

    பின்னர் அங்கிருந்து ஜவளகிரி, நொகனூர், ஊடே துர்க்கம், அஞ்செட்டி, தேன்கனிக் கோட்டை, ராயக்கோட்டை வனச் சரகங்களுக்கு உட்பட்ட காப்புக்காடுகளில் தஞ்சம் அடைகிறது.

    மீண்டும் கர்நாடக மாநிலம் கோலார் வனப்பகுதி வழியாக, ஆந்திர மாநிலம் சித்தூர் வனப் பகுதிக்கு செல்கிறது. அவ்வாறு செல்லும் யானை கள், ரெயிலில் மோதியும், கிணற்றில் தவறி விழுந்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் மின் வாரிய துறையினர் யானை வழித்தடங்களில் உள்ள மின்கம்பங்களில் இரும்பு வேலி அமைத்துள்ளனர்.

    இது குறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறும்போது, மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள மின்கம்பங்கள் அனைத்தும் மாற்றப்பட்டும், தேவையான இடத்தில் உயர்த்தப்பட்டும் உள்ளன.

    இதேபோல் மின்கம்பங்களை யானை சேதப்படுத்தி, அவை கீழே விழும்போது, மின்வயரில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில், மின் கம்பத்தை சுற்றி இரும்பு முள்வேலி அமைத்துள்ளோம்.

    இதனால் யானைகள் மின்கம்பத்தை ஒட்டிச் சென்றாலும், கம்பத்தை எதுவும் செய்யாது. தாழ்வாக சென்ற மின் கம்பிகளும் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளன. யானை வழித்தட பகுதியில் மின்வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்வதாக தெரி வித்தனர்.

    • பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள உழவர் சந்தை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர்கள் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர். வயது மூத்தவர்கள் மாலை நேரத்தில் நடை பயணம் மேற்கொண்டு விட்டு பின்பு இந்த பூங்காவில் ஓய்வெடுத்து வந்தனர்.

    ஆனால் தற்பொழுது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி இந்த பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவை சரி செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×