search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siege"

    • கார்த்தி (25). மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
    • அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கார்த்திக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த செலவடை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் கார்த்தி (25). மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    கள்ளத்தொடர்பு

    அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கார்த்திக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது.

    இதையடுத்து கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் கார்த்திக்குடன் ஊரைவிட்டு சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    முற்றுகை

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இருவரையும் பிடித்து இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர், ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
    • வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என முத்திரையிட வலியுறுத்தல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குன்னம் தாலுகா ஓலைப்பாடி புதுக்காலனி, கீழப்புலியூர் சிலோன் காலனி மற்றும் வேப்பந்தட்டை தாலுகா கள்ளப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட (100 நாள் வேலை) தொழிலாளர்கள் தனித்தனி குழுவாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி அவர்கள் கூறுகையில், தற்போது 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் அடையாள அட்டையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்று பி.ஐ.பி.-எச்.எச். முத்திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் எங்களின் அடையாள அட்டையில் அந்த முத்திரையிடப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை ஆய்வு செய்து எங்களுக்கும் அடையாள அட்டையில் அந்த முத்திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

    • டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • போதை ஆசாமிகளால் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவதில்லை.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை- சிவகங்கை பிரதான சாலையில் திரு மணவயல் கிராமம் உள்ளது. இங்குள்ள கோவில் எதிரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வரும் குடிமகன்களால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.போதை ஆசாமிகளால் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவதில்லை. பள்ளி கல்லூரி, மாணவிகள் ரோட்டில் செல்லும் பொழுது மது பிரியர்களின் அச்சுறுத்தல் உள்ளது.மேலும் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

    எனவே கோவில் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

    இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வேப்பந்தட்டை அருகே கடன் வாங்கி ஏமாற்றிய ஆசிரியர் பள்ளிக்கு வர எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
    • ஆசிரியர் ஒருவர் கடந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் பணிபுரிந்தபோது பொதுமக்களிடம் வட்டிக்கு கடனாக பல லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் கடந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் பணிபுரிந்தபோது பொதுமக்களிடம் வட்டிக்கு கடனாக பல லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பணத்தை திருப்பி தராமல் அரும்பாவூர் பள்ளிக்கு பணி மாறுதலாகி சென்று விட்டார். இந்தநிலையில் மீண்டும் விசுவக்குடி பள்ளிக்கு பணி மாறுதலாகி நேற்று வேலைக்கு வந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியர் இந்தப் பள்ளியில் பணிபுரிய கூடாது. பணிக்கு வந்தால் நாங்கள் பள்ளியை இழுத்துப்பூட்டுவோம் என கூறி முற்றுகையிட்டனர்.

    இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மாலா ரோஸ்லின் இந்த தகவலை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அம்சவள்ளிக்கு தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் அம்சவள்ளி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் இந்த பள்ளியில் இருந்து அந்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்படுவார் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
    • ஏற்கனவே இருந்த கழிவறையும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது.

    இங்கு மூலைக்கரைப் பட்டி சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த 450 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    முற்றுகை

    கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளி திறக்கப் பட்டது. மாணவ-மாணவி கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால் பள்ளியில் போதிய வகுப்பறை வசதி கள் இல்லை. கழிவறை களும் கட்டப்படவில்லை. ஏற்கனவே இருந்த கழிவறையும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    புதிய கழிப்பறை கட்டும் பணிகள் மிகவும் மந்தமான முறையில் நடைபெற்று வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதுபோல பாது காக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யவில்லை.

    இதையடுத்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    • சிப்காட் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
    • அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஜூன் 12-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி நிருபர்களிடம் கூறியதாது:-

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்தில், சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க நிலம் எடுக்க உள்ள பகுதிகளான வளையப்பட்டி, லத்துவாடி, பரளி, ஆண்டாபுரம் ஆகிய கிராமங்களை பார்வையிட்டோம்.

    ஏறத்தாழ 2,500 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளதாக தகவல் உள்ளது. இதனால் ஆயிரக்ணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், கிணறுகள் பாதிக்கப்படும். நிலம் எடுக்கும்போது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். எனினும் இதுவரை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை.

    பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு பற்றி எதுவும் சொல்ல வில்லை. இதனால் விவசாயி கள் அச்சத்தில் உள்ளனர். சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் எடுப்பதில் ஆட்சே பனை இல்லை. இதில் விவசா யிகளுக்கு சொந்தமான நிலம் எடுப்பதில் தான் ஆட்சேபனை யாக உள்ளது.

    விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டுமென்ப தற்காக ஆய்வு செய்தோம். சிப்காட் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஜூன் 12-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    தற்போது நிலம் கையகப்படுத்த உள்ள இடத்தின் அருகே, ஏற்கனவே சிட்கோவிற்கு எடுக்கப்பட்ட நிலம் கடந்த 10 ஆண்டுகளாக அப்படியே உள்ளது. எந்த பயன்பாட்டிற்கும் நிலம் பயன்படுத்தப்படவில்லை. நாமக்கல் நகராட்சி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் தூசூர் ஏரியில் கலக்கச் செய்கிறது. இதனால் ஆயிரக்கணககான விளைநிலம் பாதிக்கப்படுகிறது. இதற்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பணிகளை ஏன் நிறுத்துகிறாய் என்று குமார், ரமேஷிடம் கேட்டனர்.
    • இதையடுத்து அவரிடம் புகார் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடுத்த கூனிமேட்டில் பழைமை வாய்ந்த பொன்னியம்மன் கோவில் உள்ளது. சுற்று வட்டார கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குலதெய்வமாக பொன்னியம்மன் உள்ளது. பாதுகாப்பு கருதி கோவிலை சுற்றிலும் மதிர்சுவர் அமைக்க கிராம மக்கள் முடிவெடுத்து பணிகளை தொடங்கினர். இந்நிலையில் கோவிலின் அருகில் குடியிருக்கும் குமார், ரமேஷ் ஆகியோர் மதில் சுவர் கட்டுமான பணிகளை தடுத்து, கட்டுமான பணி செய்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்து தி.மு.க. பிரமுகர் பெருமாள் அங்கு விரைந்து வந்தார். அவருடன் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பணிகளை ஏன் நிறுத்துகிறாய் என்று குமார், ரமேஷிடம் கேட்டனர். கோவிலுக்குள் சென்று வருவதற்கு 2 வழிகள் வைக்க வேண்டும். இல்லை என்றால் மதில் சுவர் கட்டவே கூடாது என்று கூறினார்கள். கோவிலின் பாதுகாப்பிற்காகவே மதில் சுவர் அமைக்கப்படுகிறது.

    எனவே, ஒரு வழியே போதும் என்று பொதுமக்களும், தி.மு.க. பிரமுகர் பெருமாளும் அவர்களிடம் கூறினார்கள். இதில் சமாதானம் அடையாத குமார், ரமேஷ் ஆகிய 2 பேரும் தி.மு.க. பிரமுகர் பெருமாளை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். 2 வழி வைக்கவில்லை என்றால் மதில் சுவர் கட்டக்கூடாது. மீறி கட்டினால் உங்கள் அனைவரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி, அங்கு பணி செய்த கட்டுமான ஊழியர்களை விரட்டினர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், தி.மு.க. பிரமுகர் பெருமாள் தலைமையில் மரக்காணம் போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகாரளிக்க அனுமதி கேட்டனர். கள்ளச்சாராய வழக்கு விசாரணைக்கு அவர் சென்றுள்ளதாக பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர். 

    இதனை அடுத்து தி.மு.க. பிரமுகர் பெருமாள் மரக்காணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு இங்கு வரவேண்டுமென கோஷம் எழுப்பினார். உடனடியாக அங்கு வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தி.மு.க. பிரமுகர் பெருமாள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தங்களின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நாளை துணை போலீஸ் சூப்பிரண்டு கூனிமேட்டிற்கு வந்து நேரில் விசாரணை நடத்துவார் என்று கூறினார். இதையடுத்து அவரிடம் புகார் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். தி.மு.க. பிரமுகர் பெருமாள், கூனிமேடு கிராம மக்களுடன் சேந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2022-ம் ஆண்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், பணம் செலுத்திய 130 விவசாயி களுக்கு 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்ப டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • ஆனால் இதுவரை அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம், தென்னங்குடி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2022-ம் ஆண்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், பணம் செலுத்திய 130 விவசாயி களுக்கு 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்ப டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இன்று ஆத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களுக்கு அரசு வழங்கிய ஆணையுடன் நேரில் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், முதல்-அமைச்சர் அறிவித்த விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தியும், கடந்த ஒரு ஆண்டுகளாக எங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதிகாரிகள், உத்தரவு வரவில்லை என கூறி வருகின்றனர்.

    உடனடியாக எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். கடந்த ஒரு வருட காலமாக இதற்காக அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். மாடுகளுக்கு கூட குடிதண்ணீர் இல்லா மல் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.  

    • திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தில் சாக்கடை நீர் ,கழிவு நீர், மழை நீர் நீண்ட நாட்களாக தெருவில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
    • இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ,இதனை கண்டித்து தெருவில் நாற்று நட்டு போராட்டம் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மேற்கு தெருவில் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த தெருவில் சாக்கடை நீர், கழிவுநீர், மழை நீர் நீண்ட நாட்களாக தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் சிறுவர்கள் பள்ளி மாணவ -மாணவிகள் பொதுமக்கள் இதனை கடந்து செல்ல முடியாமலும் சுகாதார சீர்கேடு, நோய்கள் பரவுவதாகவும் இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியும், இதனை கண்டித்து தெருவில் நாற்று நட்டு போராட்டம் செய்தனர். அந்த இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இது பற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, நந்தகோபால கிருஷ்ணன், திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள், போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடனடியாக தெருவில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், தெருவின் நடுவே உள்ள மின்கம்பத்தினை அகற்றவேண்டும். புதிய சாலை அமைக்கவேண்டும் என கூறினர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைத்து தரப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர். அதன் பேரில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி லெப்பைக்குடிகாடு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
    • நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அடுத்துள்ள கீழக்குடிகாடு வெள்ளாற்று தடுப்பணைகளில் இருந்து 73 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதற்காக தமிழக அரசு வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி 70 சதவீத பணிகள் முடிந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் மற்றும் லெப்பைக்குடிகாடு பொதுமக்கள் வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தை வேறு பகுதியில் தொடங்கக்கோரியும், பேரூராட்சி, கிராம சபை கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் பணிகளை தடுத்து நிறுத்தக்கோரியும், இது தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சார்பில் பேரூராட்சி தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் பேரூராட்சித் தலைவர் வரும் செவ்வாய் கிழமையன்று தீர்மானம் நிறைவேற்றுவதாக உறுதியளித்ததின் பெயரில் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் கலைந்து சென்றனர்.


    • மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டியில், சிப்காட் எதிர்ப்புக் குழு ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
    • இதில் கொ.ம.தே.க உறுப்பினர்கள், விவசாய முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டியில், சிப்காட் எதிர்ப்புக் குழு ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழக பொதுச்செ யலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.

    கொ.ம.தே.க. தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தமிழக அரசு, மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளை யப்பட்டி, புதுப்பட்டி, பரளி, அரூர் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும். மேலும், இப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமையும்போது, இங்குள்ள நீர்நிலைகள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், கால்ந டைகள் மற்றும் இயற்கை சார்ந்த விவசாயங்கள் பாதிக்கப்படுவதுடன், நீர் மாசுபடுதல், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

    வளையப்பட்டி, புதுப்பட்டி, பரளி, அரூர் ஆகிய பகுதிகளில், சிப்காட் தொழிற்பேட்டைக்காக நிலம் எடுப்பது சம்மந்தமாக, மாவட்ட நிர்வாகத்தால் அப்ப குதியில் உள்ள மக்களோடு இதுவரை சிறிய ஆலோசனைக் கூட்டம் கூட நடத்தவில்லை. உடனடியாக கூட்டம் நடத்தி, சிப்காட் குறித்த மக்களின் நிலைப்பாட்டை அரசுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால், நாமக்கல் மாவட்டத்தில், படித்த இளைஞர்கள், 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு தேவையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என, அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், இது சம்மந்தமாக, அமைச்சர்க ளோ, மாநில தொழில் துறை செயலாளரோ, சிப்காட் தலைவரோ, கலெக்டரோ என யாரும் இதுவரை எதுவும் உறுதிமொழி கூறவில்லை. அதனால், அப்பகுதி விவசா யிகள், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படுமா?, அமைக்கப் படாதா? என்பது குறித்து, சிப்காட் தலைவர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடத் தவறும் பட்சத்தில், சென்னை யில் உள்ள தமிழக கவர்னர் மாளிகை முன், திட்டத்தை ரத்து செய்ய வலி யுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தி, கவர்னரிடம் இது குறித்து மனு கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் கொ.ம.தே.க உறுப்பினர்கள், விவசாய முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • மாநில தலைவர் சாமிநாதன் உருவப் படங்களோடு கூடிய பேனர்களை முகாம் நடக்கும் இடத்தின் முன்பு வைத்தனர். இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் ஏற்பாட்டின்பேரில் குடிமைப்பொருள் வழங்கல்துறை சார்பில் ரேஷன்கார்டு மாற்றல் முகாம் நடத்த எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பா.ஜனதாவினர், குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், மாநில தலைவர் சாமிநாதன் உருவப் படங்களோடு கூடிய பேனர்களை முகாம் நடக்கும் இடத்தின் முன்பு வைத்தனர். இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அரசு விழாவில் கட்சி பேனர்களை எப்படி வைக்கலாம்? என கேள்வி எழுப்பினர். போலீசாரை வரவழைத்து, பேனர்களை அகற்றச்செய்தனர். திடீரென முகாம் ரத்து செய்யப்ப ட்டதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்தது. இதனால் எம்.எல்.ஏ. வைத்தியநாதன், ஆதரவாளர்கள், தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆத்திரமடைந்தனர்.

    அவர்கள் தட்டாஞ்சா வடியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். எம்.எல்.ஏ. தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பறிக்காதே, பறிக்காதே, எம்.எல்.ஏ. உரிமையை பறிக்காதே, நியாயம்தானா? நியாயம்தானா? பா.ஜனதா வே நியாயம்தானா? என கோஷமிட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முற்றுகை போராட்டம் நடந்தது. இடையில் அவர்கள் சாலையை மறித்து மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் காங்கிரசாருக்கும், போலீ சாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அகற்றி குடிமைப்பொருள் அலுவலக வாசலுக்கு அனுப்பினர்.

    குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகம் முன்பு காங்கிரசார் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அலுவலகவாயிலை பூட்டி பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் உள்ளே செல்ல முடிய வில்லை. தகவலறிந்த வைத்திலிங்கம் எம்.பி. சம்பவ இடத்துக்கு வந்தார். அவரும் எம்.எல்.ஏ.வுடன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் வைத்திலிங்கம் அங்கிருந்து கிளம்பி ச்சென்றார். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி இயக்கு னரிடம் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அழைத்துச்சென்றனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்துக்கு சென்று நுழைவுவாயில் முன்பு போராட்டம் நடத்தினர்.

    ×