search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "savings"

    • கடன் பெறுவதற்கு நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனத்தை தேர்வுசெய்வது முக்கியமானது.
    • தேவையை கருத்தில் கொண்டு உங்களுக்கு வேண்டிய கடன் தொகையை திட்டமிடுங்கள்.

    திடீரென்று வரும் பணத் தேவைகளுக்காக, வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களில் தனி நபர் கடன் வாங்கி சமாளிக்க முற்படுகிறோம். சில நேரங்களில் கடன் பெறுவதிலும், திரும்ப செலுத்துவதிலும் பலர் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். இதனை தவிர்க்க சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். அவை இங்கே….

    சிறந்த நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள்: கடன் பெறுவதற்கு நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனத்தை தேர்வுசெய்வது முக்கியமானது. தற்போது பல நிறுவனங்கள் விரைவாகவும், வசதிக்கேற்றவாறும் தனி நபர் கடன் வழங்குகிறார்கள். நீங்கள் யாரிடம் கடன் வாங்கினாலும் அவர்களின் மதிப்புரைகளையும், ஏற்கனவே அவர்களிடம் கடன் பெற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டு நம்பகத்தன்மையை ஆராய்ந்த பின்னர் அணுகுங்கள்.

    தவணைகளை தவறாமல் செலுத்துங்கள்: நீங்கள் கடனை திருப்பி செலுத்தும் முறையை வைத்தே, உங்கள் கடன் பெறும் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. தவணைகளை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் கிரெடிட் ஸ்கோர், சிபில் ஸ்கோர் போன்றவை சரியான அளவில் பராமரிக்கப்படும். குறைந்த ஸ்கோர் இருக்கும் பட்சத்தில், உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம், நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்க முடியும்.

    கடன் தொகையை தீர்மானியுங்கள்: நீங்கள் பல்வேறு காரணங்களுக்காக கடன் பெற முற்படலாம். உங்கள் தேவையை கருத்தில் கொண்டு உங்களுக்கு வேண்டிய கடன் தொகையை திட்டமிடுங்கள். உங்களால் திரும்ப செலுத்துவதற்கு இயன்ற தொகையை, உங்கள் வருமானத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட நேரிடும்.

    ஆவணங்களை சரிபாருங்கள்: சரியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே உங்களால் கடனுக்காக விண்ணப்பிக்க முடியும். அடையாள சான்று, முகவரி ஆதாரம், வருமான ஆதாரம் போன்றவை அடிப்படை ஆவணங்கள். கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால் கடன் அளிக்கும் நிறுவனங்கள் உங்களிடம் தெரிவிப்பார்கள். அந்த ஆவணங்களையும் ஒப்படைத்த பின்னரே கடன் பெற முடியும்.

    வட்டி விகிதங்களை ஒப்பிடுங்கள்: பல்வேறு நிறுவனங்களின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம், சிறந்த வட்டி விகிதங்களை கண்டறிய முடியும். இது குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடனைப் பெறுவதற்கு உதவும்.

    கட்டணங்களை மதிப்பிடுங்கள்: தனி நபர் கடனுக்காக விண்ணப்பிக்கும் முன்னரே, அந்த நிறுவனங்கள் வசூலிக்கும் பல்வேறு கட்டணங்களையும் கவனியுங்கள். செயலாக்க கட்டணம், தாமதமாக செலுத்தும் கட்டணம், முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் போன்ற உங்கள் செலவுகளை மதிப்பீடு செய்யுங்கள்.

    திரும்ப செலுத்தும் திட்டத்தை கவனியுங்கள்: தனி நபர் கடனுக்காக அணுகுவதற்கு முன்னர், உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் அனைத்து நிதி சார்ந்த கடமைகளையும் கருத்தில் கொள்ளுங்கள். வருமானத்திற்கு அதிகமாக கடன் பெறுதல், உங்களால் திரும்ப செலுத்த முடியாத சூழலை உருவாக்கி விடும். தெளிவான திருப்பி செலுத்தும் திட்டத்தை வைத்திருப்பதன் மூலம் உங்கள் நிதியை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

    • தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறிக்கொண்டே போகிறது.
    • தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது.

    பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது என்பது காலம் காலமாக நடந்து வரும் தவிர்க்க முடியாத வழக்கம். நமது நாட்டில் தங்கத்தின் பயன்பாடு என்பது அதிகரித்து தான் வருகிறது. திருமணம் உள்பட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கிற போது பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை.

    இதனால் தான் என்னவோ... தங்கத்தின் விலை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏறிக்கொண்டே இருக்கிறது. முதலீடு செய்ய வேண்டும் நிலத்தில் காசை போடவேண்டும் அல்லது தங்கத்தில் போட வேண்டும் என்று சொல்வார்கள். இதனால் தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது.

    தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் குறுகிய கால முதலீடாக தங்கத்தை பலரும் வாங்கி குவிக்க தொடங்கி விட்டனர். எனவே தங்க நகைகள், தங்கத்தில் முதலீடு செய்யக் கூடிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் கோல்டு ஈ.டி.எப் பிளான் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.

    ஈ.டி.எப் திட்டத்தின்படி தங்கத்தை தொழில் நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் எப்படி வாங்கவோ விற்கவோ இயலுமோ அதே போல் தங்கத்தை வாங்கவோ விற்கவோ முடியும்.இம்முறையில் பரிவர்த்தனையாகும் தங்கம் நேரடியாக தரப்படமாட்டாது. மாறாக அதுவாங்குகிறவரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    தேவை ஏற்படும்போது பங்குகளை விற்பதைப்போல் இந்த தங்கத்தையும் விற்பனை செய்து பணத்தை வாங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தினால் தங்கத்தின் தரத்தைப்பற்றியோ பாதுகாப்பு பற்றியோ எந்த பயமும் உங்களுக்கு இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் கோல்டு ஈ.டி.எப் திட்டத்தில் செய்த முதலீடு சுமார் 30 சதவீத வருவாயை எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தனி நபருக்கான வட்டி விகிதம் 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருக்கிறது.

    இந்த நிலையில் கோல்டு ஈ.டி.எப் திட்டம் நிச்சயம் லாபகரமானதாகவே விளங்குகிறது. தங்கம் நகையாக முதலீடு செய்கிறபோது செய்கூலி சேதாரம் போன்றவை கழிக்கப்பட்டு விடுகிறது. எனவே இப்போது வங்கிகளில் கட்டிகளாக விற்கப்படும் தங்கத்தை வாங்கி அப்படியே வங்கி லாக்கர்களிலேயே அதனை வைத்தும் பாதுகாக்க தொடங்கி விட்டனர்.

    பின்னர் தங்கத்தின் விலை பன்மடங்காக அதிகரித்து பணத்தேவையும் ஏற்படுகிறபோது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்து அதிக லாபத்தை அடையமுடிகிறது. இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த கோல்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. அதாவது தங்கத்திற்கான பணத்தை நீங்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அவர்களும் உங்கள் பெயரில் தங்கம் வாங்கி உள்ளதாக கூறி உங்களுக்கு டாக்குமெண்டும் அனுப்பி வைப்பார்கள்.

    • சுதந்திர தினத்தின் அமுத பெருவிழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுங்கள்.
    • செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு எண், கணக்கு துவங்கிய அலுவலகத்தின் பெயர் ஆகிய விவரங்கள் எழுதிய அஞ்சல் அட்டையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற ஆகஸ்ட் 13.8.2022 ஆகும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினத்தின் அமுத பெருவிழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுங்கள். உங்களின் செல்ல மகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்கி சிறந்த பரிசினை இன்றே அளியுங்கள்‌. நாமக்கல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் வருகிற ஆகஸ்ட் 15.8.2022- க்குள் நீங்கள் துவங்கும் செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கின் விவரங்களை ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நாமக்கல் கோட்டம் நாமக்கல்-637001 என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

    குழந்தையின் பெயர், செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு எண், கணக்கு துவங்கிய அலுவலகத்தின் பெயர் ஆகிய விவரங்கள் எழுதிய அஞ்சல் அட்டையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற ஆகஸ்ட் 13.8.2022 ஆகும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு சிறந்த பரிசு வழங்கப்படும் . மேலும் 6385377754 என்ற செல்போண் எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • மின் சிக்கனத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • திறன் மேம்பாட்டு குழு என்ற பெயரில் ஒவ்வொரு பள்ளிக்கும் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் மின்சாரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மின் சிக்கனத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மின் சிக்கனத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அந்தந்த பள்ளிகளில் ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக திறன் மேம்பாட்டு குழு என்ற பெயரில் ஒவ்வொரு பள்ளிக்கும் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக நெல்லை மாவட்டத்தில் 30 பள்ளிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் 20 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

    இந்த குழுவில் உள்ள ஒருங்கிணைப்பா் ளர்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் சார்பில் நெல்லையில் இன்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. பயிற்சி வகுப்பினை மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ் மணி, உதவி செயற்பொறியாளர் (பொது) சைலஜா, உதவி செயற்பொறியாளர் (மக்கள் தொடர்பு அலுவலர்) முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு மின் சிக்கனம் குறித்து விளக்கினர். இந்த ஒரு நாள் பயிற்சியில் 60 ஆசிரியர்கள் மற்றும் மின் பொறியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    செல்வ வளம் சேர்ப்பதில் ஆண்களின் நிதி ஆலோசகராக விரும்பும் பெண்மணி நீங்களானால், இந்த கட்டுரை உங்களுக்காகத்தான். தொடர்ந்து படியுங்கள். இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நிதி நிர்வாக நுட்பங்கள்.
    வீட்டின் செல்வ செழிப்புக்கு உறுதுணையாகும் பெண்கள், வீட்டுப்பராமரிப்பில் மட்டுமே பெண்கள் கவனம் செலுத்தி வந்த காலங்கள் எல்லாம் பழங்கதையாகிப்போயிற்று. நாகரீக உலகில் ஆண்களின் சேமிப்புகளை முறையாக முதலீடு செய்வதற்கும் செல்வம் சேர்க்கும் அவர்களது முயற்சியில் உதவிடவும் இன்றைய பெண்கள் தயாராகி வருகின்றனர்.

    வீட்டின் சேமிப்பை வளப்படுத்துவதில் ஆண்களின் முதல் சொத்தாக விளங்குவது அவர்களது இல்லத்தரசிகளே. செல்வ வளம் சேர்ப்பதில் ஆண்களின் நிதி ஆலோசகராக விரும்பும் பெண்மணி நீங்களானால், இந்த கட்டுரை உங்களுக்காகத்தான். தொடர்ந்து படியுங்கள். இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நிதி நிர்வாக நுட்பங்கள். இதை தெரிந்து கொண்டால் பணம் சேர்ப்பதில் உங்கள் கணவருக்கு நீங்கள் சிறந்த துணையாக முடியும்.

    எதற்கும் திட்டமிடுவது தான் முதல் படி. `திட்டம் சரியாக இருந்தால் பாதி வெற்றி அடைந்தாயிற்று’ என்னும் ஆங்கில பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்.

    உங்கள் செலவுகளை- அடிப்படை செலவுகள், அதிக அவசியமல்லாத செலவுகள், சொத்துக்கள் மீதான முதலீட்டு செலவுகள் மற்றும் சேமிப்புக்கள் என வகைப்படுத்திக்கொள்ளுங்கள்.

    மளிகை, மருந்து, வாடகை, வீட்டுப்பணியாள் சம்பளம், கல்விக்கட்டணம், மின் கட்டணம், டெலிபோன் கட்டணம் போன்றவை அடிப்படை செலவுகளாகும். சுற்றுலா, சினிமா, உணவு விடுதிகளுக்கு செல்லுதல் போன்றவை அதிக அவசியமல்லாத செலவுகளாகும். வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் தனி நபர் கடன் ஆகியவை சொத்துக்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளாகும். தங்க ஆபரணங்கள், வங்கி டெபாசிட்டுகள், பங்கு வர்த்தக முதலீடுகள் போன்றவை சேமிப்புகளாகும்.



    மேற்சொன்ன ஒவ்வொரு இனத்திற்கும் அடுத்த மாதம் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை முன்னதாக திட்டமிட்டு அந்தந்த தொகையை தனித்தனியே எடுத்து வையுங்கள். வரவோ செலவோ அவற்றை தனித்தனியாக எழுதி வையுங்கள். என்னென்ன வகைக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை சரியாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

    உதாரணமாக பேப்பர்காரர், காய்கறிக்காரர், பால்காரர், சலவை தொழிலாளி இவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை, வீட்டுப்பணியாளருக்கு கொடுத்த முன்பணம், வங்கியில் செலுத்த வேண்டிய பணவிடை, மற்றும் காசோலை பற்றிய தகவல்களை ஞாபகமாக எழுதி வையுங்கள். அந்தந்த செலவுகள் முடிந்ததும் அதையும் மறக்காமல் குறிப்பெடுங்கள்.

    ஒவ்வொரு இனத்துக்கும் நீங்கள் திட்டமிட்ட செலவு அதனை மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை ஒரு இனத்தில் நீங்கள் திட்டமிட்டதை விட அதிகமாக செலவு செய்து விட்டதாக தெரிய வந்தால், வேறு ஏதாவது ஒரு செலவை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடியுமா என்று பாருங்கள்.

    பல நேரங்களில் உபரி வருமானத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. உதாரணமாக, போனஸ் பணத்தில் தனக்கொரு செல்போன் அல்லது லேப்டாப் அல்லது கேமராவை வாங்கலாமென கணவர் நினைக்கும் போது, தங்க ஆபரணங்கள் வாங்குவதே சரி என மனைவி கருதலாம். இதுபோன்ற தருணங்களில் எதற்கு முக்கியத்துவம் தருவது என்பதை இருவரும் கலந்து பேசி முடிவெடுப்பது நல்லது.

    கல்வி, மருத்துவம் மற்றும் உணவுக்கு முன்னுரிமை தருவது மிகவும் சரியானது. செலவுகளை கட்டுப்படுத்தி மாதாந்திர வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க கற்றுக்கொண்டால் அவற்றை சிறப்பான அளவில் முதலீடு செய்யலாம்.
    ஆண்டுக்கு எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்கள் கூட, முறையான முதலீடுகளை மேற்கொண்டால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
    இந்த இடைக்கால பட்ஜெட்டில் பலரது வயிற்றில் பால் வார்த்த விஷயம், வருமான வரி வரம்பு உயர்வு.

    ஆனால் உடனே சிலர் சில கணக்கீடுகளைக் கூறி பலரையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறார்கள்.

    இந்நிலையில் மத்திய வருவாய்த் துறைச் செயலர் அஜய் பூஷன் பாண்டே ஒரு தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார்.

    அவரது விளக்கத்தின்படி, ஆண்டுக்கு எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்கள் கூட, முறையான முதலீடுகளை மேற்கொண்டால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

    அதாவது, தற்போது ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆக, முதல் விடுதலை, ரூ. 5 லட்சம் வரை வரி கிடையாது.

    சம்பளதாரர்கள் தம்முடைய மற்றும் தம்மைச் சார்ந்தவர்களின் போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளை மேற்கொள்கிறார்கள். அதற்கு நிலையான கழிவாக ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் என இருந்ததை தற்போது ரூ. 50 ஆயிரமாக அறிவித்திருக்கிறார்கள். ஆக ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் = ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    சம்பளம் வாங்குபவர்கள் அனைவருக்குமே வருங்கால வைப்புநிதி எனப்படும் பி.எப். பிடித்தம் செய்யப்படும். ஆனால் அதைத் தாண்டியும் ஆயுள் காப்பீடு, சுகன்யா சம்ரிதி யோஜனா, தேசிய சேமிப்புச் சான்று, அஞ்சலக சேமிப்புத் திட்டம், மியூச்சுவல் பண்டு போன்ற பல்வேறு திட்டங்களில் கொஞ்சம் யோசித்து முதலீடு செய்தால் ரூ. 1.50 லட்சத்துக்கு முழுமையாகக் கழிவு பெறலாம்.

    அப்படி முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பமில்லாவிட்டாலும், வீட்டுக் கடன் பெற்றிருந்தால் அது வருமான வரி விஷயத்தில் உதவும்.

    வீட்டுக் கடனுக்கு திருப்பிச் செலுத்தும் அசல் தொகை இந்த 80 சி பிரிவின் கீழ்தான் கழியும். ஆக, ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் = ரூ. 7 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    வருமான வரி பிரிவு 24-ன் கீழ், வீட்டுக் கடன் தொகைக்குத் திருப்பி செலுத்தும் வட்டித் தொகையாக ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை வரிக் கழிவு பெறலாம். ஆக, வீட்டுக் கடன் அசல் தொகைக்கு 80 சி என்றால், வீட்டுக் கடன் வட்டிக்கு இந்தப் பிரிவு 24. மொத்தமாக ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் = ரூ. 9 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    80 சிசிடி (1பி) பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் வரை என்பிஎஸ் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து வரிக் கழிவு பெறலாம். இதுவும் ஒரு விதமான நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டம்தான். அரசின் உத்தரவாதத்துடன் இந்த முதலீடுகள் நன்கு செயல்படுகின்றன.

    இப்போது ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் + ரூ. 50 ஆயிரம் = ரூ. 9.50 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    சம்பளம் பெறும் ஒருவர் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளார் என்றால் ஓர் ஆண்டில் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு 80 டி பிரிவின் கீழ் குறைந்தபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை வரிக்கழிவு பெறலாம். ஆக, ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 25 ஆயிரம் = ரூ. 9.75 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    மின்சாரத்தை மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாக கேட்கிறோம். ஆனால் மின் ஆற்றலை சேமிப்பது நமக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே நல்லது.
    தேவையே இல்லாத நேரத்திலும் வீட்டில் மின் விசிறி சுற்றும், மின் விளக்கு எரியும். இதை நாம் கண்டுகொள்வதே இல்லை. மின்சாரத்தை மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாக கேட்கிறோம். ஆனால் மின் ஆற்றலை சேமிப்பது நமக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே நல்லது.

    மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் காற்று மாசை குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். ஏனெனில் இரண்டு சாதாரண கார்கள் வெளியேற்றும் கார்பன்-டை ஆக்சைடை விட, ஒரு வீட்டின் மின்சார பயன்பாட்டால் அதிகமான கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறும். பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாட்டில் பிரிட்ஜ், ஏ.சி., மின்விளக்குகளுக்கு அதிகம் செலவாகிறது.

    ஏ.சி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடி வைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும். ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும். சுவிட்சுகளும், அவற்றை நாம் பயன்படுத்தும் முறையும் கூட மின் ஆற்றலை வீணாக்கும் வகையில் அமைந்துவிடும். எனவே இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

    வீட்டின் மின் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 20 சதவீதம் ஏ.சி.க்கு செலவாவதால் ஏ.சி. எந்திரத்தின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் நல்லது. ஏ.சி.யின் ‘அவுட்டோர் யூனிட்’டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலை சேமிக்க அது உதவும். வீட்டை கிழக்கு, மேற்காக அமைப்பதன் மூலமும், வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதன் மூலமும், பசுமைக் கூரை அமைப்பதன் மூலமும், மென்மையான, ஒளிரும் நிற பெயிண்ட்டை வீட்டின் வெளிச் சுவர்களில் பூசுவதன் மூலமும் மின் ஆற்றலை சேமிக்கலாம்.

    அதே போன்று பிரிட்ஜையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான குளிர் நிலவும்படி பிரீசர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமான வரையில் பிரிட்ஜை அடிக்கடி மூடி திறப்பதைக் குறைத்து கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை பிரிட்ஜை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.

    பிரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் பிரிட்ஜின் மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது. பிரிட்ஜின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். அதில் இடைவெளி இல்லாமல் இருப்பது அவசியம்.

    வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை எப்போதும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதாவது அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்கு துணிகள் இடம் பெற வேண்டும். டிடர்ஜெண்ட் பவுடர் தேவையான அளவு போட வேண்டும். மிக அழுக்கான துணிகளுக்கு மட்டுமே சுடுநீரைப் பயன்படுத்த வேண்டும். எனவே வீடுதோறும் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுவை தடுப்போம்.
    பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அது ஒன்றும் பிரச்சினையில்லை. அவற்றை எப்படி உபயோகிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
    இன்றைய நிதி நிர்வாகத்தில் பலருக்கும் தவிர்க்கமுடியாத விஷயமாகிவிட்டது, கிரெடிட் கார்டு. அதை சரியாகப் பயன்படுத்தி, உரிய நேரத்தில் தவணைகளைச் செலுத்துவதன் மூலம் நல்ல கடன் வரலாற்றைப் பராமரிக்க முடியும்.

    பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அது ஒன்றும் பிரச்சினையில்லை. அவற்றை எப்படி உபயோகிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

    சிலர், தமது செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதத்தில், கிரெடிட் கார்டை திருப்பி அளித்துவிடலாம் என்று எண்ணலாம்.

    உண்மையாகவே அவற்றை ரத்துச் செய்ய விரும்புகிறீர்களா? அல்லது அப்படியே பயன்படுத்தாமல் வைத்திருக்கப் போகிறீர்களா? கிரெடிட் கார்டை ரத்துச் செய்வது சரியான வழியா? அது நம்மைப் பாதிக்குமா?

    இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இங்கே காண்போம்...

    கிரெடிட் கார்டை ரத்துச் செய்வது, ‘சிபில்’ எனப்படும் உங்களின் கடன் மதிப்பெண்ணைப் பாதிக்கும் என்றாலும், அது, கிரெடிட் உச்ச மதிப்பு, கார்டை பயன்படுத்திய காலம், உங்கள் மொத்த கிரெடிட் கார்டு தொகுப்பில் குறிப்பிட்ட கார்டின் விகிதம் போன்ற முக்கியக் காரணிகளைப் பொறுத்தது.

    உங்கள் கிரெடிட் கார்டு கணக்கை மூடும்போது, உங்களின் மொத்த கடன் வரம்பும் குறையும் என்பதால், கடன் மதிப்பெண்ணும் குறையும். குறையக்கூடிய மதிப்பெண்ணின் அளவு, உங்களின் மற்ற கிரெடிட் கார்டுகளில் உள்ள கடனின் அளவைப் பொறுத்தது. அதாவது, அதிகக் கடன் வரம்புள்ள கார்டை ரத்து செய்யும்போது, குறைந்த வரம்புள்ள கார்டை ரத்து செய்வதைக் காட்டிலும் அதிகப் பாதிப்பு ஏற்படும்.

    உங்கள் கிரெடிட் கார்டின் பயன்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்பதால், கார்டில் எப்போதும் பாக்கி வைக்காமல் பார்த்துக்கொள்வது, கடன் மதிப்பெண்ணுக்கு உதவியாக இருக்கும்.

    குறைந்த அளவு கடனுள்ள கிரெடிட் கார்டை ரத்து செய்யலாம் என்ற தவறான கருத்து நிலவுகிறது. நீங்கள் கிரெடிட் கார்டை ரத்து செய்ய விரும்புகிறீர்களோ இல்லையோ, பாக்கியுள்ள கடனை கட்டியே ஆக வேண்டும்.

    அதன் கணக்கை மூடாமல், பாக்கி கடனை கட்டி முடித்துவிட்டு அட்டையைப் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தாலும் கடன் வரம்பு அப்படியே இருக்கும்.

    நீங்கள் கிரெடிட் கார்டை ரத்துச் செய்தே ஆகவேண்டும் என்றால், அதே அளவு அல்லது அதைவிட அதிக வரம்புள்ள கார்டை வாங்காதவரை உங்களின் ஒட்டுமொத்தக் கடன் வரம்பு குறைந்துவிடும்.

    அதிகபட்ச கடன் வரம்பை வைத்திருப்பது எப்போதும் உதவும் என்றாலும், சில நேரங்களில் கிரெடிட் கார்டுகளை திருப்பிக் கொடுக்கலாம்.

    அதாவது, உங்களால் செலவு செய்வதை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்து, கார்டை பயன்படுத்தும் தூண்டுதலைத் தவிர்க்க.

    நீங்கள் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக் கட்டணம் வசூலிக்கும்போது அல்லது உங்களின் கார்டில் அதீத வட்டி விகிதம் விதிக்கும்போதும், தேவையற்ற கட்டணங்கள் வசூலிக்கும் போதும்.

    உங்களின் தேவைக்கு ஏற்றவாறு, அதிகச் சலுகைகள் தரும் கிரெடிட் கார்டு கிடைத்தால், நீங்கள் தற்போதைய இதே அளவு வரம்புள்ள கார்டாக அதை மாற்றிக்கொள்ளலாம்.

    நீங்கள் செலவு செய்த அல்லது கடந்தகால வட்டி பாக்கி இருந்தால், அவற்றைச் செலுத்த வேண்டும். உங்களுக்குத் தவறாகக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது எனக் கருதினால், அதற்கு உரிய இடத்தில் முறையிட்டு, கார்டு நிறுவனத்திடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

    சில வங்கிகள் கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது வழங் கும் சலுகைப்புள்ளிகள் பாக்கியிருந்தால், கார்டை ரத்துச் செய்ய விண்ணப்பித்த பின்பு அவற்றைப் பயன்படுத்த முடியாது என்பதால் முன்னரே பயன்படுத்திவிடுங்கள். அரிதாகச் சில நிறுவனங்கள், கார்டை ரத்துச் செய்ய விண்ணப்பித்த பின் குறிப்பிட்ட காலத்துக்கு அந்தச் சலுகை புள்ளிகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன அல்லது அதே வங்கியில் வேறு கிரெடிட் கார்டு பெற்றால், சலுகைப்புள்ளிகளை அதற்கு மாற்றவும் வழிவகை செய்கின்றன.

    ஏதேனும் பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தும் வகையில் தானாகப் பணம் கழிக்கும் வசதியை கார்டில் தேர்வு செய்திருந்தால், அதை ரத்து செய்தபின் பிரச்சினை ஏற்படும் என்பதால் மறக்காமல் இவ்வசதியை நீக்க வேண்டும்.

    சரி, கிரெடிட் கார்டை ரத்துச் செய்தே ஆக வேண்டும் என்றால், அதைச் செய்வது எப்படி?

    கிரெடிட் கார்டை ரத்துச் செய்யப் பல வழிகள் உள்ளன. அவை...

    வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து, கார்டை ரத்துச் செய்வது பற்றித் தெரிவிக்கலாம்.

    மின்னஞ்சல் வாயிலாக ரத்துச் செய்யக் கோரலாம்.

    இணையதளம் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம்.

    வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பம் அளிக்கலாம்.

    கிரெடிட் கார்டை தொடர்ந்து பயன்படுத்துவதும், ரத்துச் செய்வதும் நமது முடிவு. நம் சூழ்நிலைக்கு ஏற்ப இவ்விஷயத்தில் விவேகமாக முடிவெடுக்கலாம்.
    வீட்டை கட்டும்போது எல்லா அறைகளிலும் சூரிய ஒளி படும் விதத்தில் கட்ட வேண்டும். அதன்மூலம் மின்விசிறியின் தேவை குறைந்து மின்கட்டணத்தையும் குறைக்க முடியும்.
    வீட்டை கட்டும்போது எல்லா அறைகளிலும் சூரிய ஒளி படும் விதத்தில் கட்ட வேண்டும். அதற்கு போதுமான ஜன்னல்களை அமையுங்கள். அவை சரியான கோணத்தில் அமைந்திருந்தால் வெளிச்சம் மட்டுமல்ல, காற்றும் சீராக வரும். அதன்மூலம் மின்விசிறியின் தேவை குறைந்து மின்கட்டணத்தையும் குறைக்க முடியும்.

    ஏற்கனவே கட்டிய கட்டிடம் என்றாலும்கூட, அதிக இயற்கை வெளிச்சம் அறைக்குள் வரும் வகையில் சில மாற்றங்களைச் செய்யலாம். அதற்கு கட்டிட என்ஜினீயரிடம் ஆலோசனை பெறுங்கள்.

    ஜன்னல் கண்ணாடிகளின் மீது படியும் தூசியை அடிக்கடி துடைத்து சுத்தம் செய்யுங்கள். இல்லையென்றால் முழு வெளிச்சத்தையும் அறைக்குள் செல்ல விடாமல், ஜன்னலில் உள்ள தூசி படலம் தடுக்கும். அதுமட்டுமல்ல, ஜன்னலில் எந்த வகையான கண்ணாடி பொருத்த வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துங்கள். வண்ண கண்ணாடிகள், அடர்த்தியான மங்கலான வெள்ளைக் கண்ணாடிகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். தெளிவான கண்ணாடிகள் அதிக வெளிச்சத்தை உள்ளே அனுப்பும்.

    சுவர்களில் பூசும் பெயின்டின் நிறம்கூட மின் கட்டணத்தை அதிகப்படுத்தும் அல்லது குறைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அது உண்மை. அழுத்தமான வண்ணங்களை சுவர்களுக்கு பூசினால், அதன் மீது படும் ஒளியில் கணிசமான பகுதியை அவையே விழுங்கிக்கொண்டுவிடும். வெளிர்நிற வண்ணம் என்றால், அது வெளிச்சத்தை அதிகம் பிரதிபலிக்கும். எனவே, வெளிர்நிற வண்ணம் அடிக்கப்பட்ட சுவர்களைக்கொண்ட அறைக்கு, குறைவான மின்சக்தி கொண்ட பல்புகள் போதுமானது.



    மின்விசிறி தொடர்பாக எல்லோருக்கும் எழும் சந்தேகம் இது. மின்விசிறியின் வேகத்தை குறைத்தால், மின்சாரம் குறைவாக செலவாகுமா? என்பதுதான். இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களைப் பொறுத்தவரையில், மின்விசிறியின் வேகத்துக்குத் தகுந்த மாதிரிதான் மின்சாரமும் செலவழியும். எனவே, தேவைப்படும் அளவுக்கான வேகத்தில் மின்விசிறியை சுற்றவிடலாம்.

    எந்த வகை மின்சாதனங்கள் அதிக மின்சாரத்தை செலவழிக்குமோ, அவற்றின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு நம் வீட்டிலுள்ள எல்லா மின்சாதனங்களும் இயங்குகின்றன என்று வைத்துக் கொள்வோம். அப்போது டியூப்லைட்டைவிட, குமிழ் பல்பு அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.

    வழக்கமான குமிழ் பல்புகளைக் காட்டிலும் சி.எப்.எல் பல்புகள் நீடித்து உழைக்கின்றன. குறைந்த மின்சக்தியில் அதிக ஒளியைத் தருகின்றன. இப்போது எல்.இ.டி. விளக்குகளும்கூட குறைந்த மின் செலவில் பிரகாசமான வெளிச்சத்தை தருகின்றன. சிறிதளவு கூடுதல் பணத்தை செலவழித்தால், நீண்ட நாளைக்குப் பயன்தரும் இந்த விளக்குகளை வாங்கிவிடலாம்.
    பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை உள்ளவர்களிடமும் இல்லாதவர்களிடமும் உள்ள பொதுவான கருத்து, அது செலவழிக்கத் தூண்டக்கூடியது என்பது. அது ஒருவகையில் உண்மைதான். பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது.

    சரி, கிரெடிட் கார்டு கடன் வரம்பு என்றால் என்ன?

    ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கூடுதல் வட்டிக் கட்டணங்கள் ஏதும் இல்லாமல், வங்கி எவ்வளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது என்பதே அந்த கார்டுக்கான கடன் வரம்பு.

    இந்த அதிகபட்ச வரம்பு, உங்களின் சம்பளம், கடன் வரலாறு, திருப்பிச் செலுத்தும் திறன், பணியின் வகை, இடம் மற்றும் மற்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். பொதுவாக அதிகச் சம்பளம் பெற்றால் அதிகக் கடன் வரம்பும், குறைந்த சம்பளம் பெற்றால் குறைந்த கடன் வரம்பும் இருக்கும்.

    உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தால், அதைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும் என விரும்பி, ரூ. ஒரு லட்சமாகக் குறைப்பதன் மூலம் குறைவாகச் செலவழிக்கலாம், அந்த வரம்பைத் தாண்டி செலவுகள் போகாது என நீங்கள் நினைக்கலாம்.

    ஆனால் அது சரியல்ல. அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்...

    முதலாவதாக, அதிகக் கடன் வரம்பு என்பது நல்ல கடன் மதிப்பெண்ணுக்கான குறியீடு. இந்தக் கடன் மதிப்பெண் என்பது முக்கியமாக, உங்களின் செலவழிக்கும் திறன் மற்றும் அதற்காகக் கடன் பெற்ற பணத்தை வட்டியில்லா காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது நல்ல நிதி நிர்வாகத்துக்கான குறியீடும் ஆகும்.



    உங்களின் கடன் வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாகக் குறைத்த பின்னர், அதை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதையும் உங்களின் சம்பளத்தைக் கொண்டு செலுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே உங்களின் செலவழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும், விலையுயர்ந்த பொருட்களுக்காக செலவு செய்வதைக் குறைக்க வேண்டும்.

    ரூ. 2 லட்சம் வரம்புள்ள கிரெடிட் கார்டில் ரூ. 50 ஆயிரம் செலவு செய்தால், அது மொத்த வரம்பில் 25 சதவீதமாக இருக்கும். அதுவே ரூ. ஒரு லட்சம் வரம்புள்ள அட்டை எனில் செலவு 50 சதவீதமாக இருக்கும். கடன் வரம்பில் எப்போதும் 30 சதவீதம் வரை செலவழிப்பது என்பது ஆரோக்கியமானது என்பது வல்லுநர் கருத்து. அதிக வரம்புள்ள அட்டையில், 30 சதவீதம் என்பதே நல்ல தொகையாக இருக்கும் என்பதால் பெரிய செலவுகளை இந்த வரம்புக்கு உட்பட்டுச் செய்யலாம்.

    கிரெடிட் கார்டின் முக்கியப் பயன்பாடே, அவசரகாலச் செலவுகளில் உதவுவதும், விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்க உதவுவதும்தான். அதிகபட்ச கடன் வரம்புடன், உங்களுக்குத் தேவைப்படும் புதிதாக வெளிவந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் அல்லது திடீரெனப் பழுதான துணி துவைக்கும் எந்திரத்தின் பாகங்களை வாங்கமுடியும். இம்முறையில் அவசரகால மற்றும் திட்டமிட்ட செலவுகளின்போது பணத்தை நிர்வாகம் செய்யலாம்.

    கைக்கு வராத சம்பளத்தை மனதில் வைத்து திரும்பி செலுத்திக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் தேவையில்லாத பொருட்களை வாங்கி, அதிக கிரெடிட் கார்டு தொகையை திரும்பச் செலுத்துதல் என்னும் முடிவில்லா சுழற்சியில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, திட்டமிட்ட பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துங்கள்.

    பொதுவாக, உங்களின் நோக்கம் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, குறைப்பதாக அல்ல. அதிக கடன் வரம்பு, எதிர்காலத்தில் உங்களின் பெரிய செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.
    சென்னையை சேர்ந்த 5 வயது சிறுமி தன்னுடைய 3 ஆண்டு சேமிப்பு தொகையை கேரள நிவாரண நிதிக்காக வழங்கி இருக்கிறார். #KeralaFlood #KeralaReliefFund
    சென்னை:

    சென்னை வியாசர்பாடி ஓ.பி.காலனியை சேர்ந்தவர் கவுதம் (வயது 30). இவருடைய மனைவி ரம்யா(30). இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஜினிசா(5) என்ற பெண் குழந்தை உள்ளது.

    முதலாம் வகுப்பு படிக்கும் ஜினிசா, தன்னுடைய 3 ஆண்டு சேமிப்பு தொகையான 25 ஆயிரத்து 879 ரூபாயை கேரள நிவாரண நிதிக்காக வழங்கி இருக்கிறார். குடும்பத்துடன் கேரளா சென்று கேரள முதல் மந்திரி(பொறுப்பு) இ.பி.ஜெயராஜனிடம் வழங்கினார்கள். #KeralaFlood #KeralaReliefFund 
    வீட்டுக்கடன் பெறுவதற்கு எளிதான சூழல் அமைந்துள்ள இன்றைய நிலையில் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு எளிமையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றன.
    வீட்டுக்கடன் பெறுவதற்கு எளிதான சூழல் அமைந்துள்ள இன்றைய நிலையில் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு எளிமையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றன. வங்கி நடவடிக்கைகளில் வாடிக்கையாளரது நன்னடத்தைகளுக்கு வெகுமதி அளிக்க இருப்பதாக பல வங்கிகள் அறிவித்துள்ளன. அதாவது, வாடிக்கையாளரின் ‘கிரெடிட் ஸ்கோர்’ (Credit Score Report) நிலவரத்தை பொறுத்து வீட்டு கடன் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நான்கு அமைப்புகள்

    மத்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் அடிப்படையில் நான்கு விதமான வங்கி கடன் தகவல் அமைப்புகள் (Credit Rating Bureaus) செயல்பட்டு வருகின்றன. அவை, சிபில், ஈக்விபேக்ஸ், ஹை-மார்க் மற்றும் எக்ஸ்பீரியன் ஆகியவை ஆகும். இந்த அமைப்புகள் வாடிக்கையாளரது வங்கி கணக்குகளை அனைத்து அடிப்படையிலும் ஆராய்ந்து, சரியான நேரத்தில் தவணைகள் செலுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு என்ற விபரங்களை கவனித்து அதற்கேற்ப ‘கிரெடிட் ஸ்கோர்’ மதிப்பீட்டை அளிக்கின்றன.

    கடன் பெற்றவர் பற்றி தகவல்

    கடந்த வருடங்களில் தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறு நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெற்றவர்களது தகவல்களை மேற்கண்ட வங்கி கடன் தகவல் அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.



    ‘ஸ்கோர்’ மதிப்பிடும் விதம்

    பெற்ற கடனை திருப்பி செலுத்தும் முறையை பொறுத்து ‘கிரெடிட் ஸ்கோர்’ குறைந்தபட்சம் 300 என்ற அளவாகவும், அதிகபட்சம் 900 என்ற அளவாகவும் கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில் 500-க்கும் மேற்பட்டு கூடுதலான ‘ஸ்கோர்’ பெற்ற வாடிக்கையாளர்களுக்கு புதிய வங்கி கடன் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

    எச்சரிக்கை அவசியம்

    பொதுவாக, வங்கி வாடிக்கையாளர்களில் பலரும் முன்னர் ஒரு சமயத்தில் பெற்ற வங்கி கடனுக்கான நடவடிக்கைகளில் சரிவர செயல்படாமல் விட்ட காரணத்தால், பின்னர் கடன் பெறும் காலத்தில் அது பாதிப்பை அளிக்கக்கூடியதாக மாறும் என்பது பற்றி தெரியாமல் உள்ளதாக நிதியியல் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 
    ×