search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sanjay dutt"

    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத் பதிலளித்துள்ளார். #Congress #sanjayDutt
    கோபி:

    அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய்தத் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மாவட்டம் தோறும் தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு வருகிறோம்.

    இக்கட்சியைப் பொறுத்தவரை தொண்டர்கள் தான் மிக முக்கியமானவர்கள். விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறஉள்ளதால், பூத் கமிட்டி அமைத்து கட்சியை வலுப்படுத்த உள்ளோம்.


    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு, நான் பதில் சொல்ல தமிழகம் வரவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி தான் இதுகுறித்து முடிவு செய்வார்கள்.

    மத்திய அரசும், தமிழக அரசும் மக்களை ஏமாற்றி வருகிறது. இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #sanjayDutt
    பாகுபலி இரண்டு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையை இணைய தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் ராஜமவுலி இறங்கியுள்ளார். #Baahubali3 #Rajamouli
    பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் உலக அளவில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜுனியர் என்.டி.ஆரையும் ராம்சரணையும் இணைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

    அதற்கு முன்பு தற்போது அவர் பாகுபலி படத்தில் இடம்பெற்ற சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையை இணைய தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

    கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆனந்த் நீலகண்டன் எழுதிய ‘தி ரைஸ் ஆஃப் சிவகாமி’ புத்தகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் புத்தகத்தை தழுவி ராஜமவுலி மூன்று பாகங்களாக தொடரை இயக்க உள்ளார்.



    நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள இந்தத் தொடருக்கு, ஒரு எபிசோடு தயாரிக்க 20 மில்லியன் டாலர்கள் வரை செலவாகும். லக்னோவில் நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பில் சஞ்சய் தத், மனிஷா கொய்ராலா இணைந்து நடித்து வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி இணைந்து நடிக்கிறார்கள். #Baahubali3 #Rajamouli

    ராஜ்குமார் இரானி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் சஞ்சய் தத்தின் வாழ்க்கைப் படமாக உருவாகி இருக்கும் ‘சஞ்சு’ படம் ரிலீசான ஒரு வாரத்தில் ரூ.200 கோடியை வசூல் செய்து சாதனை படைக்க உள்ளது. #Sanju #RanbirKapoor
    பிரபல நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை கதை ‘சஞ்சு’ என்ற பெயரில் இந்தியில் படமாகி உள்ளது. ராஜ்குமார் இரானி இயக்கியிருக்கும் இந்த படத்தில் சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூரும், அவரது தாய் நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலாவும் நடித்துள்ளனர். 

    முக்கிய கதாபாத்திரங்களில் விக்கி கவுசால், சோனம் கபூர், பரேஷ் ரவால், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி ரிலீசாகியது. 6 நாட்களில் படம் ரூ.186.41 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 7-வது நாளான இன்று படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ரூ.200 கோடி வசூலின் மூலம் கான் நடிகர்களின் பட்டியலில் ரன்பீர் கபூரும் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சஞ்சு படம் சல்மானின் ரேஸ் 3 படத்தின் வசூலையும் நெருங்கி இருப்பதாக பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    சஞ்சய் தத்தின் சிறுவயது சம்பவங்கள், சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தது உள்ளிட்ட விஷயங்களை படத்தில் காட்சிப்படுத்தி உள்ளதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    இதற்கிடையே படம் இணையதளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. #Sanju #RanbirKapoor #SanjayDutt

    பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கைப் படமான ‘சஞ்சு’ படத்தில் பெண்களை தவறாக சித்தரித்திருப்பதாக, படத்தில் நடித்துள்ள ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Sanju #RanbirKapoor
    பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கை ‘சஞ்சு’ என்ற பெயரில் படமாகி இன்று திரைக்கு வருகிறது. இதில் சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ளார். சஞ்சய்தத் தாய் நர்கீஸ் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா வருகிறார். அனுஷ்கா சர்மாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் மும்பையில் நேற்று நடிகர்-நடிகைகளுக்கு சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டப்பட்டது.

    சஞ்சய் தத்துக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்புகள், போதை பழக்கத்துக்கு அவர் அடிமையானது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தது என்று அவரது வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியானபோது அதில் சிறைச்சாலையில் கழிவறை நிரம்பி வழிவதுபோன்ற காட்சி இடம்பெற்று இருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது.

    சிறைச்சாலையை தவறாக சித்தரித்து இருப்பதாக தணிக்கை குழுவில் மனு அளிக்கப்பட்டது. இப்போது படத்தில் இன்னொரு சர்ச்சை காட்சி இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சஞ்சய்தத் பல பெண்களுடன் தவறான தொடர்பு வைத்து இருந்ததாகவும் அவர்களை காதலிப்பதாக ஆசைக்கு பயன்படுத்தியதாகவும் காட்சி வைத்துள்ளனர்.



    மூத்த நடிகைகள், இளம் நடிகைகள் என்று 350-க்கும் மேற்பட்ட காதலிகள் அவருக்கு இருந்ததாக படத்தில் கூறப்பட்டு உள்ளது. இதற்கு சமூக ஆர்வலர் கவுரவ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். பெண்களுக்கு எதிரான வசனங்கள் படத்தில் உள்ளன. நடத்தைகளை தவறாக சித்தரித்து உள்ளனர்.

    எனவே படத்தில் நடித்துள்ள ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்து இருக்கிறார். #Sanju #RanbirKapoor #AnushkaSharma

    ராஜ்குமார் இரானி இயக்கத்தில் ரன்பீர் கபூல் நடிப்பில் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘சஞ்சு’ படத்திற்கு தணிக்கை குழு அனுமதி வழங்கியது. #Sanju #RanbirKapoor
    பிரபல நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை கதை இந்தியில் படமாகி உள்ளது. அவரது சிறுவயது சம்பவங்கள், சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தது உள்ளிட்ட விஷயங்களை இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். 

    ராஜ்குமார் இரானி ‘சஞ்சு’ என்று பெயரிட்டுள்ள இந்த படத்தில் சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூரும், அவரது தாய் நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலாவும் நடித்துள்ளனர். படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த படத்துக்கு எதிராக சமூக ஆர்வலர் பிரித்வி மஸ்கி என்பவர் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தில் புகார் அளித்தார்.

    அந்த மனுவில், “சஞ்சய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள சஞ்சு படத்தில் சிறையில் கழிவறை நிரம்பி வழிவது போன்ற காட்சி உள்ளது. இந்த காட்சி மூலம் சிறைச்சாலையை மோசமாக சித்தரித்து உள்ளனர். இதனால் மக்களுக்கு சிறைத்துறை மீதும் சிறை அதிகாரிகள் மீதும் தவறான எண்ணம் ஏற்படும். இந்த காட்சிகள் தொடர்பாக தணிக்கை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.



    இந்த நிலையில் சஞ்சு படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து படம் வெளியாக அனுமதி வழங்கி உள்ளனர். கழிப்பறை நிரம்பி வழியும் காட்சியை மட்டும் திருத்தம் செய்யும்படி படக்குழுவினரிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    மேலும் படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் வருகிற 29-ஆம் தேதி ரிலீசாகிறது. #Sanju #RanbirKapoor #SanjayDutt

    மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனையை விளக்கி, பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் உத்தரப்பிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று நடிகர் சஞ்சை தத்தை சந்தித்தார். #BJP #samparkforsamarthan
    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

    அவ்வகையில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி டெல்லி பிஷப் வாரிஸ் கே.மஸிஹ்-ஐ அவரது இல்லத்தில் சந்தித்தார். இதையடுத்து இன்று பிரபல இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான சஞ்சை தத்தை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்தார். அவரிடம் பா.ஜ.க அரசின் சாதனைகளை விளக்கி கூறி அவரின் ஆதரவை கோரியுள்ளார்.

    முதல்வரின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மோடியின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புத்தகத்தை சஞ்சய் தத்துக்கு வழங்கினார். #BJP #samparkforsamarthan
    ×