search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rishabh Pant"

    • இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் டி20 போட்டி பெங்களூருவின் நாளை நடக்கிறது.
    • பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பெங்களூரு:

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மோதுகிறது. இதில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (17-ந் தேதி) நடக்கிறது.

    இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ரிஷப் பண்ட் இந்திய வீரர்களுடன் பேசி மகிழ்ந்தார். அவர் விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் ஆகியோருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓராண்டுக்கும் மேலாக விலகி உள்ளார். ஆனாலும் அவர் அடிக்கடி இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் மைதானத்திற்கு வந்து சக வீரர்களுடன் பேசி மகிழ்வார். அந்த வகையில் இப்போது இந்திய வீரர்களுடன் பேசி மகிழ்ந்துள்ளார். 

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
    • இன்று நடைபெறும் ஏலத்தில் நேரடியாக கலந்து கொள்ள இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ரிஷப் பண்ட். இவர் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதனால் கடந்த ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெறாமல் இருக்கிறார். தற்போது காயத்தில் இருந்து ஏறக்குறைய குணம் அடைந்துவிட்டார். இதனால் வருகிற ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதற்கு ஏற்றபடி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இன்று மதியம் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் ரிஷப் பண்ட் கலந்து கொள்ள இருக்கிறார்.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாட இருக்கும் ரிஷப் பண்ட்-யிடம் உடல் தகுதி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் "ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பது புதிய அனுபவம். மேலும் உற்சாகமாக உள்ளது. இதற்கு முன்னதாக ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை. அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    சில மாதங்களுக்கு முன்னதாக நான் செய்து கொண்டிருந்ததை விட (கிரிக்கெட் பயிற்சி) தற்போது சிறந்த வகையில் செய்து கொண்டிருக்கிறேன். 100 சதவீதத்திற்கு இன்னும் உடற்தகுதி பெற வேண்டியுள்ளது. ஆனால் இன்றும் சில மாதங்கள் உள்ளது. அதற்குள் நான் முழு உடற்தகுதியை எட்டி விடுவேன்" என்றார்.

    • 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.
    • தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து, கிரிக்கெட்டிற்கு திரும்ப முழு தகுதி பெற்றுள்ளார்

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப் பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கினார். இதன் காரணமாக அவர் கடந்த ஆண்டு ஐ.பி.எல். மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை.

    விபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் அவர் முழு உடல் தகுதி பெற்றார். ஆனாலும் அவர் உடனடியாக கிரிக்கெட்டுக்கு திரும்பவில்லை.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கேப்டனாக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணி கேப்டன் பதவி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

    ஆனால் விக்கெட் கீப்பராக செயல்படுவாரா? என்று உறுதியாக தெரியவில்லை. ரிஷப் பண்ட் விளையாடும் பட்சத்தில் டெல்லி அணி பேட்டிங்கில் பலம்பெறும். அவர் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். அடுத்த ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 19-ந்தேதி துபாயில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

    ஏலப் பட்டியலில் 333 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 119 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். இங்கிலாந்தில் இருந்து அதிகபட்சமாக 25 வீரர்கள் ஏலத்தில் உள்ளனர். அசோசியேட் நாடுகளான நமீபியாவில் இருந்து டேவிட் வைஸ், நெதர்லாந்தில் இருந்து மீக்கெரன் ஆகியோரும் ஏலப்பட்டியலில் உள்ளனர்.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த டிரெவிஸ் ஹெட், ஸ்டார்க் மற்றும் ரவீந்திரா ஆகியோர் மீது ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

    • தீபாவளி பண்டிகையை ரிஷப் பண்ட், மகேந்திர சிங் டோனி குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்.
    • ரிஷப் பண்ட், டோனி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை பொதுமக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

    இந்நிலையில் இந்த தீபாவளி பண்டிகையை இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் டோனி குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்.

    டோனி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றை வென்று கொடுத்துள்ளார். ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த கார் விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரிஷப் பண்ட், டோனி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • தீவிர சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார். ஆனால் தீவிர பயிற்சி மேற்கொள்ளவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனால் அவர் முக்கிய போட்டி தொடர்களில் விளையாடவில்லை. இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் உள்ளார். இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி முகாமுக்கு ரிஷப் பண்ட் சென்றார். அவர் மற்ற வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடவில்லை.

    இந்த நிலையில் டெல்லி அணியின் ஆலோசகரான சவுரவ் கங்குலி கூறும்போது, "ரிஷப் பண்ட் நல்ல நிலையில் இருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் விளையாடுவார். தற்போது அவர் பயிற்சி செய்யமாட்டார். வீரர்கள் ஏலம் நடைபெறுவதை முன்னிட்டு டெல்லி அணியில் கேப்டனாக ரிஷப் பண்ட் இருப்பதால் அவருடன் அணியை பற்றி விவாதித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
    • உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் அக்ஷர் படேல் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்த நிலையில் வெளியே வந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களிடம் செல்பி எடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ஐபிஎல், ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டார்.

    • பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடைபெற்று வருகிறது.
    • பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென ரிஷப் பண்ட் சந்தித்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா ஷர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்காக இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடைபெற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென ரிஷப் பண்ட் சந்தித்தார். பந்த் அணி வீரர்களுடன் மீண்டும் இணைவதையும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் தொடர்புகொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



    • ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
    • ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. மேலும் வருகிற ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார்.

    ரிஷப் பண்ட் அவரது உடல் நலம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவார்.

    இந்நிலையில் தற்போது அவர் எக்சர் சைக்கிளில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இனி நல்லதே நடக்கும் என தலைப்பிட்டிருந்தார். மிஸ் யூ ரிஷப் என பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • அழுத்தமான பெரிய போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ், பேட் கமின்ஸ் தங்களது திறமையால் முடிவை தலைகீழாக மாற்ற கூடியவர்கள் ஆவர்.
    • இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்படும் விராட் கோலியை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

    டி20 போட்டிகள் ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்படும் கிரிக்கெட்டாக உருவெடுத்துள்ளது. அதன் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு குறைந்து வருவதாக நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் அழிவின் விளிம்பில் சென்ற அதற்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் பிரத்தியேக உலகக்கோப்பை ஐசிசி அறிமுகப்படுத்தியதால் தற்போது டெஸ்ட் போட்டிகள் டி20 கிரிக்கெட் போல த்ரில்லாக நடைபெறுகிறது.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய கேம் சேஞ்சர்ஸ் பென் ஸ்டோக்ஸ், ஜடாஜா, ரிஷப் பண்ட், ஸ்மித், நாதன் லயன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். 

    மேலும் கூறியதாவது:- அழுத்தமான பெரிய போட்டிகளில் தங்களது திறமையால் முடிவை தலைகீழாக மாற்ற கூடியவர்கள் பென் ஸ்டோக்ஸ், பேட் கமின்ஸ் ஆகியோர் ஆவர். மேலும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெளிநாட்டு மண்ணின் சதங்களை அடித்து காபா போன்ற வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிசப் பண்ட் ஆகிய இந்திய வீரர்களை பெயரிட்டுள்ளார்.

    அதே போல சுழலுக்கு சாதகமற்ற ஆஸ்திரேலிய மைதானங்களில் அசத்தலாக செயல்பட்டு சுமார் 500 விக்கெட்களை எடுத்து 100 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய வீரராக சமீபத்தில் சாதனை படைத்த நேதன் லையனையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 9000-க்கு மேற்பட்ட ரன்களை அடித்து ஜாம்பவானாக அசத்தி வரும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை மேட்ச் வின்னர்களாக தேர்வு செய்துள்ளார்.

    இருப்பினும் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து மேட்ச் வின்னராக போற்றப்படும் விராட் கோலியை தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சில நேரங்களில் சின்ன விஷயங்கள் கூட கஷ்டமாக இருக்கும் என இந்த வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார்.
    • இந்த வீடியோவுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தொடருங்கள் ரிஷப் என கமெண்ட் செய்திருந்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ரிஷப் பண்ட் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.


    ரிஷப் பண்ட் அவரது உடல் நலம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு குணமடைந்து வருவதாக தெரிவித்து வந்தார்.


    இந்நிலையில் அவர் படியில் நடந்து வருவது போல உள்ள வீடியோ பதிவிட்டுள்ளார். சில நேரங்களில் சின்ன விஷயங்கள் கூட கஷ்டமாக இருக்கும் என அதற்கு தலைப்பிட்டுள்ளார்.

    இந்த வீடியோவுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தொடருங்கள் ரிஷப் என கமெண்ட் செய்திருந்தது.

    • பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை.
    • இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் சாகல் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது:-

    திட்டங்களை செயல்படுத்துவதை பற்றி பேசி இருந்தேன். அதை பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களிடம் இருந்து நாம் பார்த்தோம்.

    நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைத்தோம். ஆனால் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

    இதனால் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம் உள்ளது. இதுபோன்ற போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும்போது வெற்றி கிடைக்கும்.

    பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை. ஆனால் ஒரு நல்ல தொடக்கத்துக்கு பிறகு புதிய பேட்ஸ்மேன்கள் உடனே அதிரடியாக விளை யாடுவது கடினம். இதில் அடுத்த போட்டியில் முன்னேற முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா கூறும் போது, "நாங்கள் எங்களது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்திய பந்து வீச்சாளர்கள் எங்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கினர். பார்ட்னர் ஷிப் அல்லது உத்வேகத்தை பெற முடியவில்லை.

    நாங்கள் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால் இந்தபோட்டியை மட்டும் வைத்து கொண்டு எங்களை நான் மதிப்பிட மாட்டேன். தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது என்றார்.

    5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் மற்றும் 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் 2-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. 4-வது 20 ஓவர் போட்டி வருகிற 17-ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,920 ரன்கள் எடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். தனது அதிரடி ஆட்டத்தால் ரன்கள் குவிக்கும் பண்ட் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட் 1,920 ரன்கள் எடுத்துள்ளார். 

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் டெஸ்ட் சதங்கள் அடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்த்துள்ளார்.

    இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்துப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது:

    ரிஷப் பண்ட் 100-க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆடினார் என்றால் சாதனை புத்தகங்களில் அவரது பெயர் பொறிக்கப்படும். 11 வீரர்கள்தான் இந்தியாவில் இதை சாதித்துள்ளனர். அவர்களின் பெயர்களை நாம் நினைவுகூர முடியும்.

    விராட் கோலி ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் தெரியுமா? ஏனெனில் 100-150 டெஸ்ட்கள், ஏன் 200 டெஸ்ட்களை ஆடினார் என்றால் சாதனை புத்தகத்தில் இருந்து அவர் பெயரை யாரும் அழிக்க முடியாது என தெரிவித்துள்ளார் .
    ×