search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்- வீடியோ மூலம் வெறி ஏற்றும் ரிஷப் பந்த்
    X

    எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்- வீடியோ மூலம் வெறி ஏற்றும் ரிஷப் பந்த்

    • ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
    • ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. மேலும் வருகிற ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார்.

    ரிஷப் பண்ட் அவரது உடல் நலம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவார்.

    இந்நிலையில் தற்போது அவர் எக்சர் சைக்கிளில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இனி நல்லதே நடக்கும் என தலைப்பிட்டிருந்தார். மிஸ் யூ ரிஷப் என பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    Next Story
    ×