search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "retirement"

    பணி ஓய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். பணி ஓய்வுக்குப் பின்னர் பலர் ஓய்வே வாழ்க்கை என்று ஒரு இடத்தில் முடங்கி விடுகிறார்கள். இதனால் உடல் நலக்கேடு வரும்போது மிகவும் துவண்டு விடுகிறார்கள்.
    பலரும் பணி ஓய்வு என்பதை நிரந்தர ஓய்வு என்றே எண்ணுகிறார்கள். அரசுப்பணி, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வயதில் பணியாளர்களை பணி ஓய்வு செய்கிறார்கள். இந்தியாவும், சீனாவும் அதிவேக வளர்ச்சி பெறுவதைப்பார்த்து மேலை நாடுகள் வியப்பு அடைகின்றன. இதற்கு காரணம் மக்கள் தொகையில் இளைஞர்கள் அதிக அளவில் இருப்பதே ஆகும். எனவே பணி ஓய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். பணி ஓய்வு என்பது விவசாயிகளுக்கோ, வக்கீல் தொழில் செய்பவர்களுக்கோ, மருத்துவர்களுக்கோ, வியாபாரம் செய்பவர்களுக்கோ கிடையாது.

    ஏனென்றால் அவர்கள் ஒரு நிறுவனத்தை சார்ந்து இல்லை. இவர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது. உடலும், உள்ளமும் நன்றாக இருக்கும் வரை உழைத்துக்கொண்ட இருப்பார்கள். ஒரு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுகிறவர் கூட தன் உடம்பில் வலு இருக்கும் வரை தன் தொழிலை செய்கிறார். பணி ஓய்வுக்குப் பின்னர் பலர் ஓய்வே வாழ்க்கை என்று ஒரு இடத்தில் முடங்கி விடுகிறார்கள். தங்களையும் தங்கள் உடல் நலத்தையும் பற்றி நினைத்தே வாழ்க்கையை கழிக்கிறார்கள். இதனால் உடல் நலக்கேடு வரும்போது மிகவும் துவண்டு விடுகிறார்கள்.

    அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்கிறார்கள். தங்கள் மகனோ, மகளோ தங்களை கவனிக்கவில்லை என்ற வருத்தம் சிலரிடம் மேலோங்கி இருக்கிறது. ஓய்வு சிலருடைய மன நிலையையும் பாதிக்கிறது. கணவன், மனைவிக்குள் தேவையற்ற வாதங்கள் தோன்றி வருத்தங்களாக முடிகிறது. இதற்கெல்லாம் காரணம் இவர்களிடம் இருக்கும் அதீத நேரம்தான்.

    காலையில் நடைபயிற்சி மற்றும் நண்பர்களை சந்திப்பது, பத்திரிகைகள் படிப்பது, காலை உணவுக்குப்பின் சிறு உறக்கம், மதிய உணவு, அதன்பின் சிறு உறக்கம், மாலை மற்றும் இரவில் தொலைக்காட்சியில் முழு கவனம் என்று பலர் பட்டியலிட்டபடி வாழ்கின்றனர். சிலர் நடைபயிற்சியையோ அல்லது உடற்பயிற்சியையோ கூட மேற்கொள்வதில்லை. தற்போதைய எந்திர யுகத்தில் பெரும்பாலானோர் வாட்ஸ்-அப், முகநூல் போன்றவற்றில் மணிக்கணக்கில் பொழுதை செலவழிக்கிறார்கள். இந்த வாழ்க்கை இவர்களுக்கு சில வருடங்களில் ஒரு சலிப்பை உண்டாக்குகிறது. மேலை நாடுகளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முன் அனுமதி இல்லாமல் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாது. ஆனால் இவர்களோ திடீரென்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு செல்வார்கள். நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இது மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

    அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அந்த சொற்ப ஓய்வூதியத்திலேயே தங்கள் வாழ்க்கையை அடக்கிக்கொண்டு தங்களுக்கும் தங்கள் மனைவிக்குமான தேவைகளை குறைத்துக்கொள்வார்கள். ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து ஓய்வுபெற்ற பலருக்கு ஓய்வூதியம் என்பது கிடையாது. பணி ஓய்வுபெறும்போது தங்கள் மாத வருமானம் தடைபடுவது அவர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது எதிர்பார்த்த ஒன்றுதான். அதற்கான திட்டமிடலை பல வருடங்களுக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும்.

    இந்த நிலைமைக்கு காரணம் நாம் நமக்கு என்று ஒரு பணியை தேர்ந்தெடுக்காமல் ஓய்வை தேர்ந்தெடுப்பதுதான். செயலற்ற மனது பிசாசுகளின் பட்டறை என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இன்றைய முன்னேறிய மருத்துவ உலகில் ஆரோக்கியம் வெகு விரைவில் கெட்டுப்போவதில்லை. முன்பை விட நாம் நீண்ட நாட்கள் வாழ்கிறோம் என்பதே உண்மை. எனவே பணி ஓய்வு என்பது நிறுவனத்தின் பார்வையில் நமக்கு அவர்கள் கொடுத்திருந்த பணியில் இருந்து மட்டும்தான் விடுதலை. ஆனால் உடலும் உள்ளமும் நமக்கு நன்றாகவே உள்ளது. எனவே நாம் நமக்கு பிடித்த ஒரு பணியை செய்ய வேண்டும். அந்த பணி நாம் பல நாட்கள் செய்ய நினைத்து அலுவலக அவசரங்களினால் செய்ய முடியாமல் போயிருக்கலாம்.



    சிலர் புகைப்படம் எடுப்பதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். இப்போது அதை ஒரு தொழிலாக செய்யலாம். ஒரு தொழில் முனைவோராக மாறலாம். இதற்காக பல பயிற்சிகளும் வங்கிகள் வாயிலாக கடன் உதவிகளும் அரசின் மானியமும் கிடைக்கின்றன. தங்கள் அனுபவத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். ஒரு சமுதாய முன்னேற்றமாக கிராமங்களில் ஏழைகளுக்கு எழுத படிக்க கற்றுத்தரலாம். இப்படி ஏதாவது ஒரு தொழில் செய்யும் போது அதில் ஒரு வருவாயும் ஏற்படும் மற்றும் சேவையில் தங்களை ஈடுபத்திக்கொள்ளும்போது மனதிருப்தியும் உடல் ஆரோக்கியமும் பெறுவார்கள். அப்போது குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சி திரும்புவதை உணர்வார்கள்.

    நீங்கள் உங்கள் மன நிலையை ஓய்வுக்கு தள்ளிவிடாதீர்கள். மனதுக்கு உற்சாகம் அளியுங்கள். முன்னைப்போலவே நல்ல ஆடைகளை அணியுங்கள். ஆண்கள் தினமும் முகச்சவரம் செய்ய மறக்காதீர்கள். கோவில்களுக்கு சென்று வாருங்கள். நண்பர்களிடம் மற்றும், உறவினர்களிடம் உற்சாகமாக பேசுங்கள். மேலும் மற்றவர்களைப்பற்றி பொழுதுபோக்குக்காகக்கூட தவறாகப்பேச பேச வேண்டாம்.

    இது எதிர்மறையான மனநிலையை உங்களுக்குள் வளர்க்கும். மேலும் ஒரு எதிர்மறை சக்தி உங்களை சுற்றி உருவாகும். இந்த எதிர்மறை சக்தி எதிர்மறை விளைவுகளையே உங்களுக்கு உருவாக்கும். ஆரோக்கியமாக பேசுங்கள். நல்ல விஷயங்களை பேசுங்கள். உங்கள் மனது இலகுவாகும். இது உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். உங்களுக்கு பிடித்த ஒரு தொழிலை செய்யுங்கள். அலுவலகத்தில் கைகட்டி மேலதிகாரிகளின் கீழ் வேலை பார்த்த உங்களுக்கு தொழிலில் நீங்கள்தான் முதலாளி என்று எண்ணும்போது உங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி உண்டாகும். கிடைத்துள்ள நேரத்தை பயனுள்ளதாக்குவோம். நாம் ஓய்வுக்கு ஒரு ஓய்வு கொடுப்போம்.

    எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி
    ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான ஜான் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார். #JohnHastings
    ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான ஜான் ஹேஸ்டிங்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். 29 ஒருநாள் போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரே போட்டியில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 9 முறை டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி 7 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இதுபற்றி  ஜான் ஹேஸ்டிங்ஸ் கூறுகையில், ‘கடந்த 3 அல்லது 4 மாதங்களாகவே என் உடல் நிலையில் மாற்றம் தெரியத் தொடங்கியது. மிகவும் கடினமான காலக்கட்டமாக இருந்தது. ஒவ்வொரு முறை பந்து வீசத் தயாராகும் போதும் இருமல் வந்து ரத்த வாந்தி எடுத்தேன்.

    இதனால் பவுலிங் செய்ய முடியவில்லை. எனவே இது என்ன என்று கண்டுபிடித்து தீர்வு காணாதவரை எனக்கு நிம்மதியில்லை. இது எனக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் இப்போது இதனை நான் கவலையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கடந்த 4 அல்லது 5 மாதங்களாக மிகவும் கடினமாக உள்ளது.



    பவுலிங் செய்யும் போது நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்படாது என்று மருத்துவர்கள் உத்தரவாதம் அளிக்காததால் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்’ என மன வேதனையுடன் அறிவித்தார். #JohnHastings
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வெய்ன் பிராவோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.#Bravo #WestIndies
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வெய்ன் பிராவோ. 35 வயதான இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். அவர் கடைசியாக 2014-ம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.

    பிராவோ டெஸ்டில் 2,200 ரன்னும், 86 விக்கெட்டும் எடுத்தார். ஒரு நாள் போட்டியில் 2968 ரன்னும், 199 விக்கெட்டும், 20 ஓவரில் 1142 ரன்னும், 52 விக்கெட்டும் எடுத்தார்.



    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவார். #Bravo #WestIndies
    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு இந்திய மூத்த வீரர் கம்பீர் பதில் அளித்தார். #GautamGambhir #IndianTeam #Retirement
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த கவுதம் கம்பீர் 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். டெல்லியை சேர்ந்த கம்பீர், விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் சில தினங்களுக்கு முன்பு அரியானாவுக்கு எதிரான கால்இறுதியில் 72 பந்தில் 104 ரன்கள் விளாசி அசத்தினார்.

    2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (75 ரன்), 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (97 ரன்) கம்பீரின் பங்களிப்பை யாரும் மறந்து விட முடியாது.

    இந்த நிலையில் 37 வயதான கம்பீர் அளித்த ஒரு பேட்டியில், ஓய்வு பெறுவது எப்போது, அதற்கு முன்பாக கிரிக்கெட்டில் ஏதேனும் இலக்கு வைத்து இருக்கிறீர்களா? போன்ற கேள்விகள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து கம்பீர் கூறியதாவது:-

    குறிப்பிட்ட இலக்கு என்பது எல்லாம் இல்லை. இப்போது வரைக்கும் தொடர்ந்து ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே விளையாடுகிறேன். அது தான் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. ரன்கள் குவிப்பது, வெற்றி பெற வைப்பது, வீரர்கள் ஓய்வறையில் மகிழ்ச்சியாக இருப்பது இவை தான் என்னை உற்சாகப்படுத்தும்.

    இந்த நாள் வரைக்கும் எனக்குள் கிரிக்கெட் உணர்வு முழுமையாக பரவி இருக்கிறது. எப்போதும் ஓய்வறையில் சந்தோஷமான சூழலில் இருக்க விரும்புகிறேன். அதைத் தொடர்ந்து செய்கிறேன். தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. கிரிக்கெட் விளையாட்டு மீதான ஆர்வமும், ஆக்ரோஷமும் எப்போது குறைகிறதோ? அப்போது விடைபெறுவேன்.

    உங்களது பயணத்தில் ஏதேனும் வெற்றிடம் இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். கிரிக்கெட்டை பொறுத்தவரை எப்போதும் நீங்கள் ஏதாவது ஒரு வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டு இருக்கலாம். அதற்கு முடிவே கிடையாது. விரும்பிய இலக்கை அடைந்து விட்டேன் என்று உணரும் போது கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திக் கொள்வேன்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முன்பை விட இப்போது மிக கடினமாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கின்றன. நிறைய புதிய வீரர்கள் வருகிறார்கள். அதனால் சவால்களும் வித்தியாசப்படுகின்றன. அணிகளின் உரிமையாளர்களும் வீரர் களை தேர்வு செய்வது உள்ளிட்ட விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள். எந்த ஒரு விளையாட்டு வீரர்களுக்கும் இதுபோன்ற சவால்கள் தான் தேவையாகும். அந்த சவால்களோடு பயணிக்கும் போது நமது ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.   #GautamGambhir #IndianTeam #Retirement
    ‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை’ என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார். #JamesAnderson #Retirement #England
    லண்டன்:

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி கலக்கினார். கடந்த செவ்வாய்க்கிழமை லண்டன் ஓவல் மைதானத்தில் முடிந்த இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடைசி விக்கெட்டாக முகமது ஷமியை போல்டு செய்தார்.



    இதன் மூலம் ஆண்டர்சன் 143 டெஸ்டில் விளையாடி மொத்தம் 564 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 4-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை ஆண்டர்சன் தன்வசப்படுத்தினார். அத்துடன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை மெக்ராத்திடம் (563 விக்கெட்டுகள், 124 டெஸ்டில்) இருந்து தட்டிப் பறித்து தனக்கு சொந்தமாக்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முரளிதரன் (இலங்கை), வார்னே (ஆஸ்திரேலியா), கும்பிளே (இந்தியா) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

    சாதனை படைத்த 36 வயதான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதில் மெக்ராத்தின் சாதனையை நான் முறியடித்து இருந்தாலும், என்னை விட சிறந்த பவுலர் மெக்ராத் தான். பவுன்ஸ், ஸ்விங் செய்வது, தளர்வின்றி கடுமையாக பந்து வீசுவது, துல்லியமாக, ஆக்ரோஷமாக செயல்படுவது உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் மெக்ராத் என்னை விட உயர்வானவர். அவரது பந்து வீச்சின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தான் எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

    போட்டிக்கு மெக்ராத் தயார் ஆகும் விதத்தை நான் கவனித்து இருக்கிறேன். அது எனக்கு உதவிகரமாக இருந்து இருக்கிறது. தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் எதுவும் எனக்கு இல்லை. 2006-ம் ஆண்டு ஆஷஸ் போட்டி தொடரில் மெக்ராத் கலந்து கொள்ளும் போது ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லையாம். ஆனால் அந்த போட்டி தொடர் முடிவில் அவருக்கு ஓய்வு எண்ணம் உதித்து விடைபெற்றதாக கருத்து தெரிவித்ததை நான் படித்து இருக்கிறேன். அதுபோல் எனக்கும் நடக்கலாமே? அது யாருக்கு தெரியும்.

    ஓய்வு எண்ணம் இதுவரை எனது மனதில் உதிக்கவில்லை. அது குறித்து நான் சிந்திப்பதும் கிடையாது. சிறந்த திறனை வெளிப்படுத்துவதிலும், அடுத்த போட்டி மற்றும் அடுத்த தொடர் குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இலங்கை போட்டி தொடருக்கு முன்பு எங்களுக்கு போதிய இடைவெளி இருக்கிறது. இலங்கை தொடரில் சிறப்பாக பந்து வீச முயற்சிப்பேன்.

    இவ்வாறு ஆண்டர்சன் கூறினார்.  #JamesAnderson #Retirement #England
    சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக இந்திய ஆக்கி அணி வீரர் சர்தார் சிங் தெரிவித்தார். #SardarSingh #Retirement #InternationalHockey
    புதுடெல்லி:

    இந்திய ஆக்கி அணியின் முன்னணி நடுகள வீரரும், முன்னாள் கேப்டனுமான சர்தார் சிங் 2006-ம் ஆண்டில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்தார்.

    அரியானாவை சேர்ந்த 32 வயதான சர்தார் சிங் இதுவரை 350 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். 2008-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தார். சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார். கடந்த முறை தங்கப்பதக்கம் வென்று இருந்த இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டியில் இந்த முறை வெண்கலப்பதக்கம் தான் பெற்றது. சர்தார் சிங் ஆட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை.



    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமனில் அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கான பயிற்சி முகாம் புவனேஸ்வரத்தில் வருகிற 16-ந் தேதி முதல் அக்டோபர் 14-ந் தேதி வரை நடக்கிறது. தேசிய பயிற்சி முகாமுக்கான 25 வீரர்கள் பட்டியலை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. இதில் சர்தார் சிங் பெயர் இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் சர்தார் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது வாழ்க்கையில் போதுமான அளவுக்கு ஆக்கி விளையாடி விட்டேன். 12 ஆண்டுகள் என்பது நீண்ட காலமாகும். வரும் தலைமுறையினருக்கு வழி விடுவதற்கு இதுவே சரியான தருணமாகும். எனது குடும்பத்தினர் மற்றும் ஆக்கி இந்தியா நிர்வாகிகள், நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த ஓய்வு முடிவை எடுத்தேன். ஆக்கியை தவிர்த்து எனது வாழ்க்கையை சிந்திக்க இது சரியான நேரமாக கருதுகிறேன்.

    ஓய்வு முடிவு எடுக்க எனது உடல் தகுதி காரணம் இல்லை. இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாடக்கூடிய உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு காலகட்டம் உண்டு. வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர இது தான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். எனது ஓய்வு முடிவை தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங்குக்கு தெரிவித்து விட்டேன். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சர்தார் சிங் டெல்லியில் நாளை ஓய்வு முடிவை முறைப்படி அறிவிப்பார் என்று தெரிகிறது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை விளையாட ஆர்வமாக இருப்பதாக சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்த சர்தார்சிங் கட்டாயத்தின் பேரில் ஓய்வு முடிவுக்கு வந்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேசிய பயிற்சி முகாமுக்கான வீரர்கள் பட்டியலில் உங்களுக்கு இடம் கிடைக்காததால் ஓய்வு முடிவுக்கு வந்தீர்களா? என்ற கேள்விக்கு சர்தார் சிங் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    அரியானா போலீஸ் துறையில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சர்தார் சிங் 2 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். 2012-ம் ஆண்டில் அர்ஜூனா விருதையும், 2015-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.  #SardarSingh #Retirement #InternationalHockey 
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #RPSingh
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங். 2005ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பின்னர் அனைத்து வகை போட்டிகளிலும் விளையாடினார். 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

    அவர் மொத்தம் 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளும், 14 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளார்.



    இந்நிலையில், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆர்.பி.சிங் அறிவித்துள்ளார். தன்னுடைய கிரிக்கெட் பயணம் இனிமையானதாகவும் மறக்க முடியாத நினைவுகள் கொண்டதாகவும் இருக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். #RPSingh
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. #MSDhoni #Retirement
    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி 2-வது ஆட்டத்தில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். டோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது.



    லீட்சில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. தோல்வி கண்டு வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பிய போது டோனி, நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக போட்டி தொடரை வென்றாலோ? அல்லது சிறப்பாக பந்து வீசினாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்லுவார்கள்.

    தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. 37 வயதான டோனி 2014-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். 
    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆறாவது முறையாக அறிவித்துள்ளார். #ShahidAfridi #ShahidAfridiretirement

    லண்டன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஷாகித் அப்ரிடி. சிக்ஸர் அடிப்பதில் வல்லவரான இவர் பலமுறை பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்பியுள்ளார். அவர் இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,716 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 5 சதங்கள், 8 அரைசதங்கள் அடங்கும். 398 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அப்ரிடி 6 சதம், 39 அரைசதம் உட்பட 8064 ரன்கள் குவித்துள்ளார். 99 டி20 போட்டிகளில் விளையாடி 4 அரைசதம் உட்பட 1916 ரன்கள் சேர்த்துள்ளார். 

    தற்போது 38 வயதாகும் அப்ரிடி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2006-ம் ஆண்டு அறிவித்தார். ஆனால், அறிவித்த 2 வாரங்களில் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். 2010-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அப்ரிடி அறிவித்தார்.

    அதன்பின், கடந்த 2011-ம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அப்ரிடி அறிவித்தார். ஆனால், அறிவித்து 5 மாதங்களில் மீண்டும் சர்வதேச போட்டிகளிலும், உள்நாட்டுப் போட்டிகளிலும் விளையாடத் திரும்பி வந்தார்.



    அதன்பின் 2015-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அப்ரிடி அறிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், 15 மாதங்களுக்குப் பின் மீண்டும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடினார். 

    இந்நிலையில், கடந்த 31-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக லெவன் - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக இறுதியாக அப்ரிடி அறிவித்துள்ளார். இந்த முறை கண்டிப்பாக மீண்டும் கிரிக்கெட் விளையாட திரும்பவர மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். #ShahidAfridi #ShahidAfridiretirement
    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி, இனி திரும்ப வரமாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். #ShahidAfridi #ShahidAfridiretirement

    லண்டன்:

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீஸ் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடினார். இந்த போட்டியில் அப்ரிடி உலக லெவன் அணியின் கேப்டனாக விளையாடினார். இதில் வெஸ்ட்இண்டீஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டி ஷாகித் அப்ரிடியின் கடைசி சர்வதேச போட்டியாகும். இந்த போட்டிக்கு பின் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக அவர் அறிவித்தார். இந்த போட்டியின் போது, அப்ரிடிக்கு அனைத்து வீரர்களும் பிரியாவிடைகொடுத்து, மரியாதை செய்தனர். 



    இதற்கு முன் பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஐந்து முறை அப்ரிடி அறிவித்துள்ளார். இவ்வாறு அப்ரிடி அறிவிப்பது 6-வது முறையாகும். இருப்பினும் மீண்டும், மீண்டும் தனது முடிவை மாற்றி அப்ரிடி விளையாடி வந்தார். ஆனால், இந்த முறை, சர்வதேச போட்டிகளில் இதுவே எனது கடைசி போட்டியாகும் என அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

    வெஸ்ட்இண்டீஸ் அணியுடனான போட்டியின் நடுவே களத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த அப்ரிடியிடம் சர்வதேச போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவீர்களா? என வர்ணனையாளர் நாசர் ஹூசைன் கேட்டார்.

    அதற்கு பதிலளித்த அப்ரிடி, சர்வதேச போட்டிகளில் நான் பங்கேற்கும் கடைசி போட்டி இதுவாகத்தான் இருக்கும். அதிகமான வயது, காயத்தால் இனி என்னால் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த இயலாது. அதனால், இதுதான் நான் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும். கிரிக்கெட்டின் தாயகம் என அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடைசிப் போட்டியை விளையாடுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது எனத் தெரிவித்தார். #ShahidAfridi #ShahidAfridiretirement
    தென்ஆப்ரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360

    ஏபி டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி விரைவாக 50, 100, 150 ரன்கள் அடித்த தென்ஆப்ரிக்கா வீரர் எனும் சாதனையையும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவிரைவாக 50 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவர் மட்டையாளராகவும் , விக்கெட் கீப்பராகவும் துவக்கத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினார். மத்திய வரிசையில் இறங்கும் இவர் பல திசைகளிலும் அடித்து விளையாடும் வல்லமை படைத்தவர். நவீன காலத் துடுப்பாட்டப் போட்டிகளில் புதுமையான பேட்ஸ்மேன் என அறியப்படுகிறார். மேலும் விக்கெட் கீப்பர் மற்றும் பல திசைகளிலும் அடித்து விளையாடும் சில வித்தியாசமான முறைகளால் இவர் மிஸ்டர் 360 எனும் புனைபெயரால் அழைக்கப்படுகிறார். 

    2004-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். 2005-ம் ஆண்டின் துவக்கத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். 2006-ம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் இவர் அறிமுகமானார். அவரின் பேட்டிங் சராசரி இரு வடிவங்களிலும் 50-ற்கும் அதிகமாக உள்ளது.

    தென்ஆப்ரிக்கா டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயத்தினால் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக நீடித்து வருகிறார். பின் 2017 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஆகியவற்றின் தோல்விகளால் ஒருநாள் போட்டி கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார்.



    டிவில்லியர்ஸ் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். ஆனால் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. 

    இந்நிலையில், 123 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ், அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360
    ×