search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rest"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களிடம் நற்பெயர் பெற்றால் போதும், அவருக்கு சொர்க்கம் உறுதி.
    • நல்லவர்களுக்கு நீ கெடுதல் செய்யாதே

    ஓய்வு என்பது, தற்காலிக ஓய்வு, நிரந்தரமான ஓய்வு என இரு வகைப்படும். ஓய்வு என்பதன் பொருள்: 'தொடர்ச்சியான, ஒரு செயலில் இருந்து விடுபடுவது' என்பதாகும். இந்த விடுபடுதல் என்பது தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இருக்கலாம்.

    நாம் ஈடுபடும் செயலில் இருந்து சிறிது நேரம் நம்மை விடுவித்து களைப்பாறுதல். நமது அன்றாட பணியின் வேலைப்பளு தாக்கத்தில் இருந்து தம்மைத் தாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள இளைப்பாறுதல். ஒருநாள் தொடர் வேலையில் மத்தியப்பகுதியில் சற்றுநேரம் அவகாசம் எடுத்துக் கொண்டு தளர்வை போக்க ஓய்வு பெறுதல். நோயில் இருந்து உடல் விடுபட மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமுறை ஓய்வு, இவையாவும் தற்காலிக ஓய்வுகளாகும்.

    இன்னும், சில ஓய்வுகள் நிரந்தரமானதாக அமைந்துவிடுகிறது. அது, பணிநிறைவு எனும் ஓய்வு. அடுத்தது, வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விடுபட்டு, இயற்கை எய்தி இறைவனடி நிழலில் இளைப்பாறுதலாகும்.

    'நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் 'இவர் ஓய்வு பெற்றவராவார்; அல்லது இவர் பிறருக்கு ஓய்வு அளித்தவராவார்' என்றார்கள்.

    மக்கள் 'இறைத்தூர் அவர்களே, ஓய்வு பெற்றவர், அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இறைநம்பிக்கை கொண்ட அடியார் இறக்கும்போது இவ்வுலகத்தின் துன்பத்தில் இருந்தும், தொல்லையில் இருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார்.

    பாவியான அடியான் இறக்கும்போது அவனின் தொல்லைகளிடம் இருந்து மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), நூல்: புகாரி)

    'ஒருமுறை, ஒரு பிரேதத்தை கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றி மக்கள் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உறுதியாகி விட்டது' என்றார்கள். மற்றொருமுறை வேறொரு பிரேதத்தை கடந்து சென்றபோது, மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசினார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், 'உறுதியாகி விட்டது' என்றார்கள்.

    உடனே உமர் (ரலி), 'எது உறுதியாகி விட்டது?' என்று கேட்டதும், நபி (ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறி புகழ்ந்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. மற்றவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள், எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் இறைவனின் சாட்சிகளாவீர்கள்' என்று கூறினார்கள்.

    (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி) மக்களிடம் நல்லவிதமாக நடந்து, நல்லதை செய்து, இவர் நல்லவர் என்று மக்களிடம் நற்பெயர் பெற்றால் போதும், அவருக்கு சொர்க்கம் உறுதி. மக்களிடம் மோசமாக நடந்து, மோசடி செய்து, கெட்டபெயர் பெற்று, கெட்டவன் என்று மக்கள் இகழ்ந்தாலே போதும், அவருக்கு நரகம் உறுதி.

    ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அநியாயத்திலும், அட்டூழியத்திலும், கொடுமைப்படுத்துவதிலும் பிரபலமாகத் திகழ்ந்தான். அப்துல்லாஹ் பின் சுபைர், ஸயீத் பின் சுபைர் போன்றோரை ஈவு இரக்கமின்றி கொன்றான். இறுதியில் அவன் நோய்வாய்ப்பட்டான். நோயின் வேதனை தாங்கமுடியாமல் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் உதவியும், நிவாரணமும் வேண்டினான். அதற்கு ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் 'நல்லவர்களுக்கு நீ கெடுதல் செய்யாதே, என நான் உன்னைத் தடுத்தேன்.

    இப்போது நீ கடும் சிரமத்தில் மாட்டிக்கொண்டாய்' என்றார். அதற்கு ஹஜ்ஜாஜ் பின் யூசுப் 'ஹஸனே! என்னிடமிருந்து கடும் சிரமம் நீங்கிவிட இறைவனிடம் பிரார்த்திக்கும்படி நான் உம்மை வேண்டிக் கொள்ளவில்லை. மாறாக, எனது உயிர் சீக்கிரமாக கைப்பற்றப்பட வேண்டும் எனவும், எனக்கு ஏற்படும் வேதனை நீடிக்கக்கூடாது எனவும் தான் நான் உம்மை வேண்டும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

    ஹஜ்ஜாஜ் இறந்தபோது, அந்த செய்தியை அறிந்த மக்கள் வீதிக்கு வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மஃமூன் இறந்தபோது இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். தன்னை நபி என்று வாதிட்ட பொய்யன் முஸைலமா கொல்லப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) இறைவனுக்கு தலைவணங்கி, சிரம் தாழ்த்தி நன்றி கூறி மகிழ்ந்தார்.

    நல்லவர்கள் நம்மை விட்டுச் சென்றால் அது நமக்கு கவலை தரும். தீயவர்கள் மரணமானால் அது உலகத்திற்கும், உலக மக்களுக்கும் நிம்மதி தரும் ஓய்வாகும். நல்லவர்களால் இந்த உலகம் நன்மை பெறட்டும்.

    பணி ஓய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். பணி ஓய்வுக்குப் பின்னர் பலர் ஓய்வே வாழ்க்கை என்று ஒரு இடத்தில் முடங்கி விடுகிறார்கள். இதனால் உடல் நலக்கேடு வரும்போது மிகவும் துவண்டு விடுகிறார்கள்.
    பலரும் பணி ஓய்வு என்பதை நிரந்தர ஓய்வு என்றே எண்ணுகிறார்கள். அரசுப்பணி, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வயதில் பணியாளர்களை பணி ஓய்வு செய்கிறார்கள். இந்தியாவும், சீனாவும் அதிவேக வளர்ச்சி பெறுவதைப்பார்த்து மேலை நாடுகள் வியப்பு அடைகின்றன. இதற்கு காரணம் மக்கள் தொகையில் இளைஞர்கள் அதிக அளவில் இருப்பதே ஆகும். எனவே பணி ஓய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். பணி ஓய்வு என்பது விவசாயிகளுக்கோ, வக்கீல் தொழில் செய்பவர்களுக்கோ, மருத்துவர்களுக்கோ, வியாபாரம் செய்பவர்களுக்கோ கிடையாது.

    ஏனென்றால் அவர்கள் ஒரு நிறுவனத்தை சார்ந்து இல்லை. இவர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது. உடலும், உள்ளமும் நன்றாக இருக்கும் வரை உழைத்துக்கொண்ட இருப்பார்கள். ஒரு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுகிறவர் கூட தன் உடம்பில் வலு இருக்கும் வரை தன் தொழிலை செய்கிறார். பணி ஓய்வுக்குப் பின்னர் பலர் ஓய்வே வாழ்க்கை என்று ஒரு இடத்தில் முடங்கி விடுகிறார்கள். தங்களையும் தங்கள் உடல் நலத்தையும் பற்றி நினைத்தே வாழ்க்கையை கழிக்கிறார்கள். இதனால் உடல் நலக்கேடு வரும்போது மிகவும் துவண்டு விடுகிறார்கள்.

    அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்கிறார்கள். தங்கள் மகனோ, மகளோ தங்களை கவனிக்கவில்லை என்ற வருத்தம் சிலரிடம் மேலோங்கி இருக்கிறது. ஓய்வு சிலருடைய மன நிலையையும் பாதிக்கிறது. கணவன், மனைவிக்குள் தேவையற்ற வாதங்கள் தோன்றி வருத்தங்களாக முடிகிறது. இதற்கெல்லாம் காரணம் இவர்களிடம் இருக்கும் அதீத நேரம்தான்.

    காலையில் நடைபயிற்சி மற்றும் நண்பர்களை சந்திப்பது, பத்திரிகைகள் படிப்பது, காலை உணவுக்குப்பின் சிறு உறக்கம், மதிய உணவு, அதன்பின் சிறு உறக்கம், மாலை மற்றும் இரவில் தொலைக்காட்சியில் முழு கவனம் என்று பலர் பட்டியலிட்டபடி வாழ்கின்றனர். சிலர் நடைபயிற்சியையோ அல்லது உடற்பயிற்சியையோ கூட மேற்கொள்வதில்லை. தற்போதைய எந்திர யுகத்தில் பெரும்பாலானோர் வாட்ஸ்-அப், முகநூல் போன்றவற்றில் மணிக்கணக்கில் பொழுதை செலவழிக்கிறார்கள். இந்த வாழ்க்கை இவர்களுக்கு சில வருடங்களில் ஒரு சலிப்பை உண்டாக்குகிறது. மேலை நாடுகளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முன் அனுமதி இல்லாமல் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாது. ஆனால் இவர்களோ திடீரென்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு செல்வார்கள். நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இது மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

    அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அந்த சொற்ப ஓய்வூதியத்திலேயே தங்கள் வாழ்க்கையை அடக்கிக்கொண்டு தங்களுக்கும் தங்கள் மனைவிக்குமான தேவைகளை குறைத்துக்கொள்வார்கள். ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து ஓய்வுபெற்ற பலருக்கு ஓய்வூதியம் என்பது கிடையாது. பணி ஓய்வுபெறும்போது தங்கள் மாத வருமானம் தடைபடுவது அவர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது எதிர்பார்த்த ஒன்றுதான். அதற்கான திட்டமிடலை பல வருடங்களுக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும்.

    இந்த நிலைமைக்கு காரணம் நாம் நமக்கு என்று ஒரு பணியை தேர்ந்தெடுக்காமல் ஓய்வை தேர்ந்தெடுப்பதுதான். செயலற்ற மனது பிசாசுகளின் பட்டறை என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இன்றைய முன்னேறிய மருத்துவ உலகில் ஆரோக்கியம் வெகு விரைவில் கெட்டுப்போவதில்லை. முன்பை விட நாம் நீண்ட நாட்கள் வாழ்கிறோம் என்பதே உண்மை. எனவே பணி ஓய்வு என்பது நிறுவனத்தின் பார்வையில் நமக்கு அவர்கள் கொடுத்திருந்த பணியில் இருந்து மட்டும்தான் விடுதலை. ஆனால் உடலும் உள்ளமும் நமக்கு நன்றாகவே உள்ளது. எனவே நாம் நமக்கு பிடித்த ஒரு பணியை செய்ய வேண்டும். அந்த பணி நாம் பல நாட்கள் செய்ய நினைத்து அலுவலக அவசரங்களினால் செய்ய முடியாமல் போயிருக்கலாம்.



    சிலர் புகைப்படம் எடுப்பதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். இப்போது அதை ஒரு தொழிலாக செய்யலாம். ஒரு தொழில் முனைவோராக மாறலாம். இதற்காக பல பயிற்சிகளும் வங்கிகள் வாயிலாக கடன் உதவிகளும் அரசின் மானியமும் கிடைக்கின்றன. தங்கள் அனுபவத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். ஒரு சமுதாய முன்னேற்றமாக கிராமங்களில் ஏழைகளுக்கு எழுத படிக்க கற்றுத்தரலாம். இப்படி ஏதாவது ஒரு தொழில் செய்யும் போது அதில் ஒரு வருவாயும் ஏற்படும் மற்றும் சேவையில் தங்களை ஈடுபத்திக்கொள்ளும்போது மனதிருப்தியும் உடல் ஆரோக்கியமும் பெறுவார்கள். அப்போது குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சி திரும்புவதை உணர்வார்கள்.

    நீங்கள் உங்கள் மன நிலையை ஓய்வுக்கு தள்ளிவிடாதீர்கள். மனதுக்கு உற்சாகம் அளியுங்கள். முன்னைப்போலவே நல்ல ஆடைகளை அணியுங்கள். ஆண்கள் தினமும் முகச்சவரம் செய்ய மறக்காதீர்கள். கோவில்களுக்கு சென்று வாருங்கள். நண்பர்களிடம் மற்றும், உறவினர்களிடம் உற்சாகமாக பேசுங்கள். மேலும் மற்றவர்களைப்பற்றி பொழுதுபோக்குக்காகக்கூட தவறாகப்பேச பேச வேண்டாம்.

    இது எதிர்மறையான மனநிலையை உங்களுக்குள் வளர்க்கும். மேலும் ஒரு எதிர்மறை சக்தி உங்களை சுற்றி உருவாகும். இந்த எதிர்மறை சக்தி எதிர்மறை விளைவுகளையே உங்களுக்கு உருவாக்கும். ஆரோக்கியமாக பேசுங்கள். நல்ல விஷயங்களை பேசுங்கள். உங்கள் மனது இலகுவாகும். இது உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். உங்களுக்கு பிடித்த ஒரு தொழிலை செய்யுங்கள். அலுவலகத்தில் கைகட்டி மேலதிகாரிகளின் கீழ் வேலை பார்த்த உங்களுக்கு தொழிலில் நீங்கள்தான் முதலாளி என்று எண்ணும்போது உங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி உண்டாகும். கிடைத்துள்ள நேரத்தை பயனுள்ளதாக்குவோம். நாம் ஓய்வுக்கு ஒரு ஓய்வு கொடுப்போம்.

    எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு அளிக்கப்படுள்ளது. #jamesAnderson #England
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் வலது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். ஆகஸ்டு 1-ந்தேதி முதல் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டி இருப்பதை கருத்தில் கொண்டு, ஆண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.



    இதனால் அடுத்து வரும் கவுண்டி போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். ‘சவாலான இந்திய தொடருக்கு ஆண்டர்சன் முழு உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்’ என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் குறிப்பிட்டார். #jamesAnderson #England
    ×