search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "resistance"

    • செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனம் தொடங்கியது.
    • செல்போன் கோபுரம் பணியை தொடங்கக்கூடாது என வலியுறுத்தியும், எதிர்ப்பு தெரிவித்தும் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவ ட்டம் பேராவூரணிபேரூராட்சிக்கு உட்பட்ட நாட்டாணிக்கோட்டை பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க முடிவு செய்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை அந்த தனியார் நிறுவனம் தொடங்கியது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று (சனிக்கிழமை) தனியார் நிறுவனத்தினர் செல்போன் அமைக்கும் பணியை தொடங்கினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரன் (வயது37) என்பவர் செல்போன் (டவர்) கோபுரம் பணியை தொடங்கக்கூடாது என வலியுறுத்தியும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவீந்திரன் கையில் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த னர். பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • குமாரபாளையம் வார சந்தையில் நூலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் (பொறுப்பு) கமிஷனர் மனு கொடுத்துள்ளனர்.
    • ஏற்கனவே கட்டிடம் கட்டும் இடம் அருகில் ஒரு நூலகமும், கவுரி தியேட்டர் அருகிலும் 2 நூலகங்கள் உள்ளன.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் வார சந்தையில் நூலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் (பொறுப்பு) கமிஷனர் ராஜேந்திரனிடம் மனு கொடுத்துள்ளனர். அதில் அறிவுசார் நூலகம் கட்ட வார சந்தையை தேர்வு செய்து கட்டுமான வேலைகள் நடந்து வருகிறது. ஏற்கனவே கட்டிடம் கட்டும் இடம் அருகில் ஒரு நூலகமும், கவுரி தியேட்டர் அருகிலும் 2 நூலகங்கள் உள்ளன.

    நகரின் மையப்பகுதியான பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகே அரசு இடம் உள்ளது. அங்கு அறிவுசார் நூலகம் கட்டினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். மேலும் வார சந்தையில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் பரப்பளவு குறுகி வருகிறது. இதனால் வார சந்தை நாட்களில் சந்தை வளாகத்தில் கடை அமைக்க முடியாமல் சாலையில் கடைகள் அமைத்து போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

    திருவிழா சமயத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த இந்த வார சந்தையைதான் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே வார சந்தையில் நூலகம் கட்டுமான பணியை, பரிசீலித்து பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகில் நூலகம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • கல்-மண் குவாரி அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • குவாரிகளால் ஏற்படும் தூசி காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்துள்ள தூம்பக்குளம் பகுதியில் புதிதாக கல்-மண் குவாரி அமைக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. கல்குவாரி அமைய உள்ள இடத்தை சுற்றிழும் 400 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அருகில் உள்ள முனியாண்டிபுரம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தூம்பக்குளத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் கல்-மண் குவாரி அமைத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைவார்கள். வெடி வைத்து கற்களை உடைக்கும்போது அங்கு வசிக்கும் விவசாய குடும்பங்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். குவாரிகளால் ஏற்படும் தூசி காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் குவாரிகள் அமைக்க கூடாது என பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர்.
    • நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை நகர போலீஸ் நிலையத்தின் அருகில் டாஸ்மாக் கடை செயல்படுவதற்கு அப்பகுதி மக்கள் பல மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் சாலையோரத்தில்நின்று மது அருந்துவதுபோன்ற சட்ட விரோத செயல்க ளில் ஈடுபடுவதால்கோவி லுக்கு, பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாண விகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தையும் இன் ல்களையும் சந்தித்து வருகி ன்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடையை உடனடி யாக மூட வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் கூறியதை தொட ர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும்.
    • கீரைத்துறை பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை சுப்ரமணியபுரம் துணைமின்நிலையம், டி.பி.கே.ரோடு பீடர், மாகாளிப்பட்டி துணைமின் நிலையம், மூலக்கரை மற்றும் கீரைத்துறை பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (23-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை டி.பி.கே. ரோடு, கிரைம்பிராஞ்ச், காஜிமார்தெரு, தெற்குமாடவீதி, மேல கட்ராபாளையம், அமெரிக்கன் மிசன் சர்ச், மேல பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் தெரு, கிளாஸ்கார தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, புது நல்லமுத்து ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி. காலனி, ஓட்டு காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், ஆதிமூலம் சந்து, லாட சந்து, காளியம்மன் கோவில் தெரு, கீரைத்துறை பகுதிகள், மேலத்தோப்பு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    திருப்பரங்குன்றம் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (23-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கூடல்மலைத் தெரு, என்ஜினீயரிங் கல்லூரி, ஜி.எஸ்.டி.ரோடு, சன்னதிதெரு, பாம்பன்நகர், கிரீன்நகர், திருமலையூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • சிறு மற்றும் குறுவியாபாரிகளை ஒழிப்பதற்கான ஒரு மறைமுக ஆயுதம் ஆகும்.
    • சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    திருப்பூர்:

    காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநிலத் தலைவர் எஸ் .வி .பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கலாம் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு சிறு மற்றும் குறுவியாபாரிகளை ஒழிப்பதற்கான ஒரு மறைமுக ஆயுதம் ஆகும். காரணம் அறிவிப்பில் 10 நபர்களுக்கு மேல் வேலை செய்யும் பெரிய கடைகள் மட்டுமே 24 மணி நேரமும் செயல்பட அனுமதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இந்த அறிவிப்பினால் சிறிய அளவிலான தனது குடும்ப நபர்கள் அல்லது ஒருவரோ இருவரோ வேலை செய்யும் அளவிலான சிறிய மற்றும் நடுத்தர கடைக்காரர்கள் மிகவும் பாதிக்கப்படுவர்.

    ஏற்கனவே கொரோனா எனும் கோரப்பிடியில் சிக்கி அதிலிருந்து மீளமுடியாமல் பல்லாயிரக்கணக்கான சிறு வணிகர்கள் வாடகை கூட தர இயலாமல் தங்களது கடைகளை காலி செய்துவிட்டு வாழ்வாதாரமின்றி பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் 10 நபர்கள் வேலை செய்யும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி என்பது சிறு வணிகர்களின் குரல்வளையை நெரிக்கும் செயல் ஆகும்.

    ஆகவே தமிழக முதல்வர் இந்த அறிவிப்பினை திரும்பப் பெற்று பாரபட்சமின்றி பெரிய சிறிய மற்றும் நடுத்தரமான அனைத்து கடைகளும் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என அறிவித்து சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • வண்டிக்காரத்தெருவில் தொடர் மின்தடை ஏற்பட்டது.
    • நகரின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலான நேரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரு கேயுள்ள ஆா்.எஸ்.மடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சக்கரக்கோட்டை, பட்டணங்காத்தான், ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி நேற்று 10 மணிக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பிற்பகல் 2.30 மணிக்கு பிறகே மின்சாரம் மீண்டும் விநியோகிக்கப்பட்டது. புதிய பஸ் நிலையப் பகுதி, வண்டிக்காரத் தெரு, இளங்கோவடிகள் தெரு உள்பட முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் மாலை 4 மணி வரையில் இல்லை. நகரின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலான நேரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    நகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், மாவட்டக் கிளைச் சிறை, வங்கிகள், மருத்துவமனை அமைந்துள்ள வண்டிக்காரத் தெரு பகுதி யில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டதாகப் புகாா் கூறினா்.

    இது குறித்து உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் கேட்டபோது, ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. ஆகவே வண்டிக்காரத் தெரு உள்ளிட்ட பகுதி களில் குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை என்றனா்.

    ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்காக மேலூர், புதுச்சாவடி, ஜெயங்கொண்டம், தேவனூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்கள் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை என விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

    இதையடுத்து ஜெயங்கொண்டத்தில் 2 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், ஏக்கர் ஒன்றிற்கு குறைந்தது ரூ.13 லட்சம் வழங்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அனல்மின் திட்டத்துக்கு நிலம் கொடுத்த மேலூர் கிராமமக்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து கலெக்டர், தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கோரிக்கை மனு எழுதி கொடுத்தனர். #tamilnews
    அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளைக்குதான் பெண் கொடுப்பாதாக காதலியின் பெற்றோர் கூறியதால் கோவிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி போலீசில் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே முத்தையன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் விஸ்வநாதன் (வயது 26). ஐ.டி.ஐ. படிப்பு முடித்து விட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார்.

    ஈங்கூர் அருகே புலவனூரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவருடைய மகள் பவித்ரா (23). ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து முடித்துள்ளார்.

    பவித்ராவும், விஸ்வநாதனும் தூரத்து உறவினர்கள் ஆவர். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து பவித்ராவின் பெற்றோரை சந்தித்து விஸ்வநாதன் பெண் கேட்டார்.

    அப்போது அரசு வேலையில் உள்ள மாப்பிள்ளைக்கு தான் பெண் கொடுப்பேன் என கூறி பவித்ராவின் பெற்றோர் விஸ்வநாதனுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை விஸ்வநாதனும், பவித்ராவும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வட்டமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பிறகு பாதுகாப்பு கோரி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் மணமக்களை விஸ்வநாதனின் பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். #tamilnews
    எஸ்.சி-எஸ்.டி சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்பட பல நகரங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் பல இடங்களில் தீவைப்பு வன்முறை நடந்தது. #SCST
    புதுடெல்லி:

    எஸ்.சி-எஸ்.டி சட்டத்தின் கீழ் அப்பாவிகள் தண்டிக்கப்படுவதை தடுப்பதற்காக இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுகிறவர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் விசாரணை நடத்தி போதிய ஆதாரம் இருப்பதாக கருதினால் மட்டுமே வழக்கு தொடர வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் பிரிவுகளை நீடிக்கச்செய்யும் வகையில் அதில் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது.

    இதை எதிர்த்து வட மாநிலங்களில் ஓ.பி.சி. வகுப்பினரும், பொது பட்டியல் வகுப்பினரும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    நேற்று வட மாநிலங்களில் நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பல இடங்களில் தீவைப்பு வன்முறை நடந்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினார்கள்.

    உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. சாலைகளில் தடை ஏற்படுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பாட்னாவில் போராட்டக்காரர்கள் பல இடங்களில் கண்டன பேரணி நடத்தினார்கள். ரெயில் மறியலில் ஈடுபட்டு ரெயில் தண்டவாளத்துக்கு தீ வைத்தனர். இதனால் பீகாரில் ரெயில் போக்குவரத்து பாதுக்கப்பட்டது.

    மத்திய பிரதேசத்தில் ஓ.பி.சி. மற்றும் உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த 150 அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    உத்தரப் பிரதேசத்தில் லக்னோ, ஆக்ரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன.

    ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்பட பல நகரங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஆங்காங்கே பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், உருவபொம்மை எரிப்பு போராட்டங்கள் நடந்தன.

    போராட்டத்தையொட்டி வட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்படு இருந்தது. #SCST
    ×