search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "resistance"

    • மாலை நேரங்களில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வானில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகிறது
    • பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மழையில் குடை பிடித்தபடி சென்றனர்.

    கடலூர், ஜூன்.19-

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடிந்து 104 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. மேலும் சுட்டெரிக்கும் வெயிலால் கடலூர் மாவட்டத்தில் மதிய வேலைகளில் அனல் காற்று வீசி வந்ததோடு இரவிலும் வெயிலின் தாக்கத்தினால் ஏற்பட்ட புழுக்கத்தால் வீட்டிற்குள் பொதுமக்கள் இருக்க முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. 

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் மாலை நேரங்களில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வானில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை 2- வது நாளாக நேற்று மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் நீடித்து இன்று காலை வரை பெய்தது. விடிய விடிய பெய்த மழையினால் கடலூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். மேலும் கடல் பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராம மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

    இந்த மழை கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் காலை முதல் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மழையில் குடை பிடித்தபடி சென்றனர். 

    இதேபோல் காட்டுமன்னார்கோவில் பகுதியிலும் நேற்று இரவு முதல் காலை வரையில் மழை நீடித்தது. இந்த மழை காட்டுமன்னார்கோவிலை சுற்றியுள்ள லால்பேட்டை, மாகொள்ளங்குடி, எடையார், ஆயங்குடி, அனக்கரை, வாணாமதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. புவனகிரி பகுதிகளிலும் நேற்று முதல் மழை பெய்தது. புவனகிரி சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது. மேலும் புவனகிரி சுற்றி உள்ள விவசாய நிலத்திலும் தண்ணீர் வரத்து வர தொடங்கியது. 

    இதேபோன்று மழையினால் திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் கடந்த 7 மணி நேரமாக மின்தடையில் சிக்கி இருளில் மூழ்கிய கிராம மக்கள். மேலும் ராமநத்தம் சுற்றியுள்ள வாகையூர் பகுதியில் தொடர்ச்சியாக தினம் தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து வருகிறது. இரவு நேரங்களில் மின்வெட்டு தொடர்வதால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சிரமம் அடைந்து வருகின்றனர்.கோடை வெயிலின் வெப்பத்தால் பொதுமக்கள் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து குளிர்ச்சியான சூழ்நிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை கடலூர் மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

    • அறந்தாங்கி அருகே குடியிருப்பு பகுதிகளில் ரிங்ரோடு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்
    • அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒன்றிய அரசின் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் 2-வது பெரிய நகரமான அறந்தாங்கியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புறவழிச்சாலை (ரிங் ரோட்) பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அறந்தாங்கி நகர் பகுதியை உள்ளடக்கி அதன் புறபகுதியான பாக்குடி, வைரிவயல், ரெத்தினக்கோட்டை ஊராட்சி, கூத்தாடிவயல் போன்ற கிராமங்களை தொட்டும், வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மீமிசல், கட்டுமாவடி, பட்டுக்கோட்டை , புதுக்கோட்டை , காரைக்குடி ஆகிய நெடுஞ்சாலைகளை இணைத்தும் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.

    11 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட புறவழிச்சாலையில் 7 கிலோ மீட்டர் வரை நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூத்தாடிவயல் பகுதியில் விளைநிலம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புறவழிச்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக துறை அதிகாரிகள் நில அளவை செய்து எல்லைகற்கள் பதிக்கும்போது அங்கே சென்ற பொதுமக்கள் விளை நிலத்தில் சாலை அமைக்கக் கூடாது, அதற்கு பதிலாக மாற்று வழியில் சாலை அமைக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு உரிய தீர்வு எட்டப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதனையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.


    • மின்தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (12ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகம் பூ மார்க்கெட், பஸ் நிலையம், டி.டி.சி. நகர், லேக் ஏரியா பகுதி, சம்பக்குளம், 120 அடி ரோடு, கொடிக்குளம், சர்வேயர் காலனி, விவேகானந்தா நகர், ஆனந்தராஜ் நகர், மகாத்மா பள்ளி பகுதிகள், டென்னிஸ் கார்னர், வைரம் அபார்ட்மெண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோ கம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொ றியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    இதேபோல ஆரப்பாளை யம் துணைமின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்ப தால் நாளை (12ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படு கிறது.

    எனவே மேற்கண்ட நேரத்தில் சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணிநகர் மெயின் 1-வது, 2-வது தெரு, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சி யம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரகாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரகாரம், திலகர் திடல் சந்து ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    மேலும் கோவில் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தொட்டியன்கிணற்று சந்து, கீழபட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்கு ஆவணி மூல வீதி, தெற்கு ஆவணி மூலவீதி, ஜடாமுனி கோவில் தெரு, மீனாட்சி கோவில் தெரு, சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பலம் தெரு ஆகிய இடங்களிலும்,

    அனுப்பானடி துைண மின் நிலையத்துக்கு உட்பட்ட தாய் நகர், கங்கா நகர், ராஜமான் நகர், நேரு நகர், மல்லிகை நகர், மாருதி நகர், சோனையார் தெரு, சரவணா நகர், ஜே.ஜே.நகர், அம்மன் தெரு, சிந்தாமணி குறுக்கு ரோடு, கம்மாக்கரை ஆகிய இடங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • நாளை மின் தடை ஏற்படும்.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    விருதுநகர்

    ஆவியூர் அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியா ளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரியாபட்டி, ஆவியூர், புல்வாய்க்கரை ஆகிய துணை மின்நிலையங்களு க்குட்பட்ட பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன. ஆதலால் ஆவியூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட கல்லுப்பட்டி, தொடு வன்பட்டி, புல்லூர், வினோபா நகர், வலை யங்குளம், பெருமாள் புதுப்பட்டி, கல்லணை, சேது பொறியியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினி யோகம் இருக்காது.

    அதேபோல காரியாபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளத்துப்பட்டி, பாண்டியன் நகர், அச்சம்பட்டி, சின்ன காரியபட்டி, காரியாபட்டி பஸ் நிலையம், செவல்பட்டி, சித்து மூன்றடைப்பு, சத்திரம் புளியங்குளம், பாப்பனம், கம்பிகுடி, சுந்தரம் குண்டு, வேப்பங்குளம், மருதங்குடி ஆகிய பகுதிகளிலும் நாளை மின்வினியோகம் இருக்காது.

    புல்வாய்கரை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அ.முக்குளம், அழகாபுரி, சிறுவனூர், நாங்கூர், எழுவணி, குண்டு குளம், தொட்டியங்குளம், திம்மாபுரம், வேப்பங்குளம், முஷ்டக்குறிச்சி, தேசிய னேந்தல், எஸ். நாகூர், மேல கள்ளங்குளம், ஆவியூர், அரசகுலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கறம்பக்குடியில் முருகன் கோவிலை இடிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
    • தகவல் அறிந்த வருவாய் துறையினர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் முருகன் கோவில், அனுமார் கோவில் மற்றும் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் ஆகியவை உள்ளது. இந்த கோவில்கள் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது என்றும் இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக எனவும் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கோவில்களை அகற்றும் படி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டனர்.

    அதன்படி நெடுஞ்சாலைத் துறையினர் பலமுறை வந்து கோவிலை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பொது மக்களின் கடும் எதிர்ப்பால் கோவில் இடிப்பது பலமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் கோவிலை இடித்து அகற்றுவதற்கு முற்பட்டனர். பாதுகாப்பு பணிக்காக ஆலங்குடி துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தகவல் அறிந்த கறம்பக்குடி சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் திரளாக கூடி கோவில் இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் நேற்று சுப முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான திருமணங்கள் முருகன் கோவிலில் நடைபெற்றது. திருமணத்துக்கு வருகை தந்த அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. தகவல் அறிந்த வருவாய் துறையினர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு கோவிலை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.


    • அனைத்து வணிகர்களும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை எதிர்த்து கடைக்கு முன் போஸ்டர் ஒட்டியும் தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறை குறித்து முறைப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரை நடைமுறை படுத்த மாட்டோம்

    சுவாமிமலை:

    அனைத்து வணிகர்களும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை எதிர்த்து மாநில தலைவர் ஏ.எம். விக்ரமராஜா அறிவுறுத்தலின்படி சட்டையில் பேட்ச் அணிந்து மற்றும் கடைக்கு முன் போஸ்டர் ஒட்டியும் தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    முதல் கட்ட ஆர்ப்பாட்டத்தின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜாவை அழைத்து பேசி டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறை குறித்து முறைப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரை அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் எனவும், சிறு குறு வணிகர்களையும் எவ்வகையிலும் பாதிக்க மாட்டார்கள் எனவும் உறுதி அளித்துள்ளார்கள்.

    இதற்காக டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பின் தலைவர்முகமது சுகைல், செயலாளர் உதயகுமார், பொருளாளர் ரகுராமன், கௌரவ தலைவர்அசோகன், முதன்மை துணைத் தலைவர்கள் ஜமால்முகமது, பாரதி, பாலமுருகன், ஹாஜாமைதீன் , துணைத் தலைவர்கள் சரவணன், செல்வசேகர், ஜாகிர் உசேன், கணேசன்மூர்த்தி, துணைச் செயலாளர்கள், ரவிச்சந்திரன், செல்வகுமார், அக்பர் அலி, இணைச் செயலாளர்கள், பிரபாகரன்,பாலமுருகன், கரிகாலன், ஒருங்கிணை ப்பாளர்,சந்திரசேகர், துணை ஒருங்கிணைப்பாளர் குமார், இணை ஒருங்கிணைப்பாளர், கருணாகரன், செய்தி தொடர்பாளர், லுக்மான் உமர், ஆகியோர் சார்பாகவும் மற்றும் வணிக அனைத்து உறுப்பினர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரமைப்பின் மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

    • ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது.
    • திருவோடை தூக்கி தரையில் போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு புளியக்குடியில் 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தற்போது உள்ள அங்காடியில் ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரம் ரெயில்வே இருப்புப் பாதையை கடந்து நடந்து செல்ல வேண்டி உள்ளது.

    இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே வடக்கு தோப்பு புளியக்குடியில் பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேறாததால் இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு

    புளியக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுசீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பகுதி நேர அங்காடி அமைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் திருவோடை தூக்கி தரையில் போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    அப்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

    பொதுமக்களின் இந்த நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • துவாக்குடியை திறந்தவெளி கழிவறையில்லாத நகராட்சியாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
    • அ.தி.மு.க. கவுன்சிலர் ஆணையரிடம் ெதரிவித்தார்

    திருச்சி:

    திருச்சி துவாக்குடி நகராட்சியை திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக அறிவிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆணையாளர் கேட்டுள்ளார். இந்த நிலையில் அந்த நகராட்சியின் 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் வக்கீல் சாருமதி ஆணையாளரிடம் ஒரு ஆட்சேபனை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    துவாக்குடி நகராட்சியில் உள்ள 1 முதல் 21 வரை உள்ள அனைத்து வார்டுகளையும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக அறிவிக்க இருப்பதை நான் அறிந்துள்ளேன். ஆனால் எனது வார்டுக்கு உட்பட்ட செடிமலை முருகன் கோவில் தெருவில் பெரும்பாலான மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கிறார்கள்.

    இங்கு பொது கழிப்பிட வசதி சரியாக இல்லை. இருக்கும் ஒரு பொதுக் கழிப்பிடத்தையும் நகராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
    • மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் மின்விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர்தெரு பகுதியில் உள்ள ஆலமரம் அருகே மின்கம்பிகள் மரக்கிளைகளுக்கு இடையே செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    அதேபோல வையாபுரி தோப்பு பகுதியில் மரங்கள் அடர்ந்த தோப்பு வழியாக மின்கம்பிகள் செல்வதாலும், மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு, குடியிருப்பு வீடுகளுக்கு மேலே செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதாலும் மின் கம்பிகளால் மின்விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கிராமமக்கள் இருந்து வருகின்றனர்.

    மின்பாதையை மாற்றி அமைக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் சோழன் வாயிலாக மின்வாரியத்திடம் கிராமமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நடுவதற்கு மின்கம்பம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் எந்த ஒரு பணியும் நடை பெற வில்லை என்று கூறப்படுகிறது. எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு மின் வாரியம் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டுமென கிராமமக்கள் தொடர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கிராமமக்கள் கூறியதாவது:-

    ராராமுத்திரகோட்டை வையாபுரி தோப்பு குடியிருப்பு பகுதியில் அதிகளவில் மின்கம்பிகள் தாழ்வாக தொட்டு விடும் தூரத்தில் செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    பலத்த காற்று அடிக்கும் சமயத்தில் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி மின் கம்பிகள் அறுத்து விழுந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் கிராமமக்கள் மின்சாரம் இல்லாமல் பல நாட்கள் சிரமப்பட்டு வருகிறோம். எனவே அரசு உடனடியாக நடவடி க்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சொத்துவரி, மின் கட்டணம், பால் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க. அரசை கண்டித்து கண்டண கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேரூராட்சியில் திமுக அரசின் சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வுகளை கண்டித்து வல்லம் பேரூராட்சி கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேருந்து நிலையம் எதிரே வல்லம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் சொத்துவரி உயர்வு மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு விலைவாசி உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தஞ்சை திருவாரூர் மாவட்ட பால்வளத் தலைவர் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர்.காந்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நிக்கல்சன் வங்கி கூட்டுறவு தலைவர் சரவணன், முன்னாள் வல்லம் பேரூராட்சி மன்ற தலைவர் சிங் ஜெகதீசன், பேரூராட்சி செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மருத்துவக் கல்லூரி பகுதி அம்மா பேரவை செயலாளர் மனோகரன் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் சிங்.ஜெ. முருகானந்தம், கவிதாகலியமூர்த்தி, வட்ட செயலாளர் மனோகரன், வல்லம் அதிமுக வார்டு செயலாளர்கள், அறிவு, மில்டன், அறிவு, சுந்தரம், வாசு, நேரு, சேட்டு நிர்வாகிகள்உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டண கோஷங்கள் எழுப்ப பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

    • வினாத்தாள் கட்டணம் வசூலிக்க ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
    • அரசு பள்ளி மாணவர்களிடம்

    திருச்சி,

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் சு.குணசேகரன், பொதுச் செயலாளர் முத்துசாமி, பொருளாளர் சே.நீலகண்டன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முற்றிலும் இலவசக் கல்வியை அளித்து வருகிறது. இதை ஒரு கொள்கையாகவே அரசு பின்பற்றி வருகிறது.

    மேலும் பணம் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு விலையில்லா பாடநூல், குறிப்பேடுகள், சீருடை, காலணி, புத்தகப்பை, மடிக்கணினி, மிதிவண்டி, கணித உபகரணங்கள் என 14-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எந்தவொரு கட்டணமும் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்படுவதில்லை.

    இந்நிலையில் மயிலாடுதுறை தொடக்க கல்வி அலுவலர் நேற்றைய தினம் பிறப்பித்துள்ள உத்தரவில் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடமும் தேர்வுக்கட்டணம் வசூல் செய்து செலுத்த வேண்டும் கூறியுள்ளார். தேர்வுகள் 3 பருவங்களாக நடத்தப்படுவதால் நடக்க இருக்கும் இரண்டாம் பருவம் தேர்வுக்கு மாணவர் ஒருவருக்கு ரூ.40 வீதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    இங்கு செயல்படும் அச்சகங்களிலேயே குறைந்த எண்ணிக்கையில் வாங்குபவர்களுக்கே கேள்வித்தாள் ரூ.6-க்கு கிடைக்கிறது. எனவே அரசு கொள்கைக்கு முரண்பட்ட இந்த உத்தரவை மயிலாடுதுறை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த கேள்வித்தாள்களை இலவசமாக வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு கேட்டுக் கொள்கிறது.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் கிழக்கு மேடு பகுதியை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பால் இரு தரப்பினருக்கும் மோதல்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் கிழக்கு மேடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). இவருக்கும் லட்சுமாயூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (45) என்பவருக்கும் இடையே நில பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஊராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டபோது அந்த இடம் குணசேகரனுக்கு சொந்தமான இடம் என்பதால் அவர் நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது தொடர்பாக சூர்யா தரப்பினருக்கும் குணசேகரன் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் இரு தரப்பயும் சேர்ந்த காளியப்பன்,  அப்புக்குட்டி, சேகர், செல்வம், மாதையன்,   சூர்யா, தாயம்மாள், சத்யா,  நஞ்சப்பன்,  சேட்டு, குருசாமி ஆகிய 11 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×