search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Full shutdown"

    எஸ்.சி-எஸ்.டி சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்பட பல நகரங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் பல இடங்களில் தீவைப்பு வன்முறை நடந்தது. #SCST
    புதுடெல்லி:

    எஸ்.சி-எஸ்.டி சட்டத்தின் கீழ் அப்பாவிகள் தண்டிக்கப்படுவதை தடுப்பதற்காக இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுகிறவர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் விசாரணை நடத்தி போதிய ஆதாரம் இருப்பதாக கருதினால் மட்டுமே வழக்கு தொடர வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் பிரிவுகளை நீடிக்கச்செய்யும் வகையில் அதில் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது.

    இதை எதிர்த்து வட மாநிலங்களில் ஓ.பி.சி. வகுப்பினரும், பொது பட்டியல் வகுப்பினரும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    நேற்று வட மாநிலங்களில் நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பல இடங்களில் தீவைப்பு வன்முறை நடந்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினார்கள்.

    உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. சாலைகளில் தடை ஏற்படுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பாட்னாவில் போராட்டக்காரர்கள் பல இடங்களில் கண்டன பேரணி நடத்தினார்கள். ரெயில் மறியலில் ஈடுபட்டு ரெயில் தண்டவாளத்துக்கு தீ வைத்தனர். இதனால் பீகாரில் ரெயில் போக்குவரத்து பாதுக்கப்பட்டது.

    மத்திய பிரதேசத்தில் ஓ.பி.சி. மற்றும் உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த 150 அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    உத்தரப் பிரதேசத்தில் லக்னோ, ஆக்ரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன.

    ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்பட பல நகரங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஆங்காங்கே பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், உருவபொம்மை எரிப்பு போராட்டங்கள் நடந்தன.

    போராட்டத்தையொட்டி வட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்படு இருந்தது. #SCST
    ×