search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டிக்காரத்தெருவில் தொடர் மின்தடை
    X

    வண்டிக்காரத்தெருவில் தொடர் மின்தடை

    • வண்டிக்காரத்தெருவில் தொடர் மின்தடை ஏற்பட்டது.
    • நகரின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலான நேரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரு கேயுள்ள ஆா்.எஸ்.மடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சக்கரக்கோட்டை, பட்டணங்காத்தான், ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி நேற்று 10 மணிக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பிற்பகல் 2.30 மணிக்கு பிறகே மின்சாரம் மீண்டும் விநியோகிக்கப்பட்டது. புதிய பஸ் நிலையப் பகுதி, வண்டிக்காரத் தெரு, இளங்கோவடிகள் தெரு உள்பட முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் மாலை 4 மணி வரையில் இல்லை. நகரின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலான நேரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    நகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், மாவட்டக் கிளைச் சிறை, வங்கிகள், மருத்துவமனை அமைந்துள்ள வண்டிக்காரத் தெரு பகுதி யில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டதாகப் புகாா் கூறினா்.

    இது குறித்து உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் கேட்டபோது, ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. ஆகவே வண்டிக்காரத் தெரு உள்ளிட்ட பகுதி களில் குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை என்றனா்.

    Next Story
    ×