என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Red Sandalwood"
திருமலை:
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட எஸ்.பி. அபிஷேக் மஹந்தி உத்தரவின் பேரில் செம்மரகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பெங்களூர் அருகே உள்ள கடிஹனஹள்ளி, ஒஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு சர்வதேச அளவில் செம்மர கடத்தலில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகளை குறிவைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது கடிஹனஹள்ளியில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த சர்வதேச செம்மர கடத்தல்காரன் நயாஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவனிடம் விசாரணை நடத்தியதில் அதே பகுதியில் உள்ள குடோனில் செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்தி ரூ. 5 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் காட்டுக்காநல்லூர் நாமக்கார மலையடிவாரத்தில் ரோந்து சென்றனர்.
அங்கு கும்பலாக நின்று கொண்டிருந்த 5 பேர் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதில் இரண்டு பேர் மட்டும் பிடிபட்டனர். 3 பேர் தப்பி விட்டனர்.
பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது ஜமனாமருதூர் குமார் (36), இரும்புலி சத்யராஜ் (24) எனவும், அவ்வழியே வரும் பொதுமக்களை மிரட்டி, வழிப்பறி செய்து ஆந்திர மாநிலம் சென்று செம்மரம் வெட்டி கடத்தி வர திட்டம் திட்டியதாக தெரிவித்தனர்.
மேற்கண்ட 2 பேர் மீதும் கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய கொளத்தூர் அண்ணாமலை, இளங்கோ, இரும்பிலி பெருமாள் (எ) வெள்ளை பெருமாள் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக வேலூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் சாத்துமதுரை என்ற பகுதியில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.
அப்போது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில், இரண்டரை டன் செம்மரக் கட்டைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் வேலூர் தாலுக்கா போலீசார் உதவியுடன் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக கடத்திச் செல்லப்பட்ட இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. #RedSandalwoodCaptured #Andhra
திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதி புள்ளைய காரி பல்லி என்ற அடத்தில் இன்று அதிகாலை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாசு தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 30க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்த கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கோதண்டம் என்ற போலீஸ்காரரின் தலையில் கல்பட்டு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
அவரை மீட்ட போலீசார் ரங்கம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் செம்மர கடத்தல் கும்பல் தொடர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் தற்காப்பிற்காக வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து கடத்தல் கும்பல் தப்பி ஓடியது.அவர்களை விரட்டி சென்ற போலீசார் 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த பொன்னிவேல், சிலக்காடு, சக்திவேல், சின்னராஜ், குமார் என தெரிய வந்தது.
இதில் தப்பி ஓடும் போது கீழே விழுந்ததில் ஒருவருக்கு கால் உடைந்தது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் வனப்பகுதியில் தப்பி ஓடியவர்களை பிடிக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கடத்தல் கும்பல் விட்டு சென்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான 25 செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். #Redsandalwood #Arrest
திருப்பதி அருகே சேஷாசல வனப்பகுதி பீமாவரம் என்ற இடத்தில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. வெங்கட்ரமணா, இன்ஸ்பெக்டர் சந்து, வன அலுவலர் லட்சுமிபதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 20 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றி கொண்டிருந்தனர். அவர்களை கண்ட போலீசார் சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கும்பல் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் 2 பேரை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்த வெங்கடேஷ் (24), கிருஷ்ணகிரியை சேர்ந்த கார் டிரைவர் அபு பக்கர் (23) என தெரியவந்தது.
செம்மர கடத்தல் கும்பல் விட்டு சென்ற 14 செம்மரங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். #RedSandalwood #Tirupati
திருப்பதி:
திருப்பதி அடுத்த ரேணிகுண்டா கடப்பா தேசிய நெடுஞ்சாலையையொட்டி மாமண்டூர் வனப்பகுதி உள்ளது.
இந்த வனப்பகுதியில் ஏராளமான செம்மரங்கள் உள்ளன. திருப்பதி வன அலுவலர் சுப்பராயுடு, மாமண்டூர் வன அலுவலர் நாராயணா தலைமையில் மாமண்டூர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வனபகுதியில் 4 பேர் கொண்டகும்பல் செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை கண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் 15 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். திருப்பதி அடுத்த கோடூர் மண்டலம் மாதவரம் பகுதியை சேர்ந்த முரளி (வயது 20). மாமண்டூரை சேர்ந்த ரமேஷ்குமார் ரெட்டி (24), மாமண்டூர் எஸ்.வி.நகரை சேர்ந்த புருஷோத்தம் (24), அயிராலா மண்டலம் அக்காளிபல்லி சசிகுமார் (20) என தெரியவந்தது.
4 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandersSmuggling
டெல்லியில் குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது சந்தேகப்படும் படியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் லாரியில் 4.5 டன் அளவிலான தங்கம் கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த கடத்தல் விவகாரத்தில் முதற்கட்டமாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து இன்று மாலை மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதிக அளவிலான இந்த செம்மரக்கட்டைகளின் கடத்தலில் ஈடுபட்டிருக்கும் கும்பல் குறித்த தீவிர விசாரணை டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் நடைபெற்று வருகிறது. #RedSandalwood #Delhi
ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் விலை மதிப்புமிக்க செம்மரங்கள் அதிகளவில் உள்ளன.
சர்வதேச அளவில் கடத்தல்காரர்கள் இங்குள்ள செம்மரங்களை வெட்டி கடத்தி செல்கின்றனர். தமிழகத்தில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த அப்பாவி கூலி தொழிலாளர்களை ஏமாற்றி அழைத்து சென்று செம்மரக் கடத்தலில் ஈடுபடுத்தபடுகின்றனர்.
செம்மர கடத்தலை தடுக்க ஆந்திராவில் செம்மரக் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 20 பேரை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மீண்டும் தமிழக தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி- காளஹஸ்தி இடையே உள்ள கொல்ல பள்ளி வனப்பகுதியில் கும்பல் செம்மரம் வெட்டிக் கடத்துவதாக கடப்பா செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் மற்றும் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12.30 மணிக்கு 10க்கும் மேற்பட்ட கும்பல் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர்.
போலீசார் வருவதை கண்ட கும்பல் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றிவளைக்க முயன்றனர். அப்போது செம்மரக் கடத்தல் கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். இருட்டில் கல் எறிவது தெரியாததால் போலீசாரால் தாக்கு பிடிக்க முடியவில்லை.
கல்வீச்சில் 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர்.
இதையடுத்து தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதனைக்கண்ட கும்பல் 4 புறமும் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்றதில் ஒருவர் சிக்கினார் மற்றவர்கள் காட்டுக்குள் தப்பி சென்றுவிட்டனர்.
அவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
துப்பாக்கி சூட்டில் பலியான வாலிபர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் (வயது 40) என்பது தெரியவந்துள்ளது. அவர் குறித்து முழு விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. பிடிபட்ட மற்றொருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandersSmuggling
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பொம்மிகுப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் சொந்தமாக பொக்லைன் எந்திரம் வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிகொட்டாய், ஆண்டியூரை சேர்ந்த திருப்பதி (வயது 23) என்பவர் கோவிந்தசாமியிடம் கடந்த 6 மாதமாக பொக்லைன் எந்திரத்தின் டிரைவராக வேலை செய்து வந்தார்.
ஆந்திர மாநிலத்துக்கு பொக்லைன் எந்திரத்தை திருப்பதி எடுத்து செல்லும்போது அங்கிருந்த செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து திருப்பதி நாமும் செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்தினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் 13 பேரை செம்மரக்கட்டை வெட்டி கடத்துவதற்காக பொம்மிகுப்பத்துக்கு அழைத்து வந்தார். அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ், இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் பொம்மிகுப்பத்துக்கு நேற்று இரவு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர்.
அதைத்தொடர்ந்து திருப்பதி, ஆண்டியூரை சேர்ந்த முருகன் (42), விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையை சேர்ந்த குமார் (25), மாதவன் (35), மாது (30), செந்தில்குமார் (30), அய்யாசாமி (28), ஈஸ்வரன் (35), ராஜேந்திரன் (40), சந்திரசேகரன் (31), மற்றொரு குமார் (26), வெள்ளையன் (30), தீர்த்தகிரி (30) ஆகிய 13 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் திருப்பதிக்கு செம்மரம் வெட்ட செல்வதாக ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடரி, ஒரு கார், 5 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 13 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandalwood
திருப்பதி அடுத்த ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் 3 குழுக்களாகப் பிரிந்து கல்யாணி அணைக்கட்டு மற்றும் அதன் அருகில் உள்ள லோடிங் பாயிண்ட், சந்திரகிரி புறவழிச்சாலை ஆகிய இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புற வழிச்சாலையில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒரு கார் செல்வதைக் கண்டனர். அதன் எண்ணை உடனடியாக மற்ற குழுவினரிடம் தெரிவித்தனர்.
அந்த காரில் லோடிங் பாயிண்டில் செம்மரக் கட்டைகளை ஏற்றிச் செல்வதை கவனித்தனர். இதையடுத்து காரை மடக்கிப் பிடிக்க முயன்றனர்.
ஆனால் டிரைவர் காரை வேகமாக ஓட்டி போலீஸ் வாகனத்தின் மீது மோதி விட்டு காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். உடனே சுதாரித்த போலீசார் சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்து காரை மடக்க முயன்றனர். போலீசார் சுற்றி வளைத்ததை உணர்ந்த டிரைவர் காரை நிறுத்தி விட்டு காட்டுப்பகுதிக்குள் தப்பியோடி விட்டார்.
இதையடுத்து போலீசார் அந்தக் காரையும், அதிலிருந்த 5 செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
காரின் நம்பர் பிளேட்டில் இருந்த எண்ணை சரிபார்த்ததில் அந்த எண் கலெக்டருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கலெக்டரின் கார் எண்ணை போலியாக பயன்படுத்தி செம்மரக்கட்டைகளை அதில் கடத்தி வந்துள்ளனர்.
இதே போல் பல அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களின் கார் எண்ணை கடத்தல் காரர்கள் பயன்படுத்தி இருக்கலாம்.
இனி கூடுதல் கவனத்துடன் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ் போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான துறைமுகம் உள்ளது. இங்கு அரசு அனுமதித்த பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது.
இங்கு இருந்து வெளிநாடுகளுக்கு கன்டெய்னர் மூலம் செம்மரக்கட்டைகள் கடத்த இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கன்டெய்னர் பெட்டியில் ரூ.20 கோடி மதிப்புள்ள 20 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வெளிநாடுகளுக்கு கடத்த இருந்தது இது 3-வது சம்பவமாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்