search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Red Sandalwood"

    • செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் அதிக அளவு மவுசு இருப்பதால் செம்மரங்களை வெட்டி கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
    • செம்மர கடத்தல் கும்பல் காரை கணேஷ் மீது மோதினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி, கடப்பா, பாக்ரா பேட்டை உள்ளிட்ட சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த ஏராளமான செம்மரங்கள் உள்ளன.

    செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் அதிக அளவு மவுசு இருப்பதால் செம்மரங்களை வெட்டி கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அன்னமய்யா மாவட்டம், பிலேரூ அருகே உள்ள குண்ட்ராவாரி பள்ளி அருகே உள்ள சோதனை சாவடியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அதிகாலை 5 மணிக்கு அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் காரை மறித்தனர்.

    ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனை கண்ட கணேஷ் என்ற போலீஸ்காரர் காரை தடுத்து நிறுத்த முயன்றார்.

    இதனால் ஆத்திரமடைந்த செம்மர கடத்தல் கும்பல் காரை கணேஷ் மீது மோதினர். இதில் படுகாயம் அடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காரில் இருந்த செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேர் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர்.

    அங்கிருந்த போலீசார் வனப்பகுதிக்குள் தப்பி ஓடியவர்களை துரத்தி சென்றனர். அதில் 2 பேரை மடக்கி பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடினர்.

    இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஏராளமான அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். வனப்பகுதிக்குள் தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    காரில் இருந்து 7 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரிடம் சிக்கியவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

    செம்மர கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்வராயன் மலைக்கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களான இவர்களை மரம் வெட்டும் வேலைக்கு புரோக்கர்கள் அழைத்து சென்றனர்.
    • புரோக்கர்கள் நடமாட்டம் குறித்தும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது காட்டிற்குள் இருந்து செம்மரம் வெட்டி கடத்தி வந்த 48 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1588 கிலோ எடையுள்ள 51 முதல் ரக செம்மரக்கட்டைகள், 2 கார் ஒரு ஆட்டோ, 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 2 கோடியாகும். சிக்கிய 48 பேரில் 17 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

    அதில் சேலம், கருமந்துறை, கரியகோவில், ஏத்தாப்பூர், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த விஜயகுமார் (32), செந்தில் (36), ராஜேந்திரன் (30), மணி (26), கனகராஜ் (28), காமராஜ் (30), முருகேசன் (39), பழனிசாமி (34), அண்ணாமலை (40), குள்ளன் ஆண்டி (45), ஆறுமுகம் (42), சின்னபையன் (45), மாணிக்கம் (30), முருகேசன் (37), வெங்கடேஷ் (36), பழனி (43), லட்சுமணன் ( 45) ஆகியோர் என தெரிய வந்தது.

    கல்வராயன் மலைக்கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களான இவர்களை மரம் வெட்டும் வேலைக்கு புரோக்கர்கள் அழைத்து சென்றனர். அங்கு செம்மரங்களை வெட்டி ஏற்றி சென்றபோது அவர்கள் சிக்கினர். இந்த தகவலையடுத்து 17 பேர் குறித்து ஆத்தூர், கருமந்துறை, கரியகோவில், ஏத்தாப்பூர், போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேலம் மாவட்ட போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆந்திராவில் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும் சில மலைக்கிராமங்களில் இருந்து தொழிலாளர்களின் உறவினர்கள் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். அதனால் அவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் செம்மரம் வெட்ட சேலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகளை அழைத்து சென்ற புரோக்கர்கள் யார் என்பது குறித்தும் சேலம் மாவட்ட போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்துகிறார்கள். தொடர்ந்து மலைக்கிராமங்களுக்கு வந்து செல்லும் புரோக்கர்களை கண்காணித்து கைது செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உத்தரவிட்டுள்ளார். இதனால் புரோக்கர்கள் நடமாட்டம் குறித்தும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் மண்டலம் மகா சமுத்திரம் சுங்கச்சாவடி அருகே டி.எஸ்.பி. சுதாகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • செம்மர கடத்தலில் ஈடுபட்ட கர்நாடகாவை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். நேற்று 8 பேர் கும்பல் செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றினர்.

    செம்மரக்கட்டைகளை கர்நாடக மாநில கடிகனஹள்ளியை சேர்ந்த இம்ரானுக்கு கடத்தி சென்றனர்.

    சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் மண்டலம் மகா சமுத்திரம் சுங்கச்சாவடி அருகே டி.எஸ்.பி. சுதாகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக செம்மரம் கடத்தி வந்த 2 கார்களை மடக்கி பிடித்தனர்.

    காரில் வந்த கோலார் மாவட்டம் பேத்தமங்களத்தை சேர்ந்த அப்துல் ரஹிமான் (வயது26), திரு வண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூரை சேர்ந்த மகேந்திரன் (35), திருப்பத்தூர் மாவட்டம் தகரக்குப்பத்தை சேர்ந்த காளியப்பன் (42), பி.மகாதேவன் (36), வாணியம்பாடியை சேர்ந்த ஜி.சிவன் (45), ஆர்.சின்னத்தம்பி (62), எம்.சிவசங்கர் (30), கே.ரவி (36) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள், 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    செம்மர கடத்தலில் ஈடுபட்ட கர்நாடகாவை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தமிழகத்தை சேர்ந்த 3 வாகனங்கள் வழங்கியதும், 7 பேர் கூலி தொழிலாளர்களாக மரம் வெட்ட அழைத்து வரப்பட்டுள்ளனர்.
    • கடத்தப்பட்ட செம்மரங்கள் சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பாக்ராபேட்டை இன்ஸ்பெக்டர் துளசிராம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது எர்ரகுண்டபாளயம் வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் செம்மரம் வெட்டி கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இந்த காரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த கடத்தல்காரர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    இதில் காரில் இருந்த 21 செம்மரங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் அன்னமய்யா மாவட்டத்தை சேர்ந்த சங்கர் செம்மரக்கடத்தல் கும்பல் தலைவராவார். இவர் மீது 30 வழக்குகள் உள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைக்கு சென்று வந்த பிறகும் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளான்.

    தமிழகத்தை சேர்ந்த 3 வாகனங்கள் வழங்கியதும், 7 பேர் கூலி தொழிலாளர்களாக மரம் வெட்ட அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    இவர்கள் செம்மரங்களை வேலூரை சேர்ந்த காஞ்சி என்கிற சந்தோஷ் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தசாமிக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    கடத்தப்பட்ட செம்மரங்கள் சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. சந்தோஷ் மற்றும் கோவிந்தசாமியும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வழக்கமாக செம்மரங்களை வெட்டுவதற்கு கூலி தொழிலாளர்களை பஸ்கள் மற்றும் லாரிகளில் அழைத்து வருவது வழக்கம்.

    ஆனால் போலீசார் சோதனை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து பைக்கில் கூலி தொழிலாளர்களை அழைத்து வந்து செம்மரங்களை வெட்டி செல்வது தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

    மொத்தம் 21 செம்மரக்கட்டைகள் மற்றும் ஒரு கார், 6 பைக்குகள் ரூ.71 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. பரமேஸ்வர் தெரிவித்தார்.

    • காரை சோதனை செய்தபோது, அதில் விலை உயர்ந்த செம்மரக்கட்டைகள் 10 துண்டுகள் இருந்தது தெரிய வந்தது.
    • செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதட்டூர்பேட்டை:

    ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டை வழியாக சொகுசு கார் ஒன்றில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ஆந்திராவில் இருந்து வரும் அனைத்து கார்களையும் சோதனையிட்டனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் ஒரு கார் திசையை மாற்றி வேகமாக சென்றது. உடனே போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். போலீசார் விரட்டி வருவதை கண்டதும் அந்த காரை ஓட்டி வந்த மர்ம நபர்கள் காரை மலையடிவாரத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.

    போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது, அதில் விலை உயர்ந்த செம்மரக்கட்டைகள் 10 துண்டுகள் இருந்தது தெரிய வந்தது. மர்மநபர்கள் அவற்றை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததும் தெரிந்தது.

    கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் பள்ளிப்பட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காருடன் செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். இந்த செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய கிடைத்தது.
    • தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு நண்பரிடம் இருந்து செம்மரக்கட்டைகளை வாங்கியதாக செல்லபாண்டியன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம் குளித்தலை தெப்பக்குளம் தெருவில் வசித்து வருபவர் செல்லபாண்டியன். இவர் அதே பகுதியில் பழைய இரும்பு சாமான்கள் குடோன் வைத்துள்ளார்.

    இந்த குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் அந்த குடோனில் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அந்த குடோனில் பதுக்கி வைத்திருந்த 590 கிலோ எடையுள்ள 21 செம்மரகட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் உரிமையாளரான செல்லபாண்டியனையும் கைது செய்தனர். பின்னர் அவரை மேல் மேல்விசாரணைக்காக கரூர் வனச்சரகம் சின்னதாதமபாளையத்தில் உள்ள வனச்சரக அலுவலரிடம் ஒப்படைத்தார். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளும் ஒப்படைக்கப்பட்டன.

    வனத்துறையினர் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு நண்பரிடம் இருந்து செம்மரக்கட்டைகளை வாங்கியதாக செல்லபாண்டியன் வாக்குமூலம் அளித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளில் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    கைதான செல்லபாண்டியனை, கரூர் வனச்சரக அலுவலர் தண்டபாணி, வனவர்கள் சாமியப்பன், கோபிநாத் ஆகியோர் குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர் மணப்பாறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

    கரூர் மாவட்டத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்து வழக்குப் பதிவு செய்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2015-ம் ஆண்டு திருப்பதியை மையமாக கொண்டு செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.
    • கடந்த 2 ஆண்டுகளில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 228 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் உள்ள சேஷாசல காடுகளில் அதிக அளவில் செம்மரங்கள் வளர்கின்றன. இந்த செம்மரங்களை வெட்டி, அதன் கட்டைகளை சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர்.

    இதைத் தடுக்க கடந்த 2015-ம் ஆண்டு திருப்பதியை மையமாக கொண்டு செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.

    இந்த பிரிவு தொடங்கப்பட்டதிலிருந்து தினமும் ரோந்து பணியில் ஈடுபடுதல், மரம் வெட்ட வருபவர்களுக்கு வேறு வகையில் வாழ்வாதாரத்தை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்துரையாடுதல், கடத்தல் குறித்த தகவல்களை அளிக்க வாட்ஸ்-அப் செயலி என பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 228 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 392 பேர், கர்நாடகத்தை சேர்ந்த 12 பேர் என மொத்தம் 641 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடமிருந்து 4,171 செம்மரக்கட்டைகளும், கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 102 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    செம்மரக்கட்டைகளை வெளிநாட்டிற்கு கடத்த மர்மநபர்கள் முயன்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெங்களூரு:

    ஆந்திராவில் இருந்து பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா கட்டிகேனஹள்ளி என்ற கிராமத்திற்கு சரக்கு ஆட்டோவில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக கம்மகொண்டனஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஒசக்கோட்டையில் இருந்து கட்டிகேனஹள்ளி செல்லும் சாலையில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி வனத்துறையினர் சோதனை நடத்திய போது காய்கறி பெட்டிகள் இருந்தன.

    ஆனாலும் வனத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் அந்த சரக்கு ஆட்டோவில் தொடர்ந்து சோதனை நடத்தினர். அப்போது காய்கறி பெட்டிகளின் அடியில் மறைத்து வைத்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் அந்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரிடம் வனத்துறையினர் விசாரிக்க முயன்றனர். அப்போது சரக்கு ஆட்டோ டிரைவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி சென்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் தங்களது ஜீப்பில் அந்த ஆட்டோவை விரட்டி சென்றனர். வனத்துறையினர் விரட்டி வருவதை பார்த்ததும் ஆட்டோவை நிறுத்திவிட்டு டிரைவர் உள்பட 2 பேர் தப்பி சென்று விட்டனர். பின்னர் அந்த ஆட்டோவை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் அந்த ஆட்டோவில் இருந்த 564 கிலோ செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து கொண்டனர்.

    இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.28 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த செம்மரக்கட்டைகளை வெளிநாட்டிற்கு கடத்த மர்மநபர்கள் முயன்று இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.


    திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய விழுப்புரம் வாலிபர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமலை:

    திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த ஏராளமான செம்மரங்கள் வளர்ந்துள்ளன.

    இந்த செம்மரங்கள் வெளிநாடுகளில் அதிக அளவில் விலை போவதால் இதனை வெட்டி கடத்தும் கும்பல் அதிக அளவில் உள்ளனர்.செம்மர கடத்தலை தடுக்க செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கல்யாண் டேம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது செம்மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கொண்டிருந்ததை கண்டு அவர்களை சுற்றி வளைத்தனர். இதில் 2 வாலிபர்கள் சிக்கனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 10 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் கருமந்துறையை சேர்ந்த மாதையன் மகன் ஆண்டி (30) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சடையன் மகன் தருமன் (32) என தெரிய வந்தது.

    அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    குன்றத்தூர் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #RedSandalwood
    பூந்தமல்லி:

    ஆந்திராவில் இருந்து கடந்த 19-ந் தேதி சென்னை துறைமுகத்துக்கு ஒரு கண்டெய்னர் லாரி வந்தது.

    தகுந்த ஆவணங்கள் இல்லாததால் அந்த கண்டெய்னர் லாரி திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நிலையில், அதில் செம்மரக்கட்டைகள் கொண்டு வரப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த லாரி எங்கு சென்றது என்பதை கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது குன்றத்தூர் அருகே சர்வீஸ் சாலையில் அந்த லாரி சென்றது தெரியவந்தது. 3 நாட்களாக தேடியும் அந்த லாரி சிக்கவில்லை.

    போலீஸ் விசாரணையில், தண்டலம் அருகே கீழ்மாநகர் பகுதிக்கு லாரி வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்குள்ள ஒரு குடோனில் 5 டன் செம்மரக்கட்டைகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.

    அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 3 கோடி. இந்த செம்மரக்கட்டைகள் இருந்த குடோனை வளசரவாக்கத்தை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் 2 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்தது தெரியவந்தது.

    அவருக்கு இதில் தொடர்பு உண்டா? என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #RedSandalwood

    மீஞ்சூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். #RedSandalwood
    பொன்னேரி:

    3 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனைகளில், கண்டெய்னரில் கடத்தப்பட்ட 1½ டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த செம்மரக்கட்டைகள் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதில் 1½ டன் செம்மரக் கட்டைகள் மாயமாகின.

    இந்த திருட்டு குறித்து மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாதவரம் குடோனில் திருடப்பட்ட செம்மரக்கட்டைகள் மீஞ்சூர் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு கொண்டு போகப்பட்டது தெரிய வந்தது.

    இதை திருடியது தொடர்பாக பூபதி, ராஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி திருடப்பட்ட 1½ டன் செம்மரக்கட்டைகள் மீஞ்சூர் அருகே உள்ள கவுண்டர்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் குடோனில் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மாதவரம், மீஞ்சூர் போலீசார் அந்த குடோனுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு ஏராளமான செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அங்கு 30 டன் செம்மரக்கட்டைகள் இருப்பதும், அவற்றை வெளிநாடுகளுக்கு அனுமதி இல்லாமல் அனுப்புவதும் தெரியவந்தது. இங்கு இருந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.20 கோடி என்று தெரியவந்தது.

    அவற்றை வனத்துறை அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடோன் உரிமையாளர் யார்? வெளிநாட்டு கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #RedSandalwood


    குடியாத்தம் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1½ டன் செம்மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். #RedSandalwood
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர்கள் ரவி, முருகன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குடியாத்தம் சித்தூர் சாலையில் உள்ள சைனகுண்டா சோதனை சாவடியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த காரை மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. அதனை ஜீப்பில் துரத்தினர். 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போடிகுப்பம் என்ற இடத்தில் காரை மடக்கினர். காரை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். காரில் 1½ டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 30 லட்சமாகும்.

    காருடன் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த செம்மரங்களை ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. காரில் இருந்த தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #RedSandalwood

    ×