search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smuggler"

    • சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் டவுன் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் டவுன் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அவர் சங்கரன்கோவில் கிருஷ்ணசாமி வீதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 26) என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 31,000 என்று கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • பெருந்துறை அருகே மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • அவரிடம் இருந்து 1,280 கிலோ ரேஷன் அரிசியையும், மொபட்டி னையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த பெருந்துறையில் ரேஷன் அரிசி கடத்தி வந்து, வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில், பெருந்துறை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் படியாக மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதில், அவரது மொபட்டில் 100 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்க ப்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பவானி பழனிபுரத்தை சேர்ந்த செல்வம்(47) என்பதும், வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததையும் ஒப்புக்கொண்டார்.

    அந்த அரிசியை வட மாநிலத்தவ ர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து செல்வத்தை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்த னர். அவரிடம் இருந்து 1,280 கிலோ ரேஷன் அரிசியையும், மொபட்டி னையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஒட்டகத்தில் மணல் கடத்தியவர் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை

    லாரி, டிப்பர், டிராக்டர் மூலம்  மணல் கொள்ளை கேள்விபட்டிருப்போம் ஆனால் இங்கு வித்தியா சமாக ஒட்டகத்தை வரவழைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் ஒட்டகத்தை மாட்டுவண்டியில் கட்டி மணல் கடத்தி போலீசார் வந்தவரிடம் பறிமுதல் செய்துள்ளனர். 

    மறவமங்கலம் அருகே பல்லாக்கோட்டை சரவணன் (வயது 52). இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வருகிறார். 

    நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் மறவ மங்கலம் பஸ் நிலையத்தில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டி யில் ஒட்டகத்தை கட்டி நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததை பார்த்தனர். 

    மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்த மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
    சர்வதேச செம்மரக் கடத்தல்காரனை போலீசார் கைது செய்து, அவனிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

    திருமலை:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட எஸ்.பி. அபிஷேக் மஹந்தி உத்தரவின் பேரில் செம்மரகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பெங்களூர் அருகே உள்ள கடிஹனஹள்ளி, ஒஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு சர்வதேச அளவில் செம்மர கடத்தலில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகளை குறிவைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது கடிஹனஹள்ளியில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த சர்வதேச செம்மர கடத்தல்காரன் நயாஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவனிடம் விசாரணை நடத்தியதில் அதே பகுதியில் உள்ள குடோனில் செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்தி ரூ. 5 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி அருகே துப்பாக்கியுடன் செம்மரக் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandersSmuggling

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த ரேணிகுண்டா கடப்பா தேசிய நெடுஞ்சாலையையொட்டி மாமண்டூர் வனப்பகுதி உள்ளது.

    இந்த வனப்பகுதியில் ஏராளமான செம்மரங்கள் உள்ளன. திருப்பதி வன அலுவலர் சுப்பராயுடு, மாமண்டூர் வன அலுவலர் நாராயணா தலைமையில் மாமண்டூர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது வனபகுதியில் 4 பேர் கொண்டகும்பல் செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை கண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் 15 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். திருப்பதி அடுத்த கோடூர் மண்டலம் மாதவரம் பகுதியை சேர்ந்த முரளி (வயது 20). மாமண்டூரை சேர்ந்த ரமேஷ்குமார் ரெட்டி (24), மாமண்டூர் எஸ்.வி.நகரை சேர்ந்த புருஷோத்தம் (24), அயிராலா மண்டலம் அக்காளிபல்லி சசிகுமார் (20) என தெரியவந்தது.

    4 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandersSmuggling

    காளஹஸ்தி அருகே செம்மரக் கடத்தல் கும்பல் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழக தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். #RedSandersSmuggling
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் விலை மதிப்புமிக்க செம்மரங்கள் அதிகளவில் உள்ளன.

    சர்வதேச அளவில் கடத்தல்காரர்கள் இங்குள்ள செம்மரங்களை வெட்டி கடத்தி செல்கின்றனர். தமிழகத்தில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த அப்பாவி கூலி தொழிலாளர்களை ஏமாற்றி அழைத்து சென்று செம்மரக் கடத்தலில் ஈடுபடுத்தபடுகின்றனர்.

    செம்மர கடத்தலை தடுக்க ஆந்திராவில் செம்மரக் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.

    கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 20 பேரை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மீண்டும் தமிழக தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி- காளஹஸ்தி இடையே உள்ள கொல்ல பள்ளி வனப்பகுதியில் கும்பல் செம்மரம் வெட்டிக் கடத்துவதாக கடப்பா செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் மற்றும் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12.30 மணிக்கு 10க்கும் மேற்பட்ட கும்பல் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர்.

    போலீசார் வருவதை கண்ட கும்பல் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றிவளைக்க முயன்றனர். அப்போது செம்மரக் கடத்தல் கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். இருட்டில் கல் எறிவது தெரியாததால் போலீசாரால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

    கல்வீச்சில் 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர்.

    இதையடுத்து தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதனைக்கண்ட கும்பல் 4 புறமும் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்றதில் ஒருவர் சிக்கினார் மற்றவர்கள் காட்டுக்குள் தப்பி சென்றுவிட்டனர்.

    அவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    துப்பாக்கி சூட்டில் பலியான வாலிபர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் (வயது 40) என்பது தெரியவந்துள்ளது. அவர் குறித்து முழு விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. பிடிபட்ட மற்றொருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandersSmuggling

    ×