search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AP forest"

    சர்வதேச செம்மரக் கடத்தல்காரனை போலீசார் கைது செய்து, அவனிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

    திருமலை:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட எஸ்.பி. அபிஷேக் மஹந்தி உத்தரவின் பேரில் செம்மரகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பெங்களூர் அருகே உள்ள கடிஹனஹள்ளி, ஒஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு சர்வதேச அளவில் செம்மர கடத்தலில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகளை குறிவைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது கடிஹனஹள்ளியில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த சர்வதேச செம்மர கடத்தல்காரன் நயாஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவனிடம் விசாரணை நடத்தியதில் அதே பகுதியில் உள்ள குடோனில் செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்தி ரூ. 5 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி அருகே துப்பாக்கியுடன் செம்மரக் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandersSmuggling

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த ரேணிகுண்டா கடப்பா தேசிய நெடுஞ்சாலையையொட்டி மாமண்டூர் வனப்பகுதி உள்ளது.

    இந்த வனப்பகுதியில் ஏராளமான செம்மரங்கள் உள்ளன. திருப்பதி வன அலுவலர் சுப்பராயுடு, மாமண்டூர் வன அலுவலர் நாராயணா தலைமையில் மாமண்டூர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது வனபகுதியில் 4 பேர் கொண்டகும்பல் செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை கண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் 15 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். திருப்பதி அடுத்த கோடூர் மண்டலம் மாதவரம் பகுதியை சேர்ந்த முரளி (வயது 20). மாமண்டூரை சேர்ந்த ரமேஷ்குமார் ரெட்டி (24), மாமண்டூர் எஸ்.வி.நகரை சேர்ந்த புருஷோத்தம் (24), அயிராலா மண்டலம் அக்காளிபல்லி சசிகுமார் (20) என தெரியவந்தது.

    4 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandersSmuggling

    ×