என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
    X

    மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

    • பெருந்துறை அருகே மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • அவரிடம் இருந்து 1,280 கிலோ ரேஷன் அரிசியையும், மொபட்டி னையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த பெருந்துறையில் ரேஷன் அரிசி கடத்தி வந்து, வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில், பெருந்துறை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் படியாக மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதில், அவரது மொபட்டில் 100 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்க ப்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பவானி பழனிபுரத்தை சேர்ந்த செல்வம்(47) என்பதும், வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததையும் ஒப்புக்கொண்டார்.

    அந்த அரிசியை வட மாநிலத்தவ ர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து செல்வத்தை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்த னர். அவரிடம் இருந்து 1,280 கிலோ ரேஷன் அரிசியையும், மொபட்டி னையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×