search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kattupalli port"

    காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான துறைமுகம் உள்ளது. இங்கு அரசு அனுமதித்த பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது.

    இங்கு இருந்து வெளிநாடுகளுக்கு கன்டெய்னர் மூலம் செம்மரக்கட்டைகள் கடத்த இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கன்டெய்னர் பெட்டியில் ரூ.20 கோடி மதிப்புள்ள 20 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    இங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வெளிநாடுகளுக்கு கடத்த இருந்தது இது 3-வது சம்பவமாகும்.

    ×