search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rashid Khan"

    • சூர்யகுமார் யாதவ் பேட்டிங் பற்றி சொல்ல வார்த்தைகள் போதாது.
    • எங்கள் அணி சார்பாக ரஷீத் கான் மட்டுமே மிகச் சிறப்பாக ஆடினார்.

    மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 57-வது ஐபிஎல் லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. அதுமட்டுமின்றி புள்ளி பட்டியலிலும் 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

    இந்நிலையில் தோல்வி குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில்:-

    எங்கள் அணி சார்பாக ரஷீத் கான் மட்டுமே மிகச் சிறப்பாக ஆடினார். அவர் பேட்டிங் செய்த விதமும், பவுலிங் செய்த விதமும் மிகவும் அற்புதமாக இருந்தது. அவரை தவிர்த்து நாங்கள் எங்களுடைய சிறப்பான செயல்பாட்டை இன்று வெளிப்படுத்த தவறிவிட்டோம். ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் இல்லை என்று கூற வேண்டும். ஏனெனில் எங்களுடைய திட்டங்களில் தெளிவு இல்லை.

    அதோடு அதனை நாங்கள் சரியாகவும் பயன்படுத்தவில்லை. இந்த மைதானத்தில் நாங்கள் 25 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டதாக நினைக்கிறேன். சூர்யகுமார் யாதவ் பேட்டிங் பற்றி சொல்ல வார்த்தைகள் போதாது. தற்போதைய டி20 கிரிக்கெட்டில் அவருக்கு எதிரான திட்டங்கள் தவறி போனால் அவர் எப்படி பேட்டிங் செய்வார் என்பதை இந்த போட்டியின் மூலமே அறிந்து கொள்ளலாம்.

    இந்த போட்டியில் எங்களுடைய திட்டங்கள் தவறியதாலே தோல்வி கிடைத்தது. ஆனால் இதிலிருந்து நிச்சயம் நாங்கள் மீண்டு வருவோம்.

    இவ்வாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.

    • மாயாஜால சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
    • அனைவராலும் விரும்பப்படும் ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் என டுவிட்டர் பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் ஐ.பி.எல். போட்டிகளில் கலக்கி வருகிறார். மாயாஜால சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் அவர் குஜராத் காந்திநகரில் தெருவில் இந்திய ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    முபாடல் வோக்ரா என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள 26 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ காட்சியில் ரஷித்கான் பேட்டிங் செய்கிறார். பின்னணியில் ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை குவித்த இந்த வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் ரஷித்கானை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், வெறுப்பாளர்கள் இல்லாத, அனைவராலும் விரும்பப்படும் ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் என குறிப்பிட்டுள்ளார்.

    • முதலில் ஆடிய குஜராத் விஜய்சங்கர், சாய் சுதர்சன் அதிரடியால் 204 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய கொல்கத்தா 207 ரன்கள் மட்டுமே திரில் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் அரை சதமடித்து 53 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விஜய் சங்கர் 21 பந்தில் அரை சதமடித்தார். அவர் 63 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷுப்மன் கில் 39 ரன்னில் அவுட்டானார்.

    கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஜெகதீசன் 6 ரன்னும், குர்பாஸ் 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    3வது ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ரானா ஜோடி அதிரடியாக ஆடியது. இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்த நிலையில் நிதிஷ் ரானா 45 ரன்னில் அவுட்டானார்.

    வெங்கடேஷ் அய்யர் 40 பந்தில் 5 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்து வெளியேறினார்.

    17-வது ஓவரை வீசிய ரஷீத் கான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆண்ட்ரூ ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்குர் ஆகியோரை வெளியேற்றினார்.

    ஆனால், கடைசி ஓவரில் 5 சிக்சர்களை அடித்து அணியை திரில் வெற்றிபெறச் செய்தார் ரிங்கு சிங்.

    இறுதியில், கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

    குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வென்று தொடரை கைப்பற்றியது.
    • இரு அணிகளும் இரு தரப்பு தொடரில் விளையாடியது இதுவே முதல் முறையாகும்.

    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடந்த முடிந்த நிலையில் அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரஷித்கான் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    இவ்விரு அணிகள் மோதிய டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வென்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளும் இரு தரப்பு தொடரில் விளையாடியது இதுவே முதல் முறையாகும். முதல் தொடரையே கைப்பற்றி ஆப்கானிஸ்தான் ஏற்கனவே புதிய வரலாற்று சாதனை படைத்தது.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 100 பந்துகளில் ஒரு பவுண்டரி, சிக்சர் கூட விட்டு கொடுக்காமல் ரஷித்கான் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ரஷித் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த போட்டியில் அவர் இரண்டு சிக்சர்களை விட்டுக்கொடுத்தார்.

    இதனால் தொடர்ச்சியாக 106 பந்துகளில் பவுண்டரிகள் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசியுள்ளார். 2 சிக்சர்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம் தொடர்ச்சியாக பவுண்டரிகள் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசியது முடிவுக்கு வந்துள்ளது.

    • இரண்டு துறையிலும் போட்டியை வெற்றி பெற வைக்க கூடியவர்.
    • பீல்டிங்கில் அவர் நெருப்பு மாதிரி செயல்படுகிறார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ். அதிரடி பேட்ஸ்மேனான அவர், தனியார் டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், உங்களின் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு டிவில்லியர்ஸ் கூறியதாவது:-


    எனது ஒட்டுமொத்த காலத்திற்கான சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான்தான். அவர் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார். இரண்டு துறையிலும் போட்டியை வெற்றி பெற வைக்க கூடியவர்.

    பீல்டிங்கில் அவர் நெருப்பு மாதிரி செயல்படுகிறார். அவர் வெற்றி பெற வேண்டுமென்று எப்போதும் நினைப்பார். அவர் மிகச்சிறந்த போட்டியாளர். அவர்தான் 20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறினார்.

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித்கான், பல்வேறு 20 ஓவர் லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். ஐ.பி.எல், பிக்பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக் உள்ளிட்ட போட்டித் தொடரில் விளையாடி வருகிறார்.

    டிவில்லியர்ஸ், ஐ.பி.எல். போட்டியில் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் இருந்திருக்கிறார்.
    • ரஷித் கான் கேப்டன்சியில் ஆடிய 7 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது.

    டி20 உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி தொடர் தோல்விகளை தழுவி, தொடரை விட்டு வெளியேறியது. ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அந்த அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் முகமது நபி.

    இதையடுத்து ஆப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான ரஷித் கான், சர்வதேச கிரிக்கெட்டில் 5 டெஸ்ட், 86 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர்.

    பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்து ஆப்கானிஸ்தான் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவரும் ரஷித் கான், ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார்.

    2019-ல் 7 டி20, 7 ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார். ரஷித் கான் கேப்டன்சியில் ஆடிய 7 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. இந்நிலையில், இப்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெறும் 24 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அனுபவத்தை பெற்றுள்ள ரஷித் கான் தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம். ஒரு சிறந்த ஆல்ரவுண்டர், அணியை முன்னின்று வழிநடத்த சரியான வீரர் ஆவார். 

    • அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக ரஷித் கான் கூறினார்.
    • இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாரா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மகத்தான பேட்ஸ்மேன்களில் முதன்மையானர். கடந்த 1990-ம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2007 வரை மிகச் சிறந்த இடது கை பேட்ஸ்மனாக அந்த சமயத்தில் இருந்த கிளன் மெக்ராத் முதல் சோயப் அக்தர் வரை அத்தனை உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய 2 வகையான கிரிக்கெட்டிலும் தலா 10000-க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்.

    நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழும் அவர் கடந்த 2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் 2022 டி20 உலக கோப்பைக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிரைன் லாரா வர்ணனையாளராக செயல்பட்டார்.

    மறுபுறம் டிசம்பர் 13-ம் தேதி முதல் துவங்கும் பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் ரஷித் கான் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளார். அந்த நிலையில் நேராக சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்ற அவர்கள் சர்வதேச அரங்கில் மோத வாய்ப்பில்லை என்றாலும் நட்பின் அடிப்படையில் வலைப் பயிற்சியில் மோதினால் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக போட்டி போட்டார்கள்.


    அதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் அதைப் பார்க்க ஆவலுடன் கூடிய நிலையில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷித் கானை எதிர்கொண்ட பிரைன் லாரா எந்த பந்துகளிலும் கொஞ்சமும் தடுமாறாமல் அதிரடியாக பேட்டிங் செய்தார். குறிப்பாக காத்திருந்து அடித்த ஸ்கொயர் கட் மற்றும் இறங்கி வந்து பவுண்டரி பறக்க விட்ட அவரது ஷாட்களை பார்த்து உற்சாகமான ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    24 வயதாகும் நம்பர் ஒன் டி20 பவுலரான ரஷித் கான் பந்துகளை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரஷித் கான் பேசியது பின்வருமாறு. "அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் சுழல் பந்து வீச்சை அற்புதமாக எதிர்கொள்ளும் பிரைன் லாரா போன்ற ஒருவருக்கு பந்து வீசுவது சவாலாகும். இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்" என்று கூறினார்.

    அவரை எதிர்கொண்டது பற்றி லாரா பேசியது பின்வருமாறு. "இது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இருப்பினும் ரசித் தற்போது பார்மில் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற பெரிய பவுலரை எதிர்கொள்வது அற்புதமானது. அது எனக்கு அதிர்ஷ்டமாகும்" என்று கூறினார்.

    • ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • எம்.ஐ. கேப்டவுன் அணியில் ரஷித்கான், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், காகிசோ ரபடா, டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

    கேப்டவுன்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் கிரிக்கெட் லீக் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகளையும் இந்திய தொழிலதிபர்களே வாங்கியுள்ளனர்.

    முதலாவது தென்ஆப்பிரிக்க 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கிறது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி எம்.ஐ. கேப்டவுன் அணியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர்கள் லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபடா, இளம் வீரர் டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தங்கள் அணிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக எம்.ஐ. கேப்டவுன் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்சுக்கு சொந்தமான ஜோகன்னஸ்பர்க் அணியில் தென்ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்தார்.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

    இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலை அவுட்டாக்கினார். இது சர்வதேசம், உள்ளூர், லீக் உள்பட ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் ரஷித் கானின் 400-வது விக்கெட்டாக (289 ஆட்டம்) அமைந்தது. 

    இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய பவுலர், மொத்தத்தில் 4-வது வீரர் என்ற சிறப்பை 23 வயதான ரஷித் கான் பெற்றார்.

    டி20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் முதல் 3 இடங்களில் வெஸ்ட் இண்டீசின் வெயின் பிராவோ (553 விக்கெட்), சுனில் நரைன் (425 விக்கெட்), தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் (420 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

    உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மட்டுமே வரவில்லை. மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் எச்சரித்துள்ளார். #CWC2019 #WorldCup2019
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற 30-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றில் சிறப்பாக விளையாடி ஆப்கானிஸ்தான் அணி இடம்பிடித்தது.

    அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக ரஷித் கான் உள்ளார். ஐசிசி தரவரிசையில் டி20 கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்கும் ரஷிகத் கான், உலகக்கோப்பையில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு எங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவது குறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடுவது அவசியமானது. உலகக்கோப்பையைில் சும்மா வந்து கலந்து கொண்டு பின்னர் சொந்த நாடு திரும்ப வேண்டும் என்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஒரு அணியாக சரியான திட்டமிடுதலுடன் இங்கிலாந்து செல்வோம்.



    உலகக்கோப்பை தொடரில் விளையாடும் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியதால், உலகக்கோப்பைக்கு தயாராக ஐபிஎல் மிகச்சிறந்த தொடராகும். தலைசிறந்த பயிற்சியாளர்கள் நம்மீது அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். இது எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. மிகவும் சந்தோசமாக ஐதராபாத் அணியில் விளையாடுகிறேன். ஏராளமான நேர்மறையான விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதை உலகக்கோப்பைக்கு எடுத்துச் செல்வேன்.
    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் உலக சாதனை படைத்துள்ளார். #RashidKhan #WorldRecord
    டேராடூன்:

    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. முகமது நபி 81 ரன்கள் (36 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் ‘ஹாட்ரிக்’ உள்பட தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியதும் அடங்கும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. #RashidKhan #WorldRecord

    டோனியின் தனித்துவமான ஷாட்களில் ஒன்றான ஹெலிகாப்டர் ஷாட் போன்று, ரஷித் கான் பந்தை சிக்சருக்கு விளாசியது ரசிகர்களை கவர்ந்தது. #MSDhoni #Rashidkhan
    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரஷித் கான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் டி10 தொடரில் விளையாடி வருகிறார்.

    நேற்று நடைபெற்ற ஆட்ம் ஒன்றில் ரஷித் கான் இடம்பிடித்துள்ள மராத்தா அரேபியன்ஸ் பாக்தூன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. மராத்தா அரேபியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. 9-வது ஓவரின் கடைசி பந்தை ரஷித் கான் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் அபாரமான வகையில் சிக்சருக்கு தூக்கினார்.

    இந்த ஷாட் இந்திய வீரர் எம்எஸ் டோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை அப்படியே பிரதி எடுத்ததுபோல் அமைந்தது. ரஷித் கான் அடித்த இந்த ஷாட்டை இந்திய அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் உள்ளிட்ட வீரர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர். மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் ரஷித் கானின் இந்த ஷாட்டை பார்த்து மெய்சிலிர்த்து போகினர்.



    மராத்தா அரேபியன்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் சேவாக் விளையாடி வருகிறார். இந்தப்போட்டியில், முதலில் பேட் செய்த மராத்தா அரேபியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 10 ஒவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்த இலக்கை துரத்திய பக்தூன்ஸ் அணி 4 பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டியது.

    அனைவரது பாராட்டையும் பெற்ற ரஷித் கான், ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டுபிடித்தவர் எம்எஸ் டோனிதான் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    ×