search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rally"

    • கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது.
    • இதற்கான விழிப்புணர்வு பேரணி யானது தோகைமலையில் நடைபெற்றது.

    குளித்தலை

    கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான விழிப்புணர்வு பேரணி யானது தோகைமலையில் நடைபெற்றது.

    தோகைமலை ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது, தோகைமலை பேருந்து நிலையம் வழியாக முக்கிய வீதிகளில் நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மாணவர்கள், வாக்காளர் பட்டியில் திருத்த முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் கலந்து கொண்டனர்.

    பேரணிக்கு சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரணியில் தேர்தல் துணை தாசில்தார் நீதிராஜன், வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மணி, தீபக் மற்றும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலரின உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிள் பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • சுத்தமல்லியில் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் பேரணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    மாநில உரிமை மீட்புக்கான 2-வது தி.மு.க இளைஞரணி மாநாடு அடுத்த மாதம் சேலத்தில் நடைபெற உள்ளது. இதனை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக 188 மோட்டார் சைக்கிள் பேரணியை கன்னியாகுமரியில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    நாங்குநேரிக்கு வந்த இந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அறிவுறுத்தலின் பேரில் தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கிரகாம்பெல், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ் தங்கபாண்டியன், ஆரோக்கிய எட்வின், சுடலை கண்ணு மற்றும் நிர்வாகி சிவந்திபட்டி இசக்கி பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் பேரணிக்கு மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்து ரை, வீர பாண்டி யன், இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார் முன்னாள் கவுன்சிலர் நவநீதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சேலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டு விளக்க மோட்டார்சைக்கிள் பேரணி ஆலங்குடி வந்தது

    ஆலங்குடி, 

    தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இளைஞரணி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிள் பேரணியாக தமிழகம் ம்ழுவதும் சென்று கட்சியினர், தொண்டர்களை சந்தித்து வருகிறார்கள்.

    பேரணியை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். 188 மோட்டார் சைக்கிள்களில் பேரணி தொடங்கப்பட்டது. 234 தொகுதிகளிலும் 15 நாட்களில் 8647 கிலோ மீட்டர் பயணம் செய்கின்றனர். இவர்களுக்கு 504 இடத்தில் வரவேற்பு வழங்கப்படுகிறது. நவம்பர் 27-ம் தேதி சேலம் சென்றடைகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி தொகுதியில் சுப்பிரமணியபுரம், கீரமங்கலம், கொத்தமங்கலம் வழியாக ஆலங்குடிக்கு வருகைதந்த இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் தி.மு.க.வினர் திரளாக வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் அருவடிவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், ஆலங்குடி நகர செயலாளர் பழனிக்குமார், துணைச் செயலாளர் செங்கோல், கவுன்சிலர்கள் சஷ்டிமுருகன், சையது இப்ராகிம், கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னையில் 28-ந் தேதி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் கோட்ைட நோக்கி பேரணி

    கந்தர்வ கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் வட்டார அளவிலான ஜாக்டோ ஜியோ ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.

    ஜாக்டோ ஜியோவின் ஒன்றிய ஒருங்கிணைப்பா ளர்கள், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் வட்டாரச் செயலா ளர் சண்முகம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலா ளர் முத்துக்குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொருளாளர் வெங்கடேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் தெட்சண மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத் தலைவர் சேகர் அனைவரையும் வரவேற் றார். கந்தரவக்கோட்டை ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஒன்றிய தலைவர் ரவி, செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா, மகளிர் அணி செயலாளர் கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    வருகிற 24-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கமும், 25-ந் தேதி மாவட்ட தலைநகரங்க ளில் மறியல் போராட்டமும், டிசம்பர் 28-ந் தேதி சென்னை யில் லட்சக்கணக் கான அரசு ஊழியர், ஆசிரி யர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகை போரா ட்டமும், கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்ச ரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெறுகிறது. கந்தர்வகோட்டை ஒன்றி யத்தின் சார்பில் அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    • மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன்ஹால் எதிரில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையிலும் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பேரணியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாநகர ஆணையாளர் காந்திராஜ், மாநகர நல அலுவலர் எழில் மதனா, மண்டல குழு தலைவர் சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள் பாபு, சுபாஷ்ணி ராஜா, டாக்டர் காரல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவதற்கான அறிவுரை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

    முசிறி

    முசிறி தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை இணைந்து விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை கரூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணித்துறை அலுவலர் வடிவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிலைய அலுவலர் கர்ணன், காவல் உதவி ஆய்வாளர் ஆசை தம்பி, தீயணைப்பு நிலைய போக்கு வரத்தாளர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணி முசிறி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று தீயணைப்பு துறை நிலை யத்தில் நிறைவடைந்தது.

    பேரணியில் காவல் ஆய்வாளர் கதிரேசன் மற்றும் காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவதற்கான அறிவுரை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • அரியலூர் அடுத்த சிறு வளூர் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாசற்ற தீபாவளி விழிப்பு ணர்வு பேரணி நடை பெற்றது.
    • இந்த பேரணியானது கிராமத்தின் அனைத்து தெரு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறை வடைந்தது.

    அரியலூர்

    அரியலூர் அடுத்த சிறு வளூர் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாசற்ற தீபாவளி விழிப்பு ணர்வு பேரணி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சின்ன துரை தலைமை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல் வர் சாந்தகுமாரி கலந்து கொண்டு பேர ணியை கொடியசைத்து தொடக்கி வைத்து பேசினார்.

    இந்த பேரணியானது கிராமத்தின் அனைத்து தெரு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறை வடைந்தது.

    பேரணியின் கலந்து கொண்ட மாணவ, மாணவி கள் மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டும் என்று முழக்கமிட்டனர். முன்னதாக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    பேரணியில் சுப்பராய புரம் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, செந் தில் குமரன், செவ்வேள்.தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன், பயிற்சி ஆசிரியர்கள் கண் ணகி, சரண்யா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

    • புகைப்பட அட்டையை பெற விண்ணப்பம் பெற வாக்காளர் உதவி மைய செயலி அறிமுகம்
    • குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம் மற்றும் நகரமன்ற உறுப்பினர்ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு

    அருவங்காடு,

    பாராளுமன்ற தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை தேர்தல் அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர் இதன் ஒருபகுதியாக குன்னூர் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    இதனை ஆர்.டி.ஓ பூரணகுமார் தலைமை தாங்கிகொடித்து வைத்தார். அப்போது பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இருசக்கர வாகன பேரணியும் நடந்தது.

    மேலும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஆண்டுதோறும் வாக்காளர் புகைப்பட அட்டையை பெறுவதற்கான விண்ணப்பம் பெறுவதற்கும் வாக்காளர் உதவி மைய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் புதிய கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து. பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், தேர்தல் அலுவலர் கோபி, மற்றும் நகரமன்ற உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பெரம்பலூரில்டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    பெரம்பலூர் 

    பெரம்பலூரில் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். மணிவண்ணன் தலைமை வகித்தார்.

    மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக்) கலாராணி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலர் (மேல்நிலை) சுரேஷ், இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட கவுரவ செயலாளர் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டி.ஆர்.ஓ. வடிவேல்பிரபு கொடியசைத்து பேரணியினை தொடங்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டார். இந்த பேரணி மாவட்ட தலைமை மருத்துவமனை, பழைய பஸ்ஸ்டாண்ட், காமராசர் வளைவு, சங்கு பேட்டை, கடைவீதி வழியாக வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் கவுன்சிலர்கள் மற்றும் ஜூனியர்கள் கோஷமிட்டும், பதாகைகள் ஏந்தியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    மாவட்ட கன்வீனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மேல்நிலை, உயர்நிலை,மெட்ரிக், நடுநிலை ஆகிய 38 பள்ளிகளில் இருந்து 497 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இணை கன்வீனர் துரை, வேப்பூர் மாவட்ட பொருளாளர் ராஜா, மண்டல அலுவலர்கள் செய்திருந்தனர். முன்னதாக ஜே.ஆர்.சி. மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட கன்வீனர் ஜோதிவேல் நன்றி கூறினார். 

    • பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்,
    • பதாகைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நெடுஞ்சாலைத்துறை தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பாக பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.

    பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார், இப்பேரணியில் தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் செந்தில்குமார், பட்டுக்கோ ட்டை நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் விஜயக்குமார், திருச்சி சாலை பாதுகாப்பு அலகு கோட்டப் பொறியாளர் புவனேஸ்வரி, பட்டுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் செல்வராஜ், பட்டுக்கோட்டை நகர் செந்தில்குமார், பட்டுக்கோ ட்டை மோட்டார் மன்ற வாகன தலைவர் சண்முகபிரியா ஆய்வாளர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லுாரி, ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் மற்றும் பதாகைகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சியானது பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்துநர்களாக இக்கல்லுாரியின் செயலர். கணேசன், முதல்வர் விஜ யலெட்சுமி, நெடுஞ்சா லைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர்கள் பானுதாசன், செந்தில்தம்பி மற்றும் பேரணியில் பங்கேற்றோர் கலந்து கொண்டனர்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு காணெளி காட்சி மூலம் திருச்சி சாலை பாதுகாப்பு அலகு கோட்டப் பொறியாளர் புவனேஸ்வரி அறிவுரை வழங்கினார்.

    • முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
    • அங்கி அணிவகுப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.செந்தில், பி. பாலகிருஷ்ணன், ஏ.ராமலிங்கம், சி.சுரேந்திரன் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி உயர்நிலைக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களும் ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் ஏறத்தாழ 2 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், அந்த அரசாணையை மதிப்பாய்வு செய்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    அதேநேரத்தில், தற்போதைய அரசு ஊதிய உயர்வுக்காக கொண்டு வந்த அரசாணை 293-ல் சங்கங்கள் கோரிய மாற்றங்களும் மேற்கொள்ளப் படவில்லை. அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைந்த கோரிக்கைகளை அரசுக்கு அளித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்திய பிறகும், அதன் பேரில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    எனவே, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 16-ந் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை முன்வெள்ளை அங்கி அணிவகுப்பு பேரணி நடத்துவது என அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அதில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றனர்.

    • 100 நாள் வேலைக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி போராட்டம் நடந்தது.
    • பேரணியாக வந்து வங்கி முன்பு பாத்திரங்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    பூதலூர்:

    பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பூதலூர் வடக்கு ஒன்றிய பகுதியில் பல வாரங்களாக வழங்கப்படாமல் இருக்கும் 100 நாள் வேலைக்கான ஊதியத்தை வழங்க கோரி திருக்காட்டுபள்ளியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை முன்பு கஞ்சி காய்ச்சும் நூதன போராட்டத்தை நடத்தினர்.

    பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருக்காட்டுபள்ளி காவிரி ஆற்றின் கரையில் இருந்து நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை முழக்கியபடி பேரணி யாக வந்து வங்கி முன்பு பாத்திரங்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் கட்சியின்மாவட்ட செயற் குழு உறுப்பினர் பக்கிரிசாமி மாவட்ட குழு உறுப்பினர்கள் காந்தி, கலைச்செல்வி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், பூதலூர் தாசில்தார் மரியஜோசப், வருவாய் ஆய்வாளர் சிவசங்கர், கிராம நிர்வாக அலுவலர் பூமிநாதன் ஆகியோர் நுதன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பூதலூர் தாசில்தார் மரியஜோசப் அளித்த உறுதியை ஏற்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

    இதனால் வங்கி முன் பரபரப்பாக காணப்பட்டது.

    ×